சண்டேன்னா மூணு! தரூர்! ட்விட்டர்! ஓட்டு இயந்திரம்!

ஒரு வழியாக சுனந்தா புஷ்கர்-சசி தரூர் திருமணம் இன்றைக்கு பாலக்காட்டுக்குப் பக்கத்தில் "மிக எளிமையாக" நடந்தேறிருக்கிறது. சுனந்தா தரப்பில் இருந்து இருபதுபேர் உட்பட மொத்தமே நூறு உறவினர்கள் மட்டும் தான் அழைக்கப் பட்டிருந்தார்களாம்! அதைவிட அதிசயமாக, ஒரு முன்னாள் மத்திய அமைச்சர், சிட்டிங்  எம் பி திருமணத்திற்கு வெறும் இருபத்தைந்தே போலீஸ்காரர்கள் தான் காவலுக்கு இருந்தார்களாம்! 

இதுவே தமிழ்நாட்டில், ஒரு சிட்டிங் அல்லது முன்னாள் ஒண்ணரை அணா வார்டு கவுன்சிலர் வீட்டுத் திருமணமாக இருந்திருந்தால்..........!

இரண்டு பேருக்கும் இது மூன்றாவது திருமணம் என்பதும் எனக்கு 54 உனக்கு 48 என்பதும் நினைவுக்கு வந்தால் இந்தத் திருமணம் மிக மிகத் தனிப்பட்ட, அடக்கமாக, எளிமையாக நடந்ததில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை தான்!

டிவிட்டரில் உங்களுக்கிருக்கும் எட்டு லட்சத்து நாற்பத்தாறாயிரத்து நானூற்று ஐம்பத்தாறு பாலோயர்களில், கொஞ்சம் பேராவது உங்களுடைய நலம் விரும்பிகளாக, வாழ்த்துச் சொல்கிறவர்களாக இருப்பார்கள்! என்ன, துபாய்,  உங்கள் தோழியுடைய துபாய்த் தொடர்புகள் தான் கொஞ்சம் இடிக்கிறது! கொச்சி ஐபிஎல் அணி உரிமைப்பங்குகளை உங்களுடைய தோழி பெற்றதும், அப்புறம் விட்டுக் கொடுத்ததும், மந்திரிப் பதவி பறி போனதும்,  சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கிக் கொண்டு வந்ததும் கொஞ்சம் வேகமாகவே நடந்து முடிந்துவிட்ட சம்பவங்கள்!



Anyhow,   நல்வாழ்த்துக்கள் தரூர்!

ட்விட்டர் தான் அவரைப் பிரபலமாக்கியது, ட்விட்டர் தான் அவரை சர்ச்சைகளில் சிக்க வைத்தது என்றாலும் இன்றைக்குத் திருமண நாள்! அதனால்  தரூரை நல் வாழ்த்துக்களுடன் விட்டு விடலாம்!

அவர் இடத்தை நிரப்ப ஆட்களா இல்லை? 


oooOooo



டிவிட்டரில் சர்வ வல்லமை உடைய கடவுள் என்ற பெயரில் ஒருவர் டிவிட்டியிருக்கும் ஒரு சுவாரசியத்தை மேலே பாருங்கள்! பைபிளும், சாப்ட்வேர் லைசன்சும் ஒன்று தான் என்று சர்வ வல்லமை  உள்ள  கடவுளே  சொல்கிறாராம்! சாப்ட்வேர் லைசன்சையும், பைபிளையும் படிக்காமலேயே கடைசிப்பக்கம் வரை ஸ்க்ரோல் செய்து ஒப்புகை அளிக்கிறோம் இல்லையா, அதனாலேயே இரண்டும் ஒன்று என்பது இந்தக் கடவுளின் வாதம்!


oooOooo



சத்யமேவ ஜெயதே! சும்மா உளா உளா காட்டிக்கு நாங்க சொன்னா, அதை நம்பி உண்மை பேசுவீங்களா?பேசுவீங்களாங்கறேன்!


உண்மையைச் சொன்னால் உடம்பெரியும்!

"Mr. Prasad, managing director of a Hyderabad-based technology firm NetIndia, had taken the help of two other researchers – a Michigan University professor J. Alex Halderman and a Holland-based technology activist Rop Gonggrijp, to demonstrate that EVMs used in India could be tampered by altering small components of the machine.

The researchers had used a genuine EVM in their ‘vulnerability demonstration’ on April 28 and the Election Commission of India had then rejected the claim outright. After video footage of the demonstration showed the serial number of the EVM, authorities found that one of the EVMs in Mumbai collectorate was ‘stolen’ and a case registered in MRA Marg station on May 13."

எலெக்ட்ரானிக் ஒட்டு இயந்திரங்கள் சுத்த சுயம் பிரகாசமானவை! உஜாலா போடாமலேயே வெள்ளையாகத் தான் இருக்கும் என்று அரசும், ஆட்சியாளர்களும்,  தேர்தல் கமிஷனும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அப்படிச் சொல்வது உண்மை இல்லை, அதை டாம்பர் செய்ய முடியும், அதை இஷ்டப்படி செட் செய்து வேண்டிய ரிசல்டுகளைக் காட்ட வைக்க முடியும் என்று உண்மையைச் சொல்கிறேன் என்று கிறுக்குத் தனமாக ஆரம்பித்தால்....?

உண்மையைச் சொல்பவன் சதிகாரன்!

இப்படி ஒரு எம்ஜியார் படப் பாட்டு ஒன்று வருமே நினைவு வருகிறதா? ஆரம்ப வரிகூட, கடவுள் ஏன்
கல்லானான்? மனம் கல்லாய்ப் போன மனிதர்களாலே என்று ஆரம்பிக்குமே!



 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!