Showing posts with label எங்கிருந்து தொடங்குவது. Show all posts
Showing posts with label எங்கிருந்து தொடங்குவது. Show all posts

மொட்டைத்தலைக்கும் வால்பையனுக்கும் என்ன முடிச்சு?

ஒரு திரைப்படம் காங்கிரஸ் கட்சியை என்ன பாடு படுத்தி இருக்கிறது என்பதை இந்த ட்ரெயிலர் பார்த்த பிறகுதான் புரிந்தது. இந்திராவைப் பற்றிப் படம் எடுத்தாலும் மிரள்கிறார்கள். நரேந்திரமோடி குறித்து படமெடுத்தாலும் பொருமித் தடை கேட்கிறார்கள்! படிப்பு வாசனையற்ற சோனியா G பிரதாபங்களைப் பற்றி முன்னே இந்தப் பக்கங்களில் எழுதியது இது!   காங்கிரசை இப்போது ஒரு சிவப்புச் சேலையும் சேர்ந்து மிரட்டிக் கொண்டிருக்கிறது!   நட்வர் சிங் சுயசரிதை எழுதப்போகிறார் என்றவுடனே, அவரை சமாதானம் செய்ய சோனியாவும் பிரியங்காவும் அவரது வீட்டுக்கே போய் சமாதானம் பேசிய கதையும் இந்தப்பக்கங்களில் ஏற்கெனெவே பேசப்பட்ட விஷயம்தான்!


இந்த ட்ரெய்லரிலோ அல்லது முழுப்படத்திலோ அப்படி காங்கிரஸ் அஞ்சுகிற அளவுக்கு என்ன இருக்கிறது? இதே கேள்வியைத்தான் அடுத்தவீடு! கேரளா தெலங்கானா ஆந்திரா! பதிவிலும் கூட லட்சுமியின் NTR திரைப்படத்தை ஆந்திராவில் திரையிட விடாமல் உள்ளடி வேலைகள் செய்ததைத் தொட்டு நேற்று எழுதி இருந்தேன்! இந்தப் புள்ளிகள்தான் நேற்றைய நாட்களில் கருத்துசுதந்திரம் பறிபோச்சு,  விருதுகளைத் திருப்பிக்  கொடுப்பது என்றெல்லாம் முழங்கினார்கள் என்பதும் ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!

லயோலான்னு தானே சொன்னான்! லோலாயி ஆக்கிப்புட்டாங்களே! இப்படிப் பதிவெழுதிய நேரமோ? லயோலா கல்லூரி கருத்துக் கணிப்புக்கும் கல்லூரிக்கும் தொடர்பில்லை என்று மறுப்பறிக்கை வெளியிட்டிருக்கிறது. மாட்டிக்கொண்டால் மறுப்பு வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிற லயோலா மெய்யாலுமே லோலாயி தான்!

     


இப்போதெல்லாம் ஒரு இருபது வருடம் பிராக்டிஸ் செய்யும் எந்த டாக்டரும் (அதுவும் கணவன் மனைவி இருவருமே டாக்டர்களாக..) குறைந்தது நான்கு கார், மூன்று வீடுகள், பெரும் பந்தா இல்லாமல் பார்க்க முடியுமா..?
ஆனால், டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், மிகச் சாதாரணமாக வாழ்பவர் என்றும், எல்லோருடனும் சகஜமாக பழுகுவதாகவும், யார் வேண்டுமானாலும் அவர் வீடடிற்குச் சென்று எப்போது வேண்டுமானாலும் பார்த்துப் பேசலாம் எனும் அளவிற்கு சிம்பிளானவர் என்றும் கேள்விப்பட்டேன்.
நியூஸில் ஒரு வீடியோ பார்த்தேன் :
தூத்துக்குடியின் ஒரு மார்க்கெட்டில், டாக்டர் தமிழிசை எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் காய்கறிகள் வாங்கி, கவனமாக தான் சுருட்டி வைத்திருந்த 100 ரூபாய் நோட்டைத் தருகிறார்..!
ஏனோ அந்தக் காட்சி, நான் டாக்டர் தமிழிசையைப் பற்றிக் கேள்விப்பட்டது உண்மைதான் என்று நினைக்க வைத்தது..!
^^^^^
நிற்க,
மேல் சொன்ன அந்த வீடியோவை ஒளிபரப்பி, சன் டிவி செய்தி சொன்னது என்ன தெரியுமா..? 
"தூத்துக்குடி மார்க்கெட் ஏரியாவில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த டாக்டர்.தமிழிசை, அங்கே கட்சிக் காரர்களே யாரும் வரவில்லை என்பதால், மனம் நொந்து போய், மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கி, பொழுதைப் போக்கினார்!"
30000 கோடி மதிப்பான சன் டிவி கார்ப்பரேட் ஓனர் தயாநிதி மாறனை கட்சிக்காரனே சுலபத்தில் பார்த்து விட முடியாது.! ஆகாய பந்தா..! தமிழ்நாட்டை உருப்படாமல் அடித்ததில் முக்கால்வாசி சன் டிவி செய்தது.

திமுக, ஏழைகளுக்கான கட்சி என்று நம்புபவன், ஏழையல்ல, முட்டாள்! என்று முகநூலில் ஆணித்தரமாகச் சொல்கிறார் சங்கர் ராஜரத்தினம். 


சற்றுமுன் இந்த வீடியோவைப் பார்த்தேன்! ஒன்றிணைந்த Bank of  Baroda  ஸ்டேட் வங்கி, HDFC வங்கி இவைகளுக்கு அடுத்து நாட்டின் மூன்றாவது பெரிய வங்கியாக உருவெடுத்திருக்கிறது.    

 


பேங்க் ஆப் பரோடாவுடன் விஜயா வங்கியும் தேனா வங்கியும் ஏப்ரல் முதல் தேதிமுதல்  இணைந்து ஒரே வங்கியாக, Bank of  Baroda என்றபெயரில் இயங்க ஆரம்பித்திருப்பதை வங்கி ஊழியர்கள் கூட, கடமைக்கு எதிர்ப்புக்குரல் எழுப்பிவிட்டு ஓய்ந்து விட்டார்கள். ஆனால் வால்பையன் அருண் மட்டும் இதை  என்னவோ 2014 இன் பொருளாதார சீரழிவுக்கு முன்னோட்டம் என்று, சம்பந்தமே இல்லாத BSNL layoff proposal உடன் முடிச்சுப்போட்டு எழுதிக் கொண்டிருக்கிறார். யாராவது அவரிடம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதன் ஊழியர்களாலேயே, தொழிற்சங்கத்தினராலேயே சீரழிக்கப்பட்ட கதையைச் சொல்லி, அதே கதை தொடர வேண்டுமென்கிறாரா என்று கேளுங்களேன்!


       

வெறுப்பு அரசியல்! தங்கள் குற்றங்களிலிருந்து திசை திருப்பவே!

நம்மூர் அரசியல் களத்தில் வெறுப்பு அரசியல் மட்டுமே மிகவம் தூக்கலாக இருப்பதை எப்படிப் புரிந்து கொள்வது? இங்கே இந்த இளைஞர் கொஞ்சம் எளிமையாக எடுத்துச் சொல்கிற காணொளியில் இன்று தான் பார்த்தேன். அரசியலை எப்படிப் பார்க்கப் பழகவேண்டும்? நம்மில் பலருக்கும் அது பிடிபடுவதே இல்லை! அதனால்தான், இங்கே அரசியல்வாதிகள் ஆளுக்காள் அம்பாரம் அம்பாரமாய்க் காதுல பூ சுற்றி விட்டுப் போக நாமும் இடம் கொடுத்துக் கொண்டிருக்கிறோமா என்ன?!
   
மாரிதாஸ்! இந்த ஜனவரியில் பேசியது. இவருடைய முகநூல் பகிர்வுகளை நண்பர்கள் சிலர் கூகிள் பிளஸ்சில் பகிர்ந்து கொண்டதைப் பார்த்திருக்கிறேன். அதைத்தாண்டி அதிகம் அறிந்ததில்லை. இந்த வீடியோவைப் பார்த்த பிறகுதான் இவரும் ஒரு மதுரைக்காரர் என்பதே தெரிய வந்தது. நிறையவே சிந்திக்க வைக்கிற பேச்சு என்பதில் சந்தேகமே இல்லை. இவர் ஒரு புத்தகமும் எழுதி கிழக்கு வெளியீடாக வந்திருப்பதை (ஒருவருடத்துக்கு முந்தையது)  யூட்யூப் தளம் கூடவே எடுத்துக் கொடுக்கிறது. கே டி ராகவன் , நம்மூர் அரசியலில் இந்த வெறுப்பரசியலின் பங்கென்ன என்று இன்னும் தெளிவாகக் குறிப்பிட்டே பேசுகிறார்.
என்ன ஒரே பிஜேபி ஆதரவுச் செய்திகளாகவே இருக்கிறதே என்று சலித்துக் கொள்கிறீர்களா?திமுகவின் அரசியல் சேட்டைகள் எப்படி என்பதையும் 
அவர்கள் சேனலிலேயே பார்த்துவிடலாம்!  

மீண்டும் சந்திப்போம்! சிந்திப்போம்!