Showing posts with label தேர்தல் முன்னோட்டம். Show all posts
Showing posts with label தேர்தல் முன்னோட்டம். Show all posts

இட்லி வடை பொங்கல்! #71 அமித் ஷா வருகையும் அலறும் கழகங்களும்! தமிழக அரசியல்!

ஒருவாரமாகவே அமித் ஷாவின் தமிழக வருகைக்கு தமிழக ஊடகங்கள் கொடுத்த நெகட்டிவ் பில்டப், எவ்வளவு பயத்துடன் இங்கே கழகங்களும் உதிரிகளும் அவருடைய வருகையைப் பார்க்கிறார்கள் என்பதற்கு அடையாளமாகவே இருந்ததென்றே சொல்ல வேண்டும். வழக்கம்போல #GoBackAmitSha முழக்கங்கள் டிவிட்டரில் உலாவரத்தொடங்கின. பிஜேபி ஆதரவாளர்கள் பதிலுக்கு #TNWelcomesAmitSha என்று அதிக எண்ணிக்கையில் ட்வீட்டியது, கழகங்களுக்கு இணையாக அவர்களும் காமெடி செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என்று காட்டுவதாக எடுத்துக் கொள்ளலாம்!


பிஜேபியுடன் கூட்டணி தொடரும் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள்  ஈபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் அறிவித்திருப்பதில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி பட வசனம் படுத்தேவிட்டானய்யா நினைவுக்கு வருகிறதா? 


கழகங்களுக்கு மட்டும்தான் காமெடி செய்ய வருமா? நாங்களும் செய்வோமே என்று தமிழக அரசியல் உதிரிகளில் ஒன்றான பாமக சூசகமாக அதிக சீட் தரும் கூட்டணிக்கே முன்னுரிமை என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது. திமுக கூட்டணியில் இருக்கும் உதிரிக்கட்சிகள், திமுக கூட்டணியில் நீடிப்போமா அல்லது கழற்றிவிடப்படுவோமா என்பதே புரியாமல் அமைதி காத்து வருவது, இன்னொரு பக்கத்து தமாஷா! மதிமுக, விசிக, இடதுசாரிகளின் நிலைமையைத்தான் சொல்கிறேன்.   

பீஹார் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு,இன்னொரு உதிரிக்கட்சியான   காங்கிரஸ்,  திமுகவாகப்பார்த்து எத்தனை சீட் கொடுத்தாலும் வாயை மூடிக்கொண்டு வாங்கத் தயாராகிக் கொண்டிருக்கிற மாதிரித்தான்  தெரிகிறது.. 

அமித் ஷா மீது பதாகை வீசியது யாராக இருந்தாலும் ஏற்க முடியாது.. துரைமுருகன் கண்டனம் !

 | 

காமெடி கிங் துரைமுருகன் முந்திக்கொண்டு இப்படி ஒரு பேட்டியை காட்பாடியில் இருந்து கொடுத்திருக்கிறார் அமித் ஷா மீது placard ஒன்றை வீசிய துரைராஜ் என்கிற நங்கநல்லூர் ஆசாமியைக் கைது செய்த காவல்துறை அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று வழக்கமான சமாளிப்பைச் சொல்லியிருக்கிறது.

ஆக எல்லோருமாகச் சேர்ந்து தமிழக மக்களை வெறும் காமெடிப்பீசாக்குவதில் மும்முரமாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகத்தெரிகிறதா இல்லையா?

நீங்கள்தான் சொல்லவேண்டும்!

மீண்டும் சந்திப்போம்.    

       

   

பொய்களைப் பரப்புவது மெயின்ஸ்ட்ரீம் மீடியாவா? சமூக வலைத்தளங்களா? #2

எங்கள் Blog ஸ்ரீராம் நேற்றைய பதிவில், நீளமான வீடியோக்களை பகிர்ந்தால் எப்படிப் பார்ப்பதாம் என்று ஒரு நியாயமான கேள்வியை பின்னூட்டத்தில்  எழுப்பியிருந்தார். நியாயம் தான்! ஆனால் இப்படி பார்ப்பதற்கும் கேட்பதற்குமே சோம்பல்படுகிற நம்முடைய இயல்புதான் ஊடகங்களில் சகட்டுமேனிக்குப் பொய்கள் பரப்புவதற்கு, காரணமாகவும் இருப்பதைக் கொஞ்சம் யோசிக்கலாமே!

வீடியோ சிறுசுதான் !

#2019தேர்தல்முன்னோட்டம் என்று அங்கங்கே கட்சிகள் கூடிக் கலைந்து கொண்டிருக்கின்றன. கூட்டணிக்கு அச்சாரம் என்று சொல்ல முடியாதபடி, கூட்டணி எதுவும் எந்தத் தரப்பிலுமே  முடிவாகவில்லை  #1

2014  நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா துணிந்து எடுத்த முடிவு என்று சொல்வதைவிட gambling என்றுதான் சொல்லமுடியும், அதைக்கூட இங்கே #திமுக அப்போதும் சரி, இப்போதும் சரி, துணிந்து செய்யவில்லை. ஆனாலும் கூட, அவர்களும் இன்னமும் தங்களுடைய கூட்டணி இவர்களோடுதான் என்று உறுதியாகச் சொல்லவில்லை. இப்போது அவர்கள் #கூட்டணி பற்றிப் பேசுவதே ஒரு calculated risk எடுப்பதற்கும் தயாராக இல்லை என்பதால்  #2

#அதிமுக குழப்பத்தில் இருக்கிறது. சொந்தக்காலில் நிற்பதற்கு பயம், தினகரன் என்ன சேதத்தை ஏற்படுத்துவார் என்பதில் எதுவும் தெளிவாகப் புரியாமல் இருப்பதும் பயத்தை இன்னும் கொஞ்சம்  அதிகரித்திருக்கலாம். #antiincumbency ஆளுவோருக்கு எதிரான அதிருப்தி என்பது இயல்பு. ஆனால் அந்த அதிருப்தியை சாதகமாக  மாற்றிக் கொள்வதில் #திமுக உள்ளிட்ட எதிரணியில் உள்ளவர்கள் எந்த அளவுக்கு வெற்றி பெறமுடியும் என்பது அவர்களுக்குமே கூடப் புரியாத புதிர்தான்! #3

இப்படி எத்தனை  அடுக்கிக் கொண்டே போனாலும் , எத்தனை டிவி விவாதங்கள் நடத்திக் கூவினாலும் , இப்போதிருக்கிற Winner takes all   என்பதான Westminster தேர்தல் முறையில் உள்ள கோளாறுகள் திருத்தப்படாத வரை ஒரு மாறுதலையும் கொண்டுவர முடியாது.

இங்கே ஜெயித்த ஒரு வேட்பாளர் மொத்த வாக்குகளில் எத்தனை சதவீதம் வாங்கினார் என்பதில் ஒரு bench mark  இல்லாமல், அவர் உண்மையிலேயே மக்கள் பிரதிநிதி ஆகிவிட யூடியுமா?

தோற்கிற தருணங்களில் மட்டும் புள்ளி விவரங்களை அடுக்குவது கருணாநிதி ஆரம்பித்து வைத்தது , இப்போது எல்லோருமே செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். #திமுக விடமிருந்து கூட   விகிதாசார பிரதிநிதித்துவம் வேண்டுமென்கிற குரல் ஒருமுறை எழுந்தது அப்புறம்  மூச்சுவிடக் காணோம்!

தேர்தல் சீர்திருத்தங்கள் வேண்டுமென்கிற  குரல் பிரிட்டனில் இருந்து  https://www.electoral-reform.org.uk/voting-systems/types-of-voting-system/first-past-the-post/  இங்கே சில சுவாரசியமான, உபயோகமான தகவல்களைக் காணமுடியும்.

இங்கே எழுபதுகளில் தினமணி நாளிதழில் ஆசிரியர் திரு A N சிவராமன் தொடர் கட்டுரைகளாக எழுதினார். விகிதாசார பிரதிநிதித்துவம் உள்ளிட்டு வெவ்வேறு நாடுகளில் வாக்குச்சீட்டு ஜனநாயகம் இயங்குகிற விதத்தை வாசகர்கள் சிந்தித்துப் பார்க்க தொடர்ந்து எழுதினார். A N சிவராமன் போன்ற  நல்ல மனிதர்கள், சுயசிந்தனையோடு தங்களுக்குத் தெரிந்தது நாட்டுக்கும் பயன்படட்டுமே என்று எழுதினார்கள்.

இப்போதுள்ள ஊடகங்கள், அச்சு ஊடகமோ, விஷுவல் மீடியாவோ  சமூக வலைத்தளங்களோ என்ன செய்து கொண்டிருக்கின்றன? பயனுள்ள தகவல்களைத் தருகிறதா? சிந்திக்கத் தூண்டுகிறதா? கொஞ்சம் சொல்லுங்களேன்!

கூட்டணி முடிவாகி விட்டதா என்ன? பாமக நிறுவனர் மருத்துவர் இப்படி ட்விட்டியதும் ஆடிட்டர் குருமூர்த்தி retweet செய்திருப்பதும் .........  




  தொடர்புடைய பழைய பதிவு ஒன்று இங்கே