Showing posts with label இந்தியா சீனா பாகிஸ்தான். Show all posts
Showing posts with label இந்தியா சீனா பாகிஸ்தான். Show all posts

மண்டேன்னா ஒண்ணு! என்னன்னு சொல்லி ஆரம்பிக்க?

இங்கே சேனல்களில் சீன அதிபர் ஷி ஜின்பிங் வந்து போன விஷயத்தை அப்போதே மறந்துவிட்டு வழக்கமான அக்கப் போர்களில் திரும்பவும் இறங்கி விட்டார்கள் என்பதைக்  கொஞ்சம் சுவாசிக்கப்போறேங்க தளத்தில் நேற்றைக்கு சொல்லியிருந்தது நினைவிருக்கிறதா? இந்தியாவுக்கும் சீனாவுக்கும் அப்படி என்னென்ன பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன? இதற்குள் பாகிஸ்தான் வேறு எப்படிப் புகுந்து கொண்டிருக்கிறதாம்?

   
இந்தப் பிரச்சினைகள் குறித்துத் தமிழில் தெளிவாக, சுருக்கமாக முகநூலில் ஒரு பகிர்வைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டேன். படித்ததில் பிடித்தது என அது இங்கேயும். புரிந்துகொள்ள உதவியாக மேலே உள்ள வரைபடத்தையும் பார்த்துக் கொண்டே வாசிக்கலாம்!

இந்திய-சீன உறவுச் சிக்கலுக்கு அடிப்படையாக பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானவையாக கீழ்க்கண்டவற்றைச் சொல்லலாம்.
ஒன்று, இந்தியாவின் திபெத்திய ஆதரவு. தலாய்லாமா இந்தியாவில் இருந்து கொண்டு திபெத்திய விடுதலைக்காகப் போராடுவதனை சீனர்கள் முற்றிலும் விரும்பவில்லை.
இரண்டு, இந்திய-சீனப் போரின்போது சீனா பிடித்துக் கொண்ட இந்தியப் பகுதியான, இன்றைக்கு அக்சாய்-சென் என்றழைக்கப்படுகிற பகுதி குறித்தான சர்ச்சை. இந்தியா இன்றைக்கும் அந்தப் பகுதியை தன்னுடையதாக உரிமை கொண்டாடுகிறது.
மூன்று, சட்ட விரோதமாக இந்தியாவின் பகுதியான கில்கிட்-பால்டிஸ்தானை ஆக்கிரமித்துள்ள பாகிஸ்தான், சீனாவுக்கு இலவசமாகக் கொடுத்த பகுதிகள்.
நான்கு, இந்தியாவின் பகுதியான அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடுகிறது. அந்தப் பகுதி தங்களுடையதென்று தொடர்ந்து வலியுறுத்துவதால் உண்டாகும் மோதல்கள்.
ஐந்து, சீனாவின் பாகிஸ்தானிய ஆதரவு மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் பிரச்சினை. CPEC தொடர்ப்பாக அமைக்கப்பட்ட சாலைகள் இந்தியப் பகுதியான (இன்றைக்குப் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள) கில்கிட்-பால்டிஸ்தான் வழியாகச் செல்வதால் உண்டான இந்திய எதிர்ப்பு.
ஆறு, சீனாவிற்குப் போட்டியாக அமைந்த இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம். அதனை எப்பாடுபட்டேனும் தடுக்க நினைக்கும் சீனாவின் முயற்சிகள் மற்றும் அதற்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்றைக்கு இந்தியா எடுக்கும் தீர்மானமான நடவடிக்கைகள்.
முதலாவது பிரச்சினை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது என்றே எண்ணுகிறேன். இனிமேலும் திபெத் சீனாவிடமிருந்து விடுதலை பெறும் என்பது வெற்றுக் கனவுதான். அந்த அளவிற்குச் சீனா திபெத்தின் மீது ஆக்கிரமிப்பு செய்கிறது. பெருமளவு ஹான் சீனர்களை திபெத்திற்குள் குடியமர்த்தி, திபெத்திய கலாச்சாரத்தை ஏறக்குறைய சீனா அழித்துவிட்டது. கால மாற்றங்களை உணர்ந்த பா.ஜ.க. அரசாங்கம் தலாய்லாமாவைக் குறித்து அதிகம் பொருட்படுத்திக் கொள்வதில்லை. எனவே சீனர்கள் அந்த விஷயத்தைக் குறித்து அதிகம் கவலைப்படுவதில்லை.
இரண்டாவது பிரச்சினையான அக்சாய்-சென் குறித்து சீனர்கள் கவலை கொள்ள அதிக முகாந்திரம் இருக்கிறது. ஏற்கனவே சொன்னபடி அந்தப் பகுதி இந்தியா உரிமை கொண்டாடும் கில்கிட்-பால்டிஸ்தானின் ஒருபகுதி. அந்தப் பகுதி வழியாகத்தான் சீனா திபெத்திற்குச் செல்ல பல முக்கியமான சாலைகளையும், ரயில்பாதைகளையும் அமைத்திருக்கிறது. சமீபத்தில் இந்தியா காஷ்மீரில் ஆர்ட்டிகிள் 370-ஐ நீக்கி, லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவித்தது சீனாவுக்குச் சிக்கலைத் தோற்றுவித்திருக்கிறது. இந்தியா அந்தப் பகுதிகளைக் கைப்பற்றினால் சீனா திபெத்தை இழக்க நேரிடும்.
மூன்றாவது பிரச்சினை சிக்கலானது. இந்தியா விடுதலை பெற்றபோது காஷ்மீரின் ஒருபகுதியாக இருந்த கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியும் இந்தியாவுடன் இணைய சம்மதித்துக் காஷ்மீர் மஹாராஜாவினால் கையொப்பமும் இடப்பட்டது. ஆனால் அங்கு பாதுகாப்பில் இருந்த பிரிட்டிஷ்காரனான மேஜர் வில்லியம் பிரவுன் என்பவன் அந்த உத்தரவுக்கு எதிராக பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்துப் புரட்சி செய்தான். அவனுக்குப் பாதுகாப்பாக இருந்த பல ஹிந்து ராணுவத்தினரையும், கூர்க்காக்களையும் படுகொலை செய்த வில்லியம் பிரவுன் பின்னர் அந்தப் பகுதிகளை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தான். நேரு அதனைக் குறித்து எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்கம்போல வாயை மூடிக்கொண்டிருந்தார். ஆனால் இன்றைக்கும் கில்கிட்-பால்டிஸ்தான் சட்டப்படி இந்தியாவிற்குச் சொந்தமானது.
இந்தியா என்றைக்கு வேண்டுமானாலும் கில்கிட்-பால்டிஸ்தானை சட்டப்படி திருப்பியெடுத்துக் கொள்ளும் என்று உணர்ந்த பாகிஸ்தானிய ஜெனரல்கள் மிகுந்த தந்திரத்துடன் கில்கிட்-பால்டிஸ்தானின் கிழக்குப் பகுதியை சீனாவிற்கு இலவசமாகக் கொடுத்துச் சீனாவுடன் ஒப்பந்தமும் செய்து கொண்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி கில்கிட்-பால்டிஸ்தான் பாகிஸ்தானுக்குச் சொந்தமானதாகவும் அதனை சீனாவுக்கு சட்டப்படி விட்டுக் கொடுத்ததாகவும் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது. எனவே இந்தியா கில்கிட்-பால்டிஸ்தன் மீது உரிமை கொண்டாடி படையெடுத்தால் அது சீனாவையும் பாதிக்கும் என்பதால் சீனாவும் பாகிஸ்தானுடன் சேர்ந்து சண்டையிட ஏதுவாகும். எனவே இந்தியாவால் ஒன்றும் செய்ய இயலாத நிலை உண்டாகும்.
நான்காவது பிரச்சினையான அருணாச்சலப் பிரதேசம் சீனாவைப் பொறுத்தவரை அத்தனை எளிதானதல்ல. ஏனென்றால் 1960-களில் இருந்த இந்தியா இன்றைக்கு இல்லை. இந்திய ராணுவம் மிக வலிமையானதாக ஆகியிருக்கிறது. எனவே அந்தப் பிரச்சினை அவ்வப்போது வரும், போகும் என்பதனைத் தவிர்த்து பெரிதாக வாய்ப்பில்லை.
ஐந்தாவது பிரச்சினை இடியாப்பச் சிக்கலானது. இரண்டாவது, மூன்றாவது பிரச்சினைகளுடன் இணைந்தது. இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்க பாகிஸ்தான் கில்கிட்-பால்டிஸ்தானுக்குள் இருக்கும் பெரும் பகுதியை அதாவது சீபெக் (CPEC) சாலைகள் செல்லும் வழியிலுள்ள பகுதிகளை சீனாவுக்கு விட்டுக் கொடுத்திருப்பதாக வரும் தகவல்கள். அது உண்மையாக இருந்தால் இந்தியாவுக்குப் பெரும் கவலையளிக்கக் கூடிய தலைவலி அது. சீனா அங்கு ஒரு பெரும் ராணுவத் தளத்தையும் அமைக்க இருக்கிறது. அது நடந்தால் ஏறக்குறைய கில்கிட்-பால்டிஸ்தான் இந்தியாவின் கையைவிட்டுப் போய்விட்டதாக அர்த்தம்.
ஆறாவது பிரச்சினையான இந்திய-சீனப் பொருளாதார யுத்தம். சீனா இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட எல்லா வழிகளிலும் முயல்கிறது. இன்றுவரை அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது என்றாலும் எதிர்காலத்திலும் இந்தியா இப்படியே இருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. ஏனென்றால் இன்றைக்கு உலக நாடுகளுடன் சுமுக உறவு வைத்திருக்கும் வலிமையான இந்தியாவை சீனர்கள் அடக்கி வைப்பது சாத்தியமில்லை. பாகிஸ்தானியர்கள் மூலமாக பிரச்சினைகளை உருவாக்க முயல்வார்கள் என்பதுடன் மட்டுமே அவர்களின் நடவடிக்கைகள் நின்று போகும். அந்த அளவிற்கு உலக நாடுகளின் எதிர்ப்பைச் சம்பாதித்து வைத்திருக்கிறது சீனா.
சீனப் பொருளாதாரம் இறங்கு முகத்தில் இருக்கிறது. இனிவரும் காலம் இந்தியாவின் காலம் என்பதில் சந்தேகமில்லை. 

இந்தப் பகிர்வு ஒரு எளிமையான புரிதலுக்காக  மட்டுமே என்ற எச்சரிக்கைக் குறிப்போடு இதைப் பரிந்துரைக்கிறேன். எல்லைப்  பிரச்சினை அல்லாத வேறு 5 பிரச்சினைகள் இந்திய சீன உறவுகளில் மிக உறுத்தலாக இருக்கின்றன.

1. இந்தியா ஐநா பாதுகாப்புசபை கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு சீனா தொடர்ந்து போட்டுவரும் முட்டுக் கட்டை! அதேபோல Nuclear Supplier’s Group (NSG). உறுப்பினராவதற்கும் தடைபோட்டு வருவது.

2.  சீனாவின் ஒரேபெல்ட் ஒரேரோடு திட்டத்தில் சேர இந்தியா மறுத்துவருவது. CPECயின் சாலைகள் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் வழியாக அமைவதை இந்தியா எதிர்த்து வருவது. (இந்தியா இதற்கு மாற்றாக வேறொரு பாதையைச் சொல்வதை சீனா காதுகொடுத்துக் கேட்கிற மாதிரித் தெரியவில்லை)  

3. அமெரிக்காவுடன் இந்தியா தொடர்ந்து நட்புறவை வளர்த்து வருவதைச் சீனா தனக்கெதிரானதாகப் பார்க்கிறது. தென்சீனக் கடல் பிராந்தியம் முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடுவதை இந்தியா ஏற்கவில்லை. சீனாவின் கடல் ஆதிக்கம் வளர்ந்து வருவதற்கு செக் வைக்கிற விதத்தில் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் நான்கு நாடுகள் கூட்டணி ஒன்று (அமெரிக்கா, ஆஸ்திரேலியா இந்தியா மற்றும் ஜப்பான்) உருவாகலாம் என்பதே சீனாவுக்கு கசப்பானதாக இருக்கிறது.

4. தலாய் லாமாவும் கூட சீனர்களின் வாய்க்குள்போன திபெத் இனி சுதந்திரக்காற்றை அனுபவிக்கப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டாலும், அவரைக் கடவுளாக வணங்கும் லாமா பௌத்த மதத்தினரைக்கண்டு சீனா இன்னமும் மிரளத் தான் செய்கிறது.

5. தன்னுடைய ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கர் முஸ்லிம்கள் அனைவரையுமே இஸ்லாமியத் தீவீரவாதிகளாகப் பார்த்து, கடுமையான அடக்குமுறைகள், மூளைச்சலவை செய்யும் பயிற்சி முகாம்களை நடத்திவரும் சீனா, பாகிஸ்தான் என்ற ஒரு சிறுநாடு இஸ்லாமியத் தீவீரவாதிகளுக்குத் தொடர்ந்து பயிற்சி கொடுத்து அக்கம்பக்கத்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? அதுவும் போக பாகிஸ்தானின் இந்தத் பயங்கரவாத ஏற்றுமதிக்கு, ஐநாபாதுகாப்பு சபையில் தொடர்ந்து பாதுகாத்து வருவது ஏன் என்ற கேள்விகளுக்கெல்லாம் ஒரே விடை, சீனா தனது ப்ராக்சியாக பாகிஸ்தானை இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்திவருகிறது என்பது மட்டும் தான்.

இன்றைய நாட்களில் பொருளாதாரம் தான் ராஜீய உறவுகளின் சிக்கலாகவும், தீர்வாகவும் இருக்கிறது என்பது தான் ஒன்லைனர்.   

     
எதிர்க்க வேண்டும்.....
ஒவ்வொரு திட்டத்தையும் எதிர்த்தே ஆக வேண்டும்.....
இவர் என்பதால் எதிர்ப்பு... அவர் என்பதால் மென்மையான எதிர்ப்பு.....
எல்லாமே சரிதான்?
என்னதான் எதிர்த்துத் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருந்தாலும் நடக்கும் எதையும் எவரால் நிறுத்திவிட முடிகின்றது? ஒரு சின்ன சலனத்தைக் கூட இங்கு உருவாக்க முடிவதில்லை. சலனத்தை உருவாக்க வாய்ப்பு உள்ளவர்கள் கூட அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பது தான் உண்மை.
இந்திய ரயில்வே துறை தனியாரை அனுமதித்துள்ளது. முதல் முறையாக டெல்லியிலிருந்து லக்னோவிற்கு தனியார் ரயில் ஓடத் தொடங்கி உள்ளது.
அரசு வாங்கிக் கொண்டிருந்த கட்டணம் (AC) Rs. 1855/- Non-AC. - 1165/-
இப்போது தனியார் வாங்கும் கட்டணம் (AC) Rs. 2450/- Non-AC. - Rs. 1565/-
குளிர்சாதன வசதியில் அதிகமாக ரூபாய் 595 மற்றும் குளிர்சாதன வசதி இல்லாத இருக்கைக்கு ரூபாய் 400 அதிகமாகக் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளார்கள்.
பயண நேரம் ஒன்றாகவே உள்ளது. தனியார் ரயில் இரண்டு இடங்களில் மட்டும் நிறுத்துகின்றார்கள். அரசு ரயில் ஐந்து இடங்களில் நிறுத்துகின்றார்கள்.
எல்லோரும் பொங்குகின்றார்கள். ஆனால் எனக்குள் இருக்கும் கேள்விகள்
1. இந்த தனியார் ரயிலில் வட இந்தியர்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ய முடியுமா?
2. முன்பதிவு செய்த இடங்களில் கேள்வி கேட்பார் இல்லாமல் வந்து மொத்தமாக வந்து அமர்வார்களா?
3. ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை குதப்பிக் கொண்டேயிருக்கும் புகையிலை எச்சிலை எங்கே துப்புவார்கள்? அதற்கு ஏதும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதா?
நொந்த கட்டண குறிப்பு: திருப்பூர் முதல் சென்னைக்கு ரயில் கட்டணம் ரூபாய் 170. ஆம்னி பேருந்தில் இயல்பான கட்டணம் 700 ஆனால் பண்டிகை நாட்கள் விடுமுறை நாட்களில் 1700க்கு குறைவாக வாங்குவதில்லை. கேள்வி கேட்டால் வரிசையில் பின்னால் இருப்பவர்களுக்கு அந்த டிக்கெட் போய்விடும். அவர் பேசாமல் அதை வாங்கிக் கொண்டு சென்று விடுவார்?
இதற்கு என்ன செய்யலாம் ஒறவுகளே?
மீண்டும் சந்திப்போம். 

இட்லி வடை பொங்கல்! #47 இந்தியா சீனா பாகிஸ்தான்

மாமல்லபுரத்தில் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நேற்றும் இன்றும் informal ஆக சந்தித்துப் பேசுவதைக் குறித்து இந்திய ஊடகங்கள் அவரவர் வசதிக்கேற்ற கலர்க்கண்ணாடி வழியாக, வெவ்வேறு விதங்களில் பரபரப்புச் செய்தியாக்கிக் கொண்டு வருவதைப் பார்த்தபோது நாலைந்து குருடர்கள் யானை ஒன்றை வெவ்வேறு பகுதிகளைத்த்தடவிப் பார்த்து இதுதான் யானை என்று வர்ணித்த கதை தான் நினைவுக்கு வந்தது.



உதாரணமாக,  மோடி அரசில் தாங்கள் முன்பு அனுபவித்த ஏகபோகமான சலுகைகளை இழந்து மோடி நின்றால் குற்றம் நடந்தால் குற்றம் என்று மோடி மீதான வெறுப்பை உமிழ்வதே தொழிலாக வைத்திருக்கும் NDTV இந்த நிகழ்வைப் பற்றி இந்த 46 நிமிட விவாதத்தில் என்ன கருத்தை உருவாக்க முயல்கிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டு, முடிந்தால் உங்கள் கருத்தென்ன என்பதையும் சொல்லலாம். புதிய தலைமுறை சேனலில் மாசேதுங் பக்தர்களான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அருணன்,  மோடி வெறுப்பைக் கூட மறந்துவிட்டு மெய்மறந்து இந்த சந்திப்பைப் பாராட்டியதும் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் நேரெதிராக, இது ஒன்றும் புதிதல்ல 1956 இலேயே சீனப்பிரதமர் சூ என்லாய் மாமல்லபுரம் வந்ததையும் சாதாரண மக்களிடம் கூடக் கை குலுக்கி மகிழ்ந்ததையும்  ஒப்பிட்டு, ஏதோ போனால் போகிறது, சந்திப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான் என்று பேசியதையும் இன்று காலை பார்த்தேன். தேசியவாதியாக கறைபடாத கரத்துடன் இருந்தவராக நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருந்த, இன்றைக்கு ஈழத்தமிழர் ஆதரவு வியாபாரத்தில் முழுக்க நனைந்து தமிழ்த்தேசியம் பேசுகிறவராகிப் போன பழ.நெடுமாறன் பேசிய வீடியோ ஒன்றையும் கூடப் பார்த்தேன். அதுமட்டும் தானா? 
                                                           
 
சூ என் லாய் 1956 இல் மட்டுமல்ல, 1960 இலும் இந்தியாவுக்கு வந்திருக்கிறார். எல்லைப்பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள அவர் சொன்ன சில யோசனைகளை நேரு காது கொடுத்துக் கேட்காததன் விளைவை  1962 இல் அனுபவிக்க வேண்டி வந்தது  India missed an opportunity to resolve the issues with China in 1960 as the country "did not understand the power game", the former minister (K Natwar Singh)  said, without elaborating on his observation. முழுவிவரமும் இங்கே  தாவன்னா பாண்டியன்கள் பேசுகிற காலம் மாறிப் போய்விட்டது என்பதில் என்னென்ன மாறிவிட்டன என்பதைப் புரிந்து கொண்டு பேசியதாகக் கொஞ்சம் கூட இல்லை. 

பாவம் இம்ரான் கான்! ஹாங்காங் போராட்டங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட ஊடகங்கள் காஷ்மீர் விவகாரத்துக்குக் கொடுக்கவில்லையே என்று நேற்றைக்குப் புலம்பியிருக்கிறார். சீனாவின் ஆதரவு என்பது முழுக்க முழுக்க சீனாவின் நலன் சார்ந்ததாக மட்டுமே இருக்கும் என்கிற நிதரிசனம் அவருக்குப் புரியாதது போலவே இங்கே காங்கிரசின் உளறுவாயர் கபில் சிபலுக்கும் புரியவில்லையாம்! அக்ஸாய் சின் விஷயத்தில் தனது 56 இன்ச் மார்பை ஜி ஜின்பிங்குக்குக் காட்டட்டுமே என்று சொல்லி இருக்கிறார்.      


இப்போது இந்தியா சீனா இருநாடுகளுக்குமிடையிலான உறவுகளில் உறுத்தலாக இருப்பது எல்லைப்பிரச்சினை மட்டுமே அல்ல, சீனாவுக்கு, ஒருதலைப்பட்சமான, சாதகமாக இருக்கும் வர்த்தக உபரி இடைவெளி, இவைகளோடு பெரும் உறுத்தலாக பாகிஸ்தான் இருக்கிறது. தவிர லடாக்கில் இந்திய ராணுவம் நடத்தும் ஹிம் விஜய் என்ற மலைப்பிரதேசப் போர் ஒத்திகை வேறு கொஞ்சம் சிவப்புக்கொடியாக உறுத்தல்.  CPECக்கு மாற்றாக இந்தியா உத்தேசிக்கும் வங்காளதேசம் சீனா  இந்தியா மியான்மர் இடையிலான BCIM economic corridor உருவாகுமேயானால், இந்தியா அதில் முதலீடு செய்வதற்கும் பரஸ்பர வர்த்தக உறவுகளை மேம்படுத்திக்கொள்ள உதவியாக இ ருக்கும்.

இத்தனை உறுத்தல்களையும் தாண்டி இந்தியாவும் சீனாவும் தங்களுடைய உறவுகளை தொடர்ந்து சீரமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன என்பதுதான் கள யதார்த்தம். நல்லதே நடக்கட்டும் என்று பிரார்த்திப்போம்.

மீண்டும் சந்திப்போம்.  


  


அக்கம் பக்கம்! என்ன சேதி!

இன்றைக்கு எகனாமிக் டைம்ஸ் நாளிதழில் பிரணாப் தல் சமந்தா என்பவர் எழுதியிருக்கிற ஒரு செய்திக் கட்டுரை நிறைய if's and but's உடன் இருந்தாலுமே கூட கொஞ்சம் சுவாரசியமான சாத்தியக்கூறுகளை சுட்டிக் காட்டுகிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது, செய்தித் தலைப்பு View: India has a sudden chance to change China's Pakistan math forever

இந்த செய்திக்கட்டுரையைப் படித்ததும் Pgurus தளத்தில் வெளியாகியிருந்த இந்த கார்ட்டூன் தான் உடனடியாக நினைவுக்கு வந்தது. தெற்காசியாவின் முள்ளம்பன்றி என்று சரியாகத்தான் சொல்கிறார்கள்! 

பயங்கரவாதத்தைப் பயிற்சி கொடுத்து ஏற்றுமதி செய்கிற ஒரேநாடு பாகிஸ்தான் தான்! ஜெயிஷ் ஏ முகமது போல 48க்கும் மேலான    
தீவீரவாத இயக்கங்களை பாகிஸ்தானிய ராணுவத்தின் ISI ஆயுதங்கள், பயிற்சி கொடுத்து அண்டைநாடுகளில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்துகிறது. இங்கே இந்தியாவில் பிப்ரவரி 14 அன்று புல்வாமாவில் CRPF வீரர்கள் சென்ற வாகனவரிசை மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தி 41 வீரர்கள் உயிரைக் காவு கொண்டது போலவே, ஈரானிலும் ஆப்கானிஸ்தானிலும் தாக்குதல்களைத் தூண்டி விட்ட செய்திகளும் வந்த பின்னணியில் பாகிஸ்தானை ஆதரிக்க சீனா, சவூதி அரேபியா உள்ளிட்ட அதன் நட்பு நாடுகள் எதுவும் முன்வரவில்லை. சென்ற 26 ஆம் தேதி பாலாகோட்  ஜெயிஷ் ஏ முகமது பயிற்சிக் கூடத்தின் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல், அதன்தொடர்ச்சியாக பாகிஸ்தான் விமானங்கள் இந்திய ராணுவ நிலைகளின் மீது நடத்திய misadventure அதில் இந்தியவிமானி அபிநந்தன் ஒரு F 16 விமானத்தைச் சுட்டு வீழ்த்தி, பிறகு சிறைபிடிக்கப்பட்டதில் சர்வதேச அழுத்தம் காரணமாக மூன்றே நாட்களில் விடுவிக்கப்பட்டதும் நிகழ்ந்தது. 

CPEC என்று பாகிஸ்தானுடன் ஒரு வர்த்தக காரிடாரில் சீனா ஒரு கூட்டாளியாக இருந்தாலும் கூட, பாகிஸ்தான் செய்கிற அத்தனை அழும்புகளுக்கும் துணைநிற்க சீனா தயாராக இல்லை.

அதேபோல சவூதி அரேபியாவின் அரச குடும்பத்தின் பாதுகாவலர்களாகவும், சவூதிகளின் விமானப்படையிலும் பாகிஸ்தானிகளே இருக்கிற போதிலும் பாகிஸ்தானின் ரவுடித்தனத்தை சவூதிகள் வெளிப்படையாக ஆதரிக்கத் தயாராக இல்லை.

தாலிபான்களிடமே ஆப்கானிஸ்தானை ஒப்புக்கொடுத்துவிட்டு  ஆப்கானிஸ்தானில் இருந்து உருவிக்கொள்ளத் தயாராகி வரும் அமெரிக்காவும் கூட பாகிஸ்தானை ஆதரிக்கிற மூடில் இல்லை என்ற பின்னணியில் The Balakot air strikes have provided a big opening for India, which, if exploited effectively, have the potential to fundamentally alter the rules of play that have disadvantaged India in negotiations not just with Pakistan, but also China என்று ஆரம்பிக்கிற செய்திக் கட்டுரையை ஒருமுறை வாசித்து விடுங்கள்! நான் வாசித்தபோது 58 பின்னூட்டத் தாளிப்புகள் இருந்தன! 
 
Modi’s strong response to the terror strikes in Pulwama at the very end of his first term in office has made it clear that despite his critics, he has managed to change the fundamentals of Indian foreign and security policy in his five years in office. The use of air power to target terror camps deep inside Pakistani territory last week was the first such act after the 1971 war. It shattered the myth of Pakistan’s nuclear capability and has thrown open the possibility of India fighting a limited conventional war if need be. It has put the onus back on Pakistan for escalation. Modi’s message to Pakistan has been heard around the world and will have serious ramifications for India’s global engagement. India has not only defined these air strikes as “non-military pre-emptive” action, but has also taken Pakistan to the ICJ and worked with the Financial Action Task Force to turn the screws on Pakistan, thereby underlining the central difference between a “responsible” India and a “rogue” Pakistan. India’s Pakistan policy has been altered, perhaps unequivocally. என்று சிலாகிக்கிறது டிப்ளோமாட் தளத்தில் மார்ச் 2 ஆம் தேதி ஹர்ஷ் வி பந்த் என்பவரெழுதிய செய்திக் கட்டுரை. 

அதேநாளில் அதேதளத்தில் வெளியான இன்னொரு செய்திக் கட்டுரை Indian Air Strategy After Balakot: The China Factor
How is India’s air force placed to handle a potential war with Pakistan and a two-front war with Pakistan and China? என்ற கேள்வியை எடுத்துக் கொண்டு, பதிலை அலசுகிறது. இந்தியா, பாகிஸ்தான், சீனா மூன்று நாடுகளின் விமானப்படை வலிமை எத்தகையது? இரண்டுமுனைப்போருக்கு இந்தியா தயாராக இருக்கிறதா என்றெல்லாம் அலசியிருக்கிறார்கள்.     
ஒரு போர் வருமா? வாய்ப்பே இல்லை என்பதுதான் கள யதார்த்தம்! தவிர ஒரு போரின் முடிவை வெறும் எண்ணிக்கை மட்டுமே தீர்மானிப்பதில்லை. முதலில்  பாகிஸ்தானுக்கு ஆதரவாக, சீனா களமிறங்குமா என்பதே 9 ரூபாய் நோட்டு மாதிரியான கேள்விதான்!
அப்படி இறங்குமானால் ......
சீனாவுடன் தங்கள் ஸ்கோரை செட்டில் செய்ய, அமெரிக்கா, ஜப்பான் முதலான நாடுகளும் களத்தில் இறங்கலாம்! வேறுபல நாடுகளும் இந்திய ஆதரவு நிலை எடுக்கலாம்!
போர் என்பது தமிழக அரசியல் வாதிகள் செய்வது போல வெறுமனே வாயால் சுடுகிற வடையல்ல!
          
இது அக்கம் பக்கம்! என்ன சேதி! பக்கங்களில் இன்றைக்கு எழுதியது. திரட்டிகளில் இன்னமும் திரட்டப் படவில்லை. நண்பர்கள் பிடித்திருந்தால் இந்த வலைப்பக்கங்களை bookmark செய்துகொள்ளும்படி வேண்டிக் கொள்கிறேன்