Showing posts with label தமிழ்மணம். Show all posts
Showing posts with label தமிழ்மணம். Show all posts

சீட்டுக் கட்டு ராஜா! ராஜா! சரிஞ்சு போனா லேசா லேசா?

2008 இல் வெளியே தெரிய வந்த அமெரிக்க வங்கித்துறை, நிதித்துறைச் சீரழிவு, இன்னும் எத்தனை நாட்டுப் பொருளாதாரங்களைச் சாய்த்துவிட்டு, ஓயப்போகிறதோ தெரியவில்லை. 
 
நீ முதலில் நுழை! நான் மிச்சத்தை முடிக்கிறேன்! அதுதான் இந்த நீ பாதி-நான் பாதியோ?
அமெரிக்க வங்கித்துறையின் பேராசை எப்படிப்பட்டது என்பதை முந்தைய பதிவுகளில் கொஞ்சம்  பார்த்திருக்கிறோம்.

சென்ற வருடக் கடைசியில் , துபாய் கடன் நெருக்கடியாக வெளிப்பட்டது.  துபாய் இன்னமும் நெருக்கடியிலிருந்து
மீளவில்லை.அந்த நேரத்திலேயே, கிரேக்க நாடு சந்தித்துக் கொண்டிருந்த பிரச்சினை ஓரளவு தெரிந்திருந்தாலும் முற்றி வெடிக்கிற சூழ்நிலைக்கு இப்போது வந்திருக்கிறது. 
கிரீஸ் நாட்டுடன் இந்தச் சீரழிவு நிற்கப் போவதில்லை. ஸ்பெயின், போர்ச்சுகல், ஐரிஷ் அரசுகளும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிற சீக்காளிகளாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சீரழிவு இன்னும் எங்கெங்கெல்லாம் பரவுமோ என்பது தெளிவாகப் புரியவில்லை.

கிரீஸ், தற்போது சந்தித்து வரும் பிரச்சினைக்கு முக்கியமான காரணங்களாக  கோல்ட்மன் சாக்ஸ் என்ற அமெரிக்க வங்கி, கிரேக்க அரசியலில் நிலவும் ஊழல், திறமையற்ற அரசு நிர்வாகம், வரி ஏய்ப்பு செய்பவர்களைத் தொடக் கூட முடியாத பலவீனம்  என்று போய்க் கொண்டே இருக்கிறது.சென்ற  வாரம் கிரீஸ் நாட்டில் போராட்டம் வெடித்தது. ஐரோப்பிய  யூனியனில் உள்ள நாடுகள் உதவத் தயங்கின. இப்படி ஒரு இடியாப்பச் சிக்கலில் சிக்க வைத்த அமெரிக்க கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனத்தின் மீது அமெரிக்க பெடரல் அமைப்பு விசாரணை மேற்கொண்டிருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன. 


கிரீஸ் நாட்டின் கடன் பத்திரங்களை வைத்து வர்த்தகச் சூதாட்டம் நடத்திய அந்த நிறுவனம், கிரீஸ் அரசின் கடன் எவ்வளவு என்பதை மறைக்கவும் உடந்தையாக இருந்திருக்கிறது என்ற குற்றச் சாட்டு, மேம்போக்காக ஒரு செய்தியாகத் தெரியலாம். ஆனால், அமெரிக்க நிதித்துறையின் பேராசைக்கு, லட்சக்கணக்கான மக்கள் பலியாக வேண்டியிருக்கிறது, நடுத்தெருவுக்கு வர வேண்டியிருக்கிறது என்பதைக் கொஞ்சமாவது புரிந்துகொள்ள முடிந்தால், செய்திக்குப் பின்னால் உள்ள கோரம் தெரியும். 
 
இப்ப என்ன செய்வீங்க? இப்ப என்ன செய்வீங்க! 
மத்தவங்க செஞ்சாத்தான் தப்பு! அமெரிக்கா செஞ்சா..?

Goldman Sachs appears to be testing the limits of its special talent for avoiding all accountability following revelations of its role in exacerbating the Greek debt crisis.


கொஞ்சம் எங்கேயோ என்னமோ நடக்கிறது என்றில்லாமல், கவனித்துப் பார்த்தோமென்றால்  கிரீஸ் நாட்டில் உள்ளதை விடப் பெரிய ஊழல் நிறைந்த அரசியல், திறமையற்ற, செயல்பட முடியாத அரசு நிர்வாகம், வரி வசூலில் மெத்தனம்,. அல்லது ஏய்ப்பதற்கு மட்டுமே துணை நிற்கும் அரசு ஊழியர்கள் இதெல்லாம் இந்தியாவிலும் தீராத வியாதியாக இருக்கிறது. கிரீஸ் அளவில்  சிறிது தான் என்றாலும், அதன் கடன் சுமையும் இந்தியாவின் கடன் சுமையும் சற்றேறக் குறைய சமம் தான்! 12%

The European Union (EU) is shocked--shocked I tell you!--that Greece used financial engineering to qualify for admission. Exactly how did they think that weaker countries managed to meet the requirements? 

Now the EU is concerned that geeks used their knowledge of Greece's hidden debt (and bailout negotiations) to manipulate financial markets for their own profit.


A few years ago, Greece engaged in derivatives transactions which essentially gave it a disguised loan, a gift from geeks. 

Greece may or may not have had plans to invest the money to create national wealth instead of say, blowing it all on national bling. Either way, Greece used its national credit card in a futile attempt to keep up with the EU Joneses.

ஐரோப்பிய யூனியன் என்று ஆரம்பமானது பதினோரு வருடங்களிலேயே பரிதாபமான தோல்வியாகவும் ஆகிவிடுமோ!? தங்களுடைய பிரச்சினைக்கு முன்வந்து உதவவில்லை என்று, கிரேக்க அரசு ஜெர்மனி மீது பாய்ந்திருக்கிறது. கடைசியாக, ஜெர்மனி, பிரான்ஸ் முதலான நாடுகள் கிரேக்க அரசின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம் என்ற தகவல்களும் வந்திருக்கிறது. துபாய் நெருக்கடியில், அபுதாபி தலையிட்டு உதவ முன்வந்த மாதிரி! இதுவுமே கூட தற்காலிகமான நிவாரணமே தவிர, பிரச்சினையை முழுக்கத் தீர்க்கப் போவதில்லை.  கொஞ்சம் விரிவாகத் தெரிந்து கொள்ள இங்கே.


டாட்டாக்கள், சீக்காளியாகிப் போன கோரஸ் ஸ்டீல் மில்லை வாங்கினார்கள். பொதுமக்களிடமிருந்து, வங்கிகளிடமிருந்து  எக்கச் சக்கமான கடனைப் பெற்று இந்த அக்விசிஷன் நடந்தது. ஆஹா! இந்திய நிறுவனங்களும் சர்வதேசச் சந்தையில் பங்காளிகளாகிப் போனோம் என்று பெருமிதப் படக் கூடிய விஷயமா அல்லது இன்னொரு படுகுழியில்  சிக்கிக் கொண்டதாக ஆகிப் போய் விடுமா
என்பதுமே இன்னமும் தெளிவாகவில்லை.

கிரீஸ், தொடர்ந்து ஸ்பெயின், போர்ச்சுகல், அயர்லாந்து என்று வரிசையாக சீட்டுக் கட்டு சரிவதைப் போல ஐரோப்பியப் பொருளாதாரங்கள் சரிந்து வரும் நிலையில் இந்தியா எந்த விதப் பாதிப்புமே இல்லாமல்,தனித்து நின்று விட முடியுமா? 


இந்திய அரசு வெளிப்படையாக எதையும் இதுவரை சொல்லவில்லை. சொன்னதும் இல்லை. முன்னெச்சரிக்கையாக ரிசர்வ் வங்கி எந்த நடவடிக்கையையும் மேற்கொண்ட மாதிரியும் தெரியவில்லை.

இந்த லட்சணத்தில் பட்ஜெட் அறிவிப்பில் இந்திய சந்தையை, திறந்து வைக்கப் போவதாக நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். ஏற்கெனெவே திறந்து விட்டதெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்ற சிந்தனையே இல்லாத முடிவாகவே இருக்கிறது.


மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் தினமணியில் வெளியான தலையங்கம் ஒன்றை வைத்து ஒரு பயனுள்ள விவாத இழை ஓடிக் கொண்டிருக்கிறது. 

மரபணு மாற்றம் செய்யப் பட்ட விதைகளைக் குறித்தது என்றாலும் கூட, சுதந்திரம் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தை எழுப்பக் கூடியதாக இருக்கும் பிரச்சினை. அங்கே கூட, மிகவும் படித்தவர் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் வந்து சம்பந்தமே இல்லாத விஷயங்களைத் தொட்டு, குறுக்குச் சால் ஓட்டுவதையும் பாருங்கள். அது, இது, பட்ஜெட் எல்லாமே சம்பந்தமுள்ளவைதான்!

சுதந்திரமாகச் சிந்திக்க நமக்குத் தெரியுமா? என்ன செய்யப் போகிறோம்? எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? இந்த அடிப்படைக் கேள்விகளை முன்வைப்பவை தான்!

பட்ஜெட் பற்றிய முந்தைய பதிவில், உங்களுடைய கருத்துக்களைக் கேட்டிருந்தேனே! கருத்துக்கள், பதிவின் உள்ளடக்கத்தை ஒட்டினது மட்டும், வரவேற்கப் படுகின்றன.





தமிழ் மணமும், தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுப் பெருநாளும்!

 படங்களின் மீது சொடுக்கினால் எளிதாகப் படிக்கலாம்!
இரண்டு முக்கியமான தருணங்களின் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள், இணையத்தில் வெகு ஜோராக நடந்து கொண்டிருக்கின்றன. ஒன்று தமிழின் முதல் வலைப்பதிவுத் திரட்டியான, "தமிழ்மணம்" ஐந்தாண்டுகளை சென்றஇருபத்துமூன்றாம் தேதி நிறைவு செய்து, ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

திரட்டி வகைகளில், தமிழில் முதல் முயற்சி என்பதோடு, இன்றைக்கும் நீடிக்கும் முயற்சி என்பதால் தமிழ் மணம் குழுவை, இந்தத் திரட்டியோடு எந்த வகையிலும் சம்பந்தப்படாதவன் என்றாலும், அன்புடன் வாழ்த்துகிறேன்!

தமிழ்மணத்தின் இன்றைய நிர்வாகக் குழுவில் எனக்குத் தெரிந்த ஒரே பெயர் முனைவர் நா.கணேசன் அவர்கள், என்னை அவர் அறியார். ஒரு வலைக்குழுமத்தில் தமிழார்வத்தோடு பங்கு கொண்ட நாட்களில் இவரது எழுத்துக்களையும், பகிர்ந்துகொண்ட விஷயங்களையும் படித்திருக்கிறேன். அவ்வளவுதான் நான் அவரை அறிந்தது. தமிழ்மணத்தை அறிந்த, அதன் நிர்வாகிகளுள் ஒருவரான முனைவர் நா. கணேசன் எழுதுகிறார்:

"‘தமிழ்மணம்’ திரு. காசி ஆறுமுகத்தால் உருவாக்கப் பட்டு இன்றுடன்
ஐந்தாண்டுகள் நிறைவாகி்ன்றன. இணைய மென்பொருள் தொழில் நுட்ப ரீதியில் தமிழ்மணம் தமிழுக்கு மட்டுமல்லாமல் வலைப்பதிவுலகிற்கே ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஒரு முக்கிய பங்களிப்பு. வலைப்பதிவுகளையும், மறுமொழிகளையும் திரட்டி வகைப்படுத்தி வாசகர்களுக்கு அளிப்பதில் தமிழ்மணம் தன்னால் இயன்றவரை முயற்சி செய்கிறது.

வரும் தமிழ் மீடியா இண்டர்நேசனல் குழுவினரும் இதை தன்னார்வத்தொண்டாகக் கருதி நேரத்தையும் பொருளையும் செலவழித்து வருகிறோம். ஏற்கனவே நாங்கள் சொல்லி வந்துள்ளது போல் தமிழ்ச்சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் தங்களுக்குள்ளே மாறுபட்ட கொள்கைகளும், நோக்கங்களும், செயல்பாடுகளூம் உடையவர்களாக இருந்தாலும் தங்களுடைய கருத்துக்களை சுதந்திரமாகப் பரிமாறிக்கொள்ளக் கூடிய தளமாக இருக்க வேண்டும் என்று தமிழ்மணம் கருதுகிறது. இந்த நோக்கத்தில் உறுதியாக இருந்து தொடர்ந்து செயல்படுவோம் என்று மீண்டும் உறுதியளிக்கிறோம். தொடர்ந்து புரிந்துணர்வுடன் எங்களுடன் ஒத்துழைத்து தமிழ் வலைப்பதிவுலகினைச் செழுமைப்படுத்தி வரும் லைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி."

--தமிழ்மணம் நிர்வாகம் 



தொடர்ந்து எழுதியது தான், வெள்ளத்தில் பிள்ளையார் செய்து, அதன் வயிற்றைக் கிள்ளியே நிவேதனம் செய்த கதையாக, கொஞ்சம் விசித்திரமாகவும் இருக்கிறது.
"இந்த திரட்டிச் சிட்டத்தை அமைத்த‌ பொள்ளாச்சி காசி ஆறுமுகம் இந்த வார விண்மீன்!"
தமிழ்மணம் திரட்டியைத் தனியொரு நபராக, நிரலெழுதி, முதல் இரண்டாண்டுகள் நிர்வகித்தவரை கௌரவிக்கிற முறை இன்னமும் கௌரவமாக இருந்திருக்கலாம்! இப்படி, தமிழ்நாடு அரசு வழங்குகிற விருது மாதிரி, எல்லோருமே "கலை மாமணி" தான் என்றமாதிரி இருந்திருக்க வேண்டாமே என்ற எண்ணம் எழுந்தது.
இணையத்தில் தமிழ்மணம் அளவுக்கு ஆரவாரம், தொடர்பதிவுகள் என்று இல்லாவிட்டாலும் , தமிழ் நாட்டில், சென்னையில் இன்று இருபத்தேழாம் தேதி தொடங்கி, வருகிற ஞாயிறு வரை தமிழ் மரபுப் பெருநாளாகக் கொண்டாடும் நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

அவ்வை துரைசாமிப் பிள்ளையவர்களது பெயரன், முனைவர் அவ்வை கண்ணன் நடராசன், சத்தமே இல்லாமல், தமிழ்ப்பணியாற்றிவரும் தமிழ் மரபு அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிறைந்து ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தருணத்தைத் தமிழ் மரபுப் பெருநாளாகக் கொண்டாடலாமே என்ற தன் ஆசையை, மின்தமிழ் குழுமத்தில் சில நாட்களுக்கு முன்னாள் வெளியிட்டிருந்தார். 

கிட்டத்தட்ட எண்ணூறு உறுப்பினர்களைக் கொண்ட மின்தமிழ் வலைக் குழுமம், ஒருமித்த குரலோடு ஆசைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வேலையில் மும்முரமாக இயங்கி, இன்று தொடங்கி வருகிற ஞாயிறு வரையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது.

தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆண்டுவிழா குறித்த செய்திகளை


இங்கேமற்றும் இங்கே விரிவாகப் படிக்கலாம்!

தமிழ் மரபுக்கட்டளையின் நிறுவனர்களில் ஒருவரும், வலைத்தள நிர்வாகியுமான திருமதி சுபாஷினி தமிழ்மரபு அறக்கட்டளையைப் பற்றிச் சொல்வதை இங்கே சொடுக்கிக் கேட்கலாம். 


தமிழ் மணம் என்று ஒன்று உருவானதற்கு முன்னமேயே தமிழ் வலைக் குழுமங்கள், தமிழ் நெஞ்சங்களை ஒன்றிணைக்கும் பணியில், திரட்டுகிற உந்துசக்தியாக இன்றைக்கும் வலைக் குழுமங்கள் பங்காற்றிவருகின்றன.  

திரட்டிகளின் பணியை விட, மரபைப் பேணுகிற, பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்கிற பணியை, ஆரவாரமேதும் இல்லாமலேயே, மூன்று தனி நபர்கள் முன்கையெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திருமதி சுபாஷினி, முனைவர் நா.கண்ணன், முனைவர் கல்யாணசுந்தரம் மூவரும் தங்களது நேரத்தையும், பொருளையும் செலவிட்டுக் கொண்டு அரும்பணி செய்து கொண்டிருக்கிறார்கள். அதிக விவரங்களை இங்கே பெறலாம்.
மூவருடன் வேறு பல நல்ல உள்ளங்களும் இணைந்தன.. 
நூறு ஆயிரம் என்று நினைத்து விடாதீர்கள்! இன்னமும் பத்துப் பன்னிரண்டு பேர்களைத் தாண்டவில்லை!  
அதனால் என்ன? ஆர்வம் இருந்தால் தனி நபர்களே இங்கே சரித்திரம் படைத்து விட முடியுமே!
தமிழில் கிடைக்கும் பழைய அறிவுச் செல்வங்களை, டிஜிடைசெஷன் என்ற கணினிமயமாக்கிச் சேமித்து வைக்கும் பணியை எந்த பாராட்டு, புகழ், எதையுமே எதிர்பாராமல், செய்துகொண்டிருக்கும் நல்ல உள்ளங்கள் எண்ணிக்கை, இன்னமும் கூடவேண்டும், மற்றைய குழுமங்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாக, இந்த மண் பயனுறவேண்டும் மரபுகள் பேணிக் காக்கப் படவேண்டும் என்ற ஒரே சிந்தையோடு செயல்படும் தமிழ் மரபு அறக்கட்டளைக்கு ஆண்டுவிழா!
30/08/2009, வருகிற ஞாயிறன்று, ஆண்டுவிழாவில், தமிழுக்குத் தொண்டாற்றி வரும் மூவருக்கு "மரபுச் செல்வர்" என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பிக்க இருக்கிறார்கள்.

முதலாவதாக, எழுத்தாளர் கே ஆர் நரசையா 
 
அடுத்து, முனைவர் நா.கணேசன், அவர்கள் 
 
அடுத்து எழுத்தாளர் வி.திவாகர் அவர்கள் 
 
மரபுக்குப்பெருமை சேர்க்கும் விழாவை நடத்துகின்ற நல்ல உள்ளங்களை, வணங்குகிறேன்! மரபுச் செல்வர்களாக ஏற்கெனெவே இருந்தபோதிலும் கூட,விழா எடுத்து அடையாளம் காட்டப்படும் மூவருக்குமே மனமுவந்த வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மரபை மதிக்கும் ஒவ்வொரு தமிழனும், தமிழை நேசிப்பவருமே செய்ய வேண்டியது மரபைப் பேணுவதுதான், இல்லையா!
தமிழ் வாழ்க! தமிழ் மரபு வாழ்க!  
அறக்கட்டளையின் முன்னோடிகள் வாழ்க!
மரபுச் செல்வர்களாக மகுடம் சூடும் நல்ல இதயங்கள் வாழ்க! வாழ்க!!

ஆறு மனமே ஆறு! கேள்விக்கும் கதையுண்டு ஆறு!


 சமயத்துல நம்மைப்பத்தி நாம நெனச்சிட்டிருக்கிறதே (நாம தான் எல்லாங்கிற மாதிரி),பிரச்சினையாப் போய்விடுவதும் உண்டுங்க!

பீர்பால் கதைகள், நம்ம ஊர் தெனாலி ராமன் கதைகள், மரியாதை ராமன் கதைகள் மாதிரியே, கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் வாழ்வியல் உண்மைகள் என்று கலந்து கூட்டாஞ்சோறு மாதிரியே, படிக்க சுவையாக இருக்கும்! கேட்டிருக்கிறீர்களா?

இணையத்துப் பக்கம் வந்தோமா, ஏதோ பத்து மொக்கையைப் படிச்சோமா, கை பர பரன்னதும், நாலு மொக்கையைப் பின்னூட்டமாகப் போட்டோமான்னே பொழுது சரியாப் போயிடுது, இதுல எங்க சாமி அதுக்கெல்லாம் நேரம் அப்படீன்னு வருத்தப் படற, படாத வாலிப,வயோதிகப் பதிவர்களுக்காக, ஒரு சின்னக் கதை
 
தமிழ்மணம் கமழும் கதை! வாசனை தூக்கல், மணம் கமழும் பதிவு, இப்படி நாமே சொல்லிக்கலைன்னா எப்படி
 
யாரோ ஒரு கணேசனோ, முருகனோ வந்து, பக்தா உன் பொறுமையை 'மொக்கினோம்', இந்தவார நட்சத்திர மொக்கை நீ தான்னா சொல்லப் போறாங்க? இல்லேன்னா உங்க பதிவை 4000, 4500, 5000,5500, 6000, 6500 ன்னு ரவுண்டு கட்டி, இந்தப்பக்கம் பள்ளப்பட்டி முசல்மான்கள் நடத்துற கடைகள் வாசல்ல சின்னப்பசங்க ஒக்காந்து "வாங்க சார் வாங்க! வாங்க அம்மா வாங்க"ன்னு கூவிக் கூவி அழைச்சுக் கையப்பிடிச்சு கடைக்கு உள்ளார இழுத்துக்கிட்டுப்போற மாதிரி, அவங்களே ஜோதியில கலக்கச் செய்யவா போறாங்க?! செய்யறாங்க! எப்படிச் செய்யறாங்கன்றதுல தான் சூட்சுமமே!

திரட்டும் புரட்டும் பத்தி அப்புறமாப் பாத்துக்கலாம்! மொதல்ல, இப்பக் கதை!

அக்பருக்குத் தன்னோட ஆட்சியில மக்களெல்லாம் எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க ஒரு நாள் ஆசை வந்துச்சாம். தினசரி தனக்கு சவரம் செய்கிற ஒத்தன்கிட்ட கேட்டாரு.ராஜாவுக்கு சவரம் செய்கிறவனுக்குத் தங்கக் காசுல்ல கிடைக்கும்! உடனே அவன் சொன்னானாம்: "ராஜா, ராஜா! உங்க ஆட்சியில சமத்துவம் மலருது! வேற என்னென்னவோ எப்படி எப்படியோ வளருது!மக்களெல்லாம் நீங்க ஊட்டி விட்ட இலவசங்களில் அப்படியே மெய் மறந்து, வாயப் பொளந்து, மூடக் கூட முடியாம அவ்வளவு சந்தோஷமா இருக்காங்க! ஒரு கொறையுமில்லே! என் தருமநிதியே !தயாநிதியே! துரைநிதியே!"

தன்னுடைய ஆட்சியில் கூட  மக்கள் இவ்வளவு சவுக்கியமா இருக்காங்களான்னுட்டு, ராஜாவுக்கோ பெருமை தாங்கவில்லை! சவரம் செய்ததற்கு கூலி போக, இப்படி விவரம் சொன்னதுக்காகவும் கூடுதலாத் தங்கக் காசை அள்ளி அள்ளி வீசினாராம்! தங்கக் காசு கூடக் கெடச்சா, என்ன வரும்? அப்படி வர்றதுக்கு, இன்னிக்குப் பேர் இலவசம்! நாகரீகமாச் சொன்னாப் புள்ளிவிவரம்!
உண்மையை உடைச்சுச் சொன்னாக் கலவரம்!

ராஜாவுக்குப் பெருமை தாங்க முடியாம, பீர்பால் கிட்ட சொன்னாராம்: "பீர்பால் நீயும் இருக்கியே, எப்பப் பாத்தாலும் அது இருந்தா இது இல்ல, இது இருந்தா அது இல்லைன்னுட்டு! பாரு, எனக்கு சவரம் செய்கிற நாவிதனுக்குத் தெரிந்தது கூட உனக்குத் தெரியலையே?அய்யகோ என் தாழ்ந்த தங்கத் திருநாடே!"


நம்ம பீர் பால் இருக்காரே அந்த ஆள் மகா குசும்பு, லொள்ளு, கூடவே புத்தியும் இருக்கறவர். ராஜா கிட்ட உடனே சொன்னா ஏறாதுன்னு, "எனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்க, நான் தீர விசாரிச்சுட்டுச் சொல்றேன்" அப்படீன்னு சொன்னாராம்.


அக்பருக்கு இந்த மட்டிலாவது பீர்பால் எதுத்து விவரம் சொல்லாம, எதிர்க்கேள்வி கேக்காம ஒப்புத்துக்கிட்டாரேன்னு சந்தோஷம்! சரின்னுட்டு, டைம் கொடுத்தார்.


உடனே, பீர்பாலும் அந்த நாவிதனை ஆளை விட்டு என்ன செய்கிறான்ன்னு கண்காணிக்க ஏற்பாடு செஞ்சார். ராஜாவுக்கு மனம் குளிர்ற மாதிரியே, எடுப்புத் தொடுப்பாகச் சொல்லியே நெறையத் தங்கக் காசு சேர்ந்துபோச்சு. காசை வச்சு என்ன பண்றதுன்னு கூடத் தெரியலை! தினசரி, ராத்திரி எல்லாரும் தூங்கினப்புறம், தங்கக் காசுகளை எடுத்து எண்ணுறதும், அடுக்கி வச்சு விளையாடுறதுமாகவே பொழுது போக்கினதையும் தெரிஞ்சுகிட்டார். ஆறாம் நாள், நாவிதன் சேத்துவச்சு, பாத்துபாத்துப் பூரிச்சுகிட்டிருந்த தங்கக் காசை ஆளைவைத்து லபக்கிட்டு வரச் செய்தாராம்.


ஏழாம் நாள், அக்பர் சவரம் செய்து கொள்வதற்கு முன்னாலேயே பீர்பால் போயி, "ராசா ராசா! இன்னிக்கு உங்க நாவிதரு என்ன சொல்றாருன்னு கேளுங்க"ன்னு சொன்னாராம்.


அதேபடிக்கு, அக்பரும் நாவிதன்கிட்ட "நம்ம ஊர் நிலவரம் எப்படி? மாதம் மும்மாரி பெய்கிறதா? காத்தடிச்சு காத்தடிச்சு ஏத்தி வச்ச தீபங்களில் இருட்டு இல்லாம [இன்னிக்கு பவர்கட்னு ஏதோ சொல்லிக்கிறோமே அந்த மாதிரி] இருக்கா?" அப்படீன்னு வரிசையா, நம்ம வால்பையன் மாதிரித் தொடர் கேள்விகளாக க் கேட்டாரு.


தமிழ் வலைப் பதிவர்கள் மாதிரி, வேறென்ன போனாலும் கவலையில்லே, ஆஹா! வடை போச்சேன்னு மட்டும் இருக்க அந்த அப்பாவி நாவிதனுக்குத் தெரியல. சேத்து வச்ச தங்கக் காசெல்லாம் போச்சேன்னு வருத்தம், கோபம், சோகம், ஏமாற்றம் இப்படி எல்லாம் சேர்ந்து புலம்பினான்:


"என்ன ஆட்சி நடக்குது? ஏழை எளியவர்களுக்குக் கொஞ்சம் கூடப் பாதுகாப்பே இல்லை.


சமத்துவம் பேசி இருக்கறதையும் பிடுங்கிக் கொள்கிற ஆட்சியெல்லாம் ஆட்சியா? பாதுஷான்னு இங்க ஒருத்தர் இருக்காரா? பாத்துகிட்டு சும்மா இருக்காரா?மானாடும், மயிலாடும்னாங்க! நரியும் எலியும் தான் ஆடுதா இந்த ஆட்சியில, நா சொல்லலே, சனங்க பேசிக்கறாங்க! ஊரெல்லாம் ஒரே ஏச்சு! ஒரே அழுகை!" ன்னு கண்ணீரோட கதறினானாம்.

அக்பருக்கு ஒண்ணும் வெளங்கலை. நேத்து வரைக்கும் இந்த ஆட்சியில மானாட, மயிலாடன்னு சிங்கமும் நரியும் கூடி எலிகளும் பூனைகளும் கூட சமத்துவமா இருக்கறதாச் சொன்னவன், இன்னைக்கு இப்படிக் கேக்கறானேன்னு அதிர்ச்சி. என்ன ஆச்சுன்னும் தெரியல, எப்படிப் பதில் சொல்றதும்னும் புரியல. வழக்கம் போல சவரம் பண்ணி முடிச்சதும் ரெண்டு தங்கக் காசை வீசிவிட்டு, நீ போ, நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டு, பீர்பாலைக் கூப்பிட்டு அனுப்பிச்சாராம்.


பீர்பால் வந்தாருங்க! அக்பருக்கு அடக்க முடியவில்லை, புலம்ப ஆரம்பிச்சிட்டார்:



"நேத்து வரை உங்க ஆட்சி மாதிரி வருமான்னான். சாதனைத் திலகம், சமத்துவ நாயகன்னு சொன்னான். உங்க ஆட்சியில் மட்டும் தான் ஏழ்மையின் சிரிப்பில் இறைவனைக் காண முடிஞ்சதுன்னு வேற சொன்னான். இப்ப எல்லாத்தையுமே மாத்திச் சொல்றான்."


"பீர்பால், பைத்தியம் பிடிச்சது அவனுக்கா, எனக்கான்னே தெரியலையே! உனக்காச்சும் தெரியுதா சொல்லு."


பீர்பால் இடையில் நடந்த கதையைச் சொல்லி விட்டு, ஒவ்வொருவனும் தன்னை வைத்தே உலகத்தை எடை போடுகிறான். இந்த நாவிதனும் தான் சௌகரியமாக இருந்ததாக நினைத்தபோது எல்லோருமே அப்படி இருந்ததாகவும், தன்னுடையது களவு போனதும், ஊரே திருடர்களால் நிறைந்து போனமாதிரியும் சொன்னான் என்பதைச் சொன்னார்.


அக்பருக்கு அப்பவும் நம்பிக்கை வரலே. பாத்தார் பீர்பால்.

"கேப்பையிலே சுவை மணம் காரம் நெறைஞ்ச நெய் வடியுதுன்னு சொன்னாக்க, கேக்கறவனுக்கு எங்க போச்சு புத்தி? கேக்கறவன் கேணையனா இருந்தாக்க, கேப்பையில் மட்டுமில்ல, பாக்கறது எல்லாத்துலயுமே நெய் வடியும்!"அப்படீன்னு பீர்பால் சுருக்குன்னு சொன்னதும் தான், இதுக்கு மேலயும் கேள்வி கேட்டா தனக்கு மண்டையில ஒண்ணும் இல்லேங்கிற அரசாங்க ரகசியம் வெளியாயிடும்னு ராசா கப்சிப்னு ஆயிட்டாராம்!

கதை முடிஞ்சது, கத்தரிக்காய் காச்சுது, முத்திச் சந்திக்கும் வந்தாச்சு!

எதுக்கு இந்தக் கதை, என்ன கத்தரிக்காய், காய்ச்சு, முத்தி, சந்தைக்கு வந்ததுன்றீங்களா?
கோவிகண்ணன்அங்க பாத்துட்டு  நச்சுன்னு ஒரு பதிவு இங்க போட்டாருங்களா?

நாமளும் அங்கபோய் சும்மா இருக்காம, கருத்து கந்தசாமியா கடமையை  செய்துவிட்டு வந்தோமுங்க. சொன்னதே சிலது தான்! பலதில்  உடன்பட முடியவில்லைன்னு சொல்லிட்டாருங்கோ!  


கிருஷ்ணமூர்த்தி சொன்னது…
/பல கருத்துக்களோடு ஒத்துப்போக முடியவில்லை/ எனக்கும் தான்! மொக்கை போடுவதிலும், வெறுப்பை வளர்ப்பதிலுமே இது வரை பெரும்பாலான தமிழ் வலைப்பதிவுகள், அவைகளையே முக்கியப்படுத்தி, பிரபலப்படுத்திய திரட்டிகளைக் கவனித்துக் கொண்டு இருப்பவன் என்ற வகையில், எனக்கு நிறைய கருத்துக்கள் உண்டு. இணையத்தைப் பயிற்றுவிக்கப் போகிறேன் என்று கிளம்பியிருப்பவர்களையும், அவர்களது செயல்பாடுகளையுமே கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட திரட்டியில் இணைவது அல்லது இணையாமல் இருப்பது என்பது என்னுடைய சொந்த விருப்பத்தை மட்டுமல்ல, அந்தத் திரட்டி நிர்வாகம் எப்படி நடந்துகொள்கிறது என்பதையுமே பொறுத்துத் தீர்மானிக்கப்படுகிறது! உங்களுடைய சேவை மாஜிக் மிகவும் நன்றாக இருக்கிறது!//


நியூடன் விதிப்படி அதுக்கு ஒரு எதிர்வினை இல்லாமப் போச்சுன்னா நியூடன் ஐயா புகழ் என்னாகிறது?

அதுதாங்க இது.....பேச்சுப் பேச்சாத் தான் இருக்கோணும் மக்களே! மேல விழுந்து பிராண்டப்படாது!