சுப வீ என்று சுருக்கமாக அழைக்கப்படும் சுப வீரபாண்டியன் செட்டியார் காசுக்காக திராவிட இயக்கப்பேரவை என்ற ஒரு அமைப்பை நடத்திவருவதும், எங்கே மைக் நீட்டினாலும் அங்கே ஆஜராகி திராவிடப்புகழ்ச்சி செய்துவருபவர் என்பது தெரிந்த விஷயம் என்பதால் அதிகம் இவரைச் சட்டை செய்ததில்லை. ஆனால் முகநூலில் பானுகோம்ஸ் இந்த உரையாடலைப் பற்றிச் சிலாகித்துச் சொன்னதில் தேடிப் பார்த்தேன். பானு கோம்ஸ் எழுதியது இங்கே
எந்த கேள்விக்குமே பதில் சொல்லப்படவில்லை. மாறாக..நிகழ்ச்சி முழுவதும் வெறும் சமாளிப்பு தான்
காவேரி டிவி யின் தடம் நிகழ்ச்சி..
''அத்திவரதரிடம் தோல்வியடைந்தாரா பெரியார் ?''
''அத்திவரதரிடம் தோல்வியடைந்தாரா பெரியார் ?''
நெறியாளரான மதன் ரவிச்சந்திரன் ...
ஈ.வே.ரா. குழுவிடம் கேட்க வேண்டிய அத்தனை கேள்விகளையும்... [ மடைமாற்றும் முயற்சிகளையும் தாண்டி ] விடாது கேட்டிருக்கிறார். மேடைக்கு மேடை கேட்டுக் கொண்டிருந்த சம்பூக வதத்திற்கும் தெளிவான விளக்கத்தை அளித்து திணற வைத்தார் நெறியாளர்.
நீண்ட நாட்கள் கழித்து ..உண்மையான கேள்விகளை கொண்ட பேட்டி !!
வெகு சிறப்பு.
திராவிடங்களுடைய அஸ்திவாரமே பொய்புரட்டுகளும், டுபாக்கூர் வேலைகளும் தான் என்பது அம்பலப்பட்டு வரும் நேரம் இது. அதில் பதில் சொல்ல முடியாமல் சுபவீ செட்டியார் மழுப்பலான பதில்களில் சமாளித்துக் கொண்டுபோகிற பரிதாபத்தை என்னவென்று சொல்வது?
காசுக்கு கூவுகிறவர்களுக்கு எப்போதுமே ரெட்டை நாக்கு தான்! இதில் சுபவீ செட்டியார் முதலான திராவிடங்கள் மட்டும் விதிவிலக்காகி விட முடியுமா?
'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்.....’
”கடவுளை நம்புகிறவன் முட்டாள், காட்டுமிராண்டி”
என்று வீரம்மிக்க வீரமணி, சுபவீ போன்றவர் நேருவிடம் நேருக்கு நேர் வீரவசனம் பேசுவரா?
என்று வீரம்மிக்க வீரமணி, சுபவீ போன்றவர் நேருவிடம் நேருக்கு நேர் வீரவசனம் பேசுவரா?
ஆஸ்திக சிகாமணி கே என் நேரு அத்தி வரதர் சன்னிதியில்.
இதற்கெல்லாம் ஒரு டெம்ப்ளேட் பதிலை வைத்துக் கொண்டு இத்தனை நாள் சமாளித்தவர்கள் இனிமேலும் சமாளிக்க முடியுமா? அதனால்தான் முத்தமிழ் வித்தவர் வாரிசு இப்படி ஆப்பு வாங்குகிறாரோ?
கடைசியில் இப்படி எல்லாத் திராவிடப் பம்மாத்துகளும் செய்ததெல்லாம் அவர்களைப்பேச வைத்து அறுவடை செய்த திமுக தலையில் தானே விடிந்தாக வேண்டும்! #கர்மாதியரி
சதீஷ் ஆசார்யா என்ன சொல்லவருகிறார்? பூனைக்கு ஒன்பது ஆயுள் கதை மாதிரி குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பை இன்னும் இரண்டுவாரம் இழுத்தடிப்பாரா? #தேவுடா
மீண்டும் சந்திப்போம்.








