Showing posts with label தேர்தல் முடிவுகள். Show all posts
Showing posts with label தேர்தல் முடிவுகள். Show all posts

2021 தேர்தல் களம்! முதல் கட்டப்பார்வை!

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் மு.டிவுகள் வெளியாகிக் கொண்டே வருவதில் மக்களுடைய சாய்ஸ் என்ன என்பதும் தெரிய வந்திருக்கிறது. எல்லாவற்றையும் விட அதிமுக்கியமாக தேர்தல் ஆணையத்தின் மீதும் EVM வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதும் எதிர்க்கட்சிகள் சுமத்திய பழிகள் அத்தனையும் பொய் என்பதும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. நிரூபிக்கப்பட்ட பிறகும் தங்களது பொய்களுக்காக வருத்தம் தெரிவிக்கிற basic decency கூட இல்லாத ஜனநாயகத்தில் வாழ்கிறோம் என்பது பெருமைப்பட்டுக்கொள்கிற  விஷயமா என்ன?  


மம்தா பானெர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 3வது முறையாகவும் ஆட்சியைப்பிடித்திருக்கிறது என்பதை வங்காளத்தின் வெற்றியாக அறிவித்திருக்கிறார் மம்தா. ஆனால் நந்திகிராம் தொகுதி அவரைக் கைவிட்டு விட்டது. சுவேந்து அதிகாரியிடம் தோற்றுவிட்டதாக செய்திகள்! Trinamool Congress chief Mamata Banerjee lost to loyalist-turned-foe BJP candidate Suvendu Adhikari in Nandigram by a margin 1,960 votes. Earlier, there were reports that said Banerjee had defeated Adhikari.In what appears as admission of defeat, the West Bengal cheif minister said, "Let the Nandigram people give whatever verdict they want, I accept that. I don't mind." என்று மம்தாவே சொன்னதாக The Week செய்தி சொல்கிறது.  TMC 214 இடங்களில்  ஜெயித்திருக்கிறது.  சித்திக்கியின் ISF வெறும் இரண்டே இடங்கள். BJP 75 இடங்களில் வெற்றி. காங்கிரஸ் இடதுசாரிகள் கூட்டணி அமைத்துத் தங்கள் வாக்கு வங்கியை அப்படியே மம்தா பானெர்ஜிக்கு மாற்றி விட்டார்கள் போல! BJP 100 இடங்களைத் தாண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர்களுக்குப் பெரிய ஏமாற்றமே! வெற்றி மிதப்பில் பிஜேபி அலுவலகங்களுக்குத் தீ வைப்பது முதலான அசகாய  சாதனைகளை திரிணாமுல் காங்கிரஸ் தொடங்கி விட்டது. 


அசாமில் பிஜேபி கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று இருப்பதில் எரிச்சலோடு மேலே 3நிமிட வீடியோவில் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்!


கேரள அரசியல் சரித்திரத்தில் ஒருமுறை ஆட்சியமைத்த கூட்டணி இரண்டாவது முறையும் வெல்வதில்லை என்கிற நாற்பது ஐம்பது ஆண்டுகால வழக்கத்தை மாற்றி இன்னும் அதிகமான சீட்டுக்களுடன் (99) இடது முன்னணி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. காங்கிரஸ் கூட்டணி மீதமுள்ள 41 இடங்களில் ஜெயித்திருக்கிறது. இங்கேயும் LDF UDF இரண்டும் ஒரு புரிந்துணர்வோடு பிஜேபி ஒரு இடத்தில் கூட ஜெயித்துவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மனோரமா ஆன்லைன் வீடியோவில் வெளிப்படையாகவே சொன்னார்கள்.  இந்த மூன்று மாநிலத்தேர்தல்களில் மட்டும் anti incumbency இல்லை என்று சொல்லப்படுவது வேடிக்கை தான்! எதற்கும் இந்தச் செய்தியை ஒருமுறை பார்த்து விடுங்கள்!


பாண்டிச்சேரி ரிசல்ட் இன்னமும் தெளிவாக வரவில்லை. தற்போதைய நிலவரப்படி NR காங்கிரஸ் பிஜேபி கூட்டணி தான் ஆட்சியைப்பிடிக்கும் போலத்தெரிகிறது.

தமிழ்நாட்டில் எல்லோரும் பயமுறுத்திக் கொண்டிருந்த படியே திமுக கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. ஆனாலும் அதிமுக+ வலிமையான எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கிறது. பிஜேபி உள்ளே வந்துரும் என்று சொல்லிச் சொல்லியே பிஜேபியும் சட்டசபைக்குள் அனுப்பிவைத்திருக்கிறார்கள்.

இந்தத் தேர்தலின் சுவாரஸ்யமே முன்னெப்போதும் இல்லாத வகையில் நிறைய உதிரிக்கட்சிகள் காலியாகி இருக்கின்றன. அதிமுக செய்த கூட்டணிக் குளறுபடியில் வெளியேறிய தேமுதிக, சரத்குமாரின் சமக. டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் என்று பல சிறிய கட்சிகள் அடிவாங்கியிருக்கின்றன. அடிவாங்காமல் கூட்டணிக்குள் இருந்து தானும் கெட்டு அதிமுகவையும் கெடுத்த கட்சி என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சி தான்! வன்னியர் வாக்குகள் கைவிட்டுவிட்டன.அதுபோக ஜெ.வால் சமஉக்களான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி போன்ற சில்லறைகளை  இம்முறை அதிமுக, திமுக இரண்டுதரப்புமே கண்டு கொள்ளவில்லை.

ஆனாலும் கட்டாயப்படுத்தி பிஜேபி கூட்டணி வைத்ததால் தான் அதிமுக இவ்வளவு சரிவைச் சந்தித்தது என்று கூவ திமுக, அதிமுக இரண்டு கழகங்களிலும் ஆட்களுக்கா பஞ்சமில்லை.

இது ஒரு முதற்கட்டப்பார்வைதான்! முடிவுகள் முழுதும் வெளியானபிறகு விரிவாகப்பார்க்கலாம்.

மீண்டும் சந்திப்போம்.

2019 தேர்தலில் இந்தியா எப்படி வாக்களித்ததாம்?

Centre for Policy Research  புதுடில்லியில் 1973 இலிருந்து இயங்கும் ஒரு லாபநோக்கில்லாத thinktank அமைப்பு என்ற பெயரில் அரசிடமிருந்து மானியங்களாய்ப் பெறுகிற ஒன்று.  அவர்களுடைய உள்நோக்கம் வரவுசெலவுகள் பற்றிய கேள்விகளை ஒதுக்கிவைத்துவிட்டு, மே 27 அன்று இந்தியா எப்படி வாக்களித்ததாம்? 2019 தேர்தல் முடிவுகளைப் புரிந்து கொள்ளும் விதம் என்ற தலைப்பில் ஒரு விவாதம் நடத்தியதன் காணொளி:  எச்சரிக்கை 109 நிமிடங்கள் பொறுமை இருப்பவர்கள், அரசியலைப் பகுத்தாய்வு செய்ய விரும்புகிறவர்கள் மட்டும் பார்க்கலாம்.   

   
தொடர்ச்சி 22 நிமிடங்கள் 


நேரமில்லாதவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளிவந்த ஒரு செய்திக்கட்டுரையை படித்துப் பார்க்கவும். 


டிஸ்கி போட்டு நாளாகிவிட்டதென்பதால் ஒரு டிஸ்கி! இதில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களை நான் அப்படியே வழிமொழிகிறேன் என்று அர்த்தமில்லை. உலகம் எப்படி இயங்குகிறது என்பதை 360 டிகிரியில் இருந்து பார்த்துப் புரிந்து கொள்வதற்காக மட்டும்! 

மீண்டும் சந்திப்போம்.
  

காங்கிரஸ், உதிரிக்கட்சிகளுடைய கலகம் என்ன ஆயிற்று?

இந்தத் தேர்தலின் முத்தாய்ப்பாக, ரொம்பவுமே  தவ்விக் குதித்துக் கொண்டிருந்த காங்கிரஸ் மற்றும் உதிரிக் கட்சிகளுடைய கலகக் குரலை அடக்கிவைத்தது எதுவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்? உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு இயந்திரங்கள் இப்படி எல்லா விஷயங்களிலும்  பழிசுமத்தி, கலகம் செய்யவும் தயாராக இருந்த கட்சிகள், இப்போது தேர்தல் முடிவுகளுக்குத் தலைவணங்கி, தோல்வியை ஒப்புக் கொள்கிற நிலைமை எப்படி வந்தது?  


முதலில் ராகுல் காண்டி முன்னெடுத்த சௌகிதார் சோர் ஹை முதலான ஊழல் சேற்றை வீசிய பிரசாரம் முழுக்க முழுக்க ஜனங்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது: குற்றம் சொன்னவர்களையுமே ஜனங்கள் நிராகரித்திருக்கிறார்கள்.  

காங்கிரஸ் இந்திரா குடும்ப முகங்களைத் தவிர வேறொன்றும் அறியாத அமேதி தொகுதி மக்கள், இந்த முறை பிஜேபியின் ஸ்ம்ருதி ஈரானியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது  ஒரு முத்தாய்ப்பு. ஸ்ம்ருதி சொன்னது போல முடியாதது என்று எதுவுமே இல்லை. அடுத்தது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதிக் கட்சியும் மாயாவதியின் BSPயும் 25 ஆண்டுகாலப் பகைமையை மறந்து ஏற்படுத்திக் கொண்ட கூட்டணியும் உத்தர பிரதேசத்தில் எடுபடவில்லை.


அடுத்து காங்கிரசோ பிஜேபியோ எந்தத்தரப்பு ஜெயித்தாலும் அதைத் தங்களுடைய அரசியல்  ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ளவும் ஆதரவளிக்கவும் தயாராக இருந்த YSR காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி போன்ற சிலருக்கும் இந்தத் தேர்தல்முடிவுகள் மிகத்தெளிவான பதிலை வெளிப்படுத்தியிருக்கின்றன. ஆந்திராவுக்கு விசேஷ அந்தஸ்து ஒரிசாவுக்கு விசேஷ அந்தஸ்து என்ற கோரிக்கையை முகமூடியாக வைத்து அரசியல் செய்ய முயன்ற TDP யின் சந்திரபாபு நாயுடு, YSR காங்கிரசின் ஜெகன், பிஜு ஜனதா தளத்தின் நவீன் பட்நாயக் மூவரும் அந்த வகையைச் சேர்ந்தவர்கள். இதில் ஜெகன் மோகன் ரெட்டி (முதல்முறையாக) நவீன் பட்நாயக் (ஐந்தாவது முறையாக) மாநில ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறார்கள்.  


ஆந்திராவில் ஜெயித்த ஜெகன் மோகன் ரெட்டிக்கு, பிஜேபியை நிர்பந்தித்துத் தனக்கு சாதகமாக எதையும் சாதித்துக் கொள்ள முடியாது என்பது ஒரு விதமான நகைமுரண் என்றால் அவரிடம் தோற்றுப்போன சந்திரபாபு நாயுடு நிலைமை மிகப் பரிதாபமானது. ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் அவர்மீது பகைமை கொண்ட அரசுகள், (அரசு அதிகாரிகள் பலரையும் நாயுடு பகைத்துக் கொண்டிருக்கிறார்)    ஊழல்புகார்களில் அவரைச் சிக்க வைக்கலாம்! கடந்தகாலத்தில்  YSR காங்கிரசின் 23 சட்ட மன்ற உறுப்பினர்களைக் கட்சி மாற வைத்ததுபோல இப்போது அவருக்கே நடக்கலாம்! கட்சியைக் காப்பாற்றிக்  கொள்வதும், தன்மீதான ஊழல் புகார்களை எதிர்கொள்வதும் சந்திரபாபு நாயுடுவுக்கு பலத்த சோதனைதான்! 

கொஞ்சம் தமிழக உதிரிகளையும் பார்க்கலாமா?

   
கமெண்டுகளை நீங்களே எழுதிக்கொள்ளலாம்.

     
இந்தத்தேர்தலில் இடதுசாரிகளின் பரிதாபமான முடிவை நாலைந்து பாராக்களில் சொல்லிவிட முடியாது. மே.வங்கத்தில் ஒருவிதமாக, கேரளாவில் இன்னொருவிதமாக தமிழகத்தில்  திமுகவுக்குப் பக்க வாத்தியமாக என்று பலவித  முகங்களோடு, சரிவைச் சந்தித்திருக்கிறார்கள் என்பதைத் தொடர்ந்து இந்தப்பக்கங்களில் பேசலாம்.

மீண்டும் சந்திப்போம்.