தேர்தல் வினோதங்கள்! தெளிவாக முடிவெடுங்கள்!


தேர்தல் வினோதங்கள்,தேர்தல் கூத்துக்கள் என்று தொடர்ச்சியாக இந்திய ஜனநாயகம் தொடர்ந்து முதிர்ச்சி அடையாமலேயே இருப்பதைக் குறித்தும்,. முதிர்ச்சியடைய விடாமல் தடுப்பதில் இந்திய அரசியல்கட்சிகளுடைய பங்கைப் பற்றியும் இந்தபக்கங்களில்  பேசிக் கொண்டு இருக்கிறோம்.

நேரு முதல் அடுத்து வந்த தலைவர்கள் எவரும்,ஜனநாயக நெறி முறைகளைக் கட்டிக் காப்பாற்றவோ, ஜனங்களைத் தயார் செய்யவோ முனைந்ததே இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை.ஜனநாயகம் என்பது இங்கே ஒரு கேலிக் கூத்தாகவே ஆரம்பித்து,கேணத்தனத்தின் உச்ச கட்டமாகவே வளர்ந்து கொண்டிருப்பது அதைவிடப் பெரும் கொடுமை.

ந்த வாக்குச்  சீட்டு என்பது என்ன, அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் இன்றைக்கும் கூட ஜனங்களுக்கு ஒரு தெளிவு இல்லாமல் இருப்பதே இதற்கு சான்று.

து எங்கே கொண்டுபோய் விட்டிருக்கிறதென்றால், ஜனநாயகம் பற்றி வாய் கிழியப் பேசுகிற கட்சிகளுக்குள்ளேயே உட்கட்சி ஜனநாயகம் என்பதோ, கருத்துப் பரிமாற்றம், உறுப்பினர்களுடைய கருத்துக்கு  மதிப்புக் கொடுப்பது என்பதோ அறவே இல்லாமல் போனதுதான்! ஒரு தலைவரைப் பின் பற்றுகிறவர்கள் என்றால், அவருக்கும் அவருடைய வாரிசுகளுக்கும் அடிமைகள் என்ற அளவிலேயே மாற்றமடைந்து கொண்டிருப்பதுதான் இங்கே பெரும்பாலான அரசியல் கட்சிகளுடைய யோக்கியதை!

நம்பிக்கை, விசுவாசம் என்பதற்கும் அடிமைத்தனத்துக்கும் வித்தியாசம் இருப்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாத அளவில் தான் இங்கே கட்சித்தலைவர்கள், தொண்டர்களுடைய யோக்கியதையும் இருக்கிறது.

இந்த வீடியோவைப்பாருங்கள்! இந்திய ஜனநாயகம், என்ன மாதிரித் தலைவர்களை உருவாக்குகிறது என்பதைப் பாருங்கள்!



சினிமாவில் கேப்டன் என்று அழைத்து விட்டார்களாம்! எவனோ போக்கத்த நாடி ஜோதிடன், உனக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருகிற யோகம் இருக்கிறது என்று விட்ட பீலாவை நம்பி இந்த நபரும் அரசியல் களத்தில் குதித்துவிட்டார்! தனிக்கட்சி ஆயிற்று! அப்படி ஒன்றும் தெளிவாகப் பேசுகிற ஆளும் இல்லை!தெளிவான கொள்கை, பார்வை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை! ஆனாலும், ஜனங்களுடைய பலவீனத்தை நாடி பிடித்துத் தெரிந்து வைத்திருப்பதில், ஒரு எம் எல் ஏ ஆகவும் ஆகிவிட்டார். இரண்டு கழகங்களையும் பிடிக்காதவர்கள், ஏதோ ஒரு வேகத்தில் இந்த ஆளுக்கு வாக்கு அளித்துவிட, நாற்பத்தொரு சீட் கிடைத்த போதை இன்னும் தெளியவே இல்லை போல இருக்கிறது.


தினமணி  தலையங்கம்:  தேர்வல்ல, திணிப்பு!

First Published : 30 Mar 2011 02:26:15 AM IST


மிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் சார்பில் அறிவிக்கப் பட்ட வேட்பாளர்கள் மீதான எதிர்ப்பு முன்னெப்போதும் இல்லாதவகையில் பல இடங்களில் பல விதமாக வெளிப்பட்டது. இது எப்போதும் எல்லா தேர்தல்களின்போதும் நடப்பதுதான் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், அவ்வாறாக ஒதுக்கிவிடும் அளவுக்கு நீர்த்துப்போன எதிர்ப்புகளாக இவை இல்லை.

ழக்கமாக இத்தகைய எதிர்ப்புகள், வாய்ப்புக் கிடைக்காத ஒரு நபரின் தனிப்பட்ட கூக்குரலாக இருக்கும். அதுவும்கூட மெல்ல ஓய்ந்துபோகும். ஆனால், இந்தத் தேர்தலின்போது இத்தகைய எதிர்ப்புகள் போராட்டமாகவும், சில இடங்களில் வன்முறைக் களமாகவும் மாறியது. சில இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னையாகவும் மாறியது. தமிழ்நாட்டில் பரவலாக எல்லா தொகுதிகளிலும், எல்லா கட்சிகளிலும் இத்தகைய போக்கு காணப்படுகிறது.

.தி.மு.க.வின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியானபோது, கூட்டணிக் கட்சிகள் தங்கள் தொகுதிகள் பறிபோனதற்காக ஆலோசனை நடத்த திண்டாடிக்கொண்டிருந்த வேளையில், தமிழ்நாடு முழுவதும் பல வேட்பாளர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. அ.தி.மு.க.வின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வந்தபோது, எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட நபர்களில் சிலரது பெயர்கள் எடுக்கப்பட்டிருந்தன. எதிர்ப்புக்குப் பலன் இருந்தது.

.தி.மு.க. பட்டியலில் தூத்துக்குடி தொகுதியைப் பொறுத்தவரை மூன்று முறை வேட்பாளர் பெயர் மாறியது. இது வெறும் கட்சித் தலைமைக்கு ஏற்பட்ட குழப்பம் மட்டுமே அல்ல. கட்சித் தொண்டர்களின் கொதிப்பைக் கருத்தில் கொண்டதால் ஏற்பட்ட மாற்றம் என்றும் கருத இடம் இருக்கிறது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட வேட்பாளர் பட்டியலிலும் அதிருப்திகள் இருந்தன. ஆனால், பட்டியல் மாற்றப்படவில்லை. அக்கட்சித் தொண்டர்களும் சில இடங்களில் எதிர்ப்புத் தெரிவித்து, குரல் எழுப்பியது எதிர்க்கட்சியின் தொலைக்காட்சிகளோடு முடிந்துபோயின. வழக்கமாக இந்த விவகாரங்கள் தொலை பேசியிலேயே சரிக்கட்டப்படும். இப்போது போட்டி வேட்பாளர் மனுத் தாக்கல் செய்வது வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையில் இருந்ததால், தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளிப் படையாக வேண்டுகோள் விடுத்து, அறிக்கை வெளியிடும் நிலைமை ஏற்பட்டது.

ச்சபட்சமான களேபரம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலின்போதுதான் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரின் உருவ பொம்மையை எரிக்கும் அளவுக்கு வெறுப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. மாற்றி அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மனுத்தாக்கல் செய்ய முடியாத படிக்கு என்னவெல்லாமோ நடந்தது.

ம்யூனிஸ்ட் கட்சிகளும்கூட இதில் விதிவிலக்கு அல்ல. ஒரு தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியின் இப்போதைய எம்எல்ஏ களத்தில் இறங்கியதால் அவரைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்கள். இருப்பினும் அவர் போட்டி வேட்பாளராகக் களத்தில் இருக்கிறார்.

கேரள மாநிலத்தில், முதல்வர் அச்சுதானந்தன் பெயரே வேட்பாளர் பட்டியலில் இல்லை. அவரது ஆதரவாளர்கள் மறியல் போராட்டம் நடத்திய பிறகுதான் அவருக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது என்கிற நிலைமை.

ம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி கழகங்கள் வரையிலும் கட்சித் தலைமைகளால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அப்பகுதித் தொண்டர்களின் தேர்வாக இல்லை. கட்சித் தலைமை அல்லது குழுவின் தேர்வாக இருக்கிறது. தலைமை அறிவித்தால் அவருக்காக அந்தப் பகுதியில் உள்ள தொண்டர்கள் வரவேற்றுப் பணியாற்ற வேண்டும் என்கிற மனப்பான்மைக்கு எதிரான குரல்தான் எதிர்ப்பு மனோபாவமும், போட்டி வேட்பாளர்களும்!

ட்சியில் தீவிரமாகப் பணியாற்றாத ஒருவரை வேட்பாளராக வலிய அறிவித்தால் எதிர்க்கிறார்கள். உள்ளூர் நபராக இல்லை என்றால் எதிர்க்கிறார்கள். மிகை பலம் படைத்த கட்சித் தொகுதியை கூட்டணிக் கட்சிக்குக் கொடுத்தால், நாங்கள் என்ன இலவு காத்த கிளிதானா என்று கேட்டு எதிர்க்கிறார்கள். இவை ஒருவகையில் ஆரோக்கியமான அரசியலுக்கு ஒரு வெள்ளோட்டம் எனலாம்.

ரு தொகுதியில், குறிப்பிட்ட கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் முதலில் அந்தத் தொகுதியில் உள்ள கட்சிக்காரர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற வேண்டும் என்கிற நிலைமை ஏற்பட வேண்டும். அத்தகைய உள்கட்சி ஜனநாயகம் ஏற்படுமேயானால், ஒரு கட்சித் தலைமை தனது மனைவி, மகன், மைத்துனர், மாப்பிள்ளை, பேரன் என்று நெருங்கிய உறவினர்களுக்குத் திடீரென ஓர்இரவில் வாய்ப்புகளை வழங்கிவிட முடியாது அல்லது தலைமைக்கு நெருக்கமானவர்களுக்குப் பணத்தை அள்ளிக் கொடுத்து, பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்த்து விடவும் முடியாது. ஒருகட்சித் தலைமை தன்னிச்சையாக வேட்பாளரைத் தேர்வு செய்யும் போக்குக்குத் தடை ஏற்பட்டால் மட்டுமே, குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

மெரிக்காவில் இத்தகைய உள்கட்சி ஜனநாயக முறை நடைமுறையில் இருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்வில் ஒருவர் போட்டியிட்டால் முதலில் அவர் கட்சியின் வேட்பாளருக்கான தேர்தலில் வெற்றி பெற்றால்தான், அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். இதனால் அவர் தனக்கான செயல்திறன், சொந்தச் செல்வாக்கு இல்லாமல் பிறப்புரிமையால் பெறும் வாய்ப்பாக இருக்காது. அல்லது தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு என்பது அதிர்ஷ்டத்தால் அமையாது.

ந்திய அரசியல் கட்சிகளிலும் அத்தகைய உள்கட்சி ஜனநாயகம் உருவாகும் என்றால், உண்மையான அரசியல்வாதிகள் மட்டுமே களத்தில் எஞ்சி நிற்பார்கள். அவர்கள் கட்சிக்குள் பெருவாரியான தொண்டர்களின் ஆதரவைப் பெற்றவர்களாக இருப்பார்கள். உள்ளூர் கட்சித் தொண்டர்களுக்கே பிடிக்காத ஒரு நபரை மக்களிடம் திணிக்கும் ஜனநாயக வன்முறை நடக்காது.

ப்படித்தினமணி நாளிதழில் வெளியாகி இருக்கும் தலையங்கம் ஒரு யோசிக்கப்படவேண்டிய அம்சத்தை வலியுறுத்திச் சொல்லி இருக்கிறது. தேர்தல் முறையில் இருக்கும் குழப்பங்களை, அரசியல் கட்சிகளில் செய்யவேண்டிய களையெடுப்பை,படிப்படியாக ஜனங்களாகிய நாமே செய்ய முடியும்! வலியுறுத்த முடியும்!

இந்தப்பதிவில்
நண்பர் சிவா ஒரு கேள்வி கேட்டிருந்தார்.

\\
திமுக அதிமுகவை விட இந்தமாதிரி நேற்று முளைத்த காளான்களை அப்புறப்படுத்துவது எளிது, உடனே செய்யப்படவேண்டியதும் கூட! \\
எப்படி அப்புறப்படுத்துவது, கூப்பிட்டு 41 சீட்டு கொடுக்கறாங்க..சரி இது போன்ற காளான்களால் வரும் ஆபத்தை அப்புறம் பார்ப்போம்.
திமுக,அதிமுக என வளர்ந்த சுயநல அரசியல் பண்ணும் விஷ விருட்சங்களை எப்படித்தான் அழிப்பது அல்லது அடக்குவது?

அப்புறப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. நாட்டு மக்களுக்கு சேவைஆற்றும் உரிமை இவர்களுக்கு இல்லையா:))

அங்கே சொன்ன பதில் இது.

மிகவும் எளிது சிவா! ஸ்டெப் பை ஸ்டெப்பாகத் தான் இப்போதுள்ள தேர்தல் முறையில், இதை செய்ய முடியும்!

கொஞ்சம் பொறுமை, ஒரு தெளிவான பார்வை இருந்தால், இப்போதுள்ள தேர்தல் முறையிலேயே, இந்த விஷ விருட்சங்களை வேரோடு சாய்க்கலாம்.

Process of elimination! ஒரு மருத்துவர் கையாளுகிற மாதிரித் தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்! ஒரு மனிதனுக்கு வியாதி! ஒரே நேரத்தில், மூன்று நான்கு கோளாறுகள். தேர்ந்த மருத்துவன் செய்வது ஒரே நேரத்தில் அத்தனை கோளாறுக்கும் மருந்து கொடுப்பதல்ல. இருப்பதிலேயே அதிகமான கோளாறுக்கு மருந்து, நோய் எதிர்ப்புச் சக்தி பெறக் கொஞ்சம் டானிக் மாதிரி வைத்தியம். பிரதானமான கோளாறை குணப்படுத்திவிட்டால், மிச்சமிருப்பதை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொள்ளலாம் என்ற மாதிரி மருத்துவம் இருக்கும்.

இப்போது அகற்றப்பட வேண்டிய பிரதானமான விஷ விருட்சம் எது என்று நினைக்கிறீர்கள்? என் பார்வையில், திமுக, அதிமுக இரண்டுமே இல்லை! அது காங்கிரஸ் தான்! இந்த நாட்டில், ஜனநாயக நெறிமுறைகளைக் குழிதோண்டிப் புதைத்து, ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பது காங்கிரஸ் தான்.ஆக, முதலில் அகற்றப்பட வேண்டியது காங்கிரஸ் தான்!

காங்கிரஸ், இங்கே தமிழக சட்ட மன்றத் தேர்தல்களில் பிரதானம் இல்லையே என்கிறீர்களா? காங்கிரசும் அதன் கூட்டாளிகளும் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்! இப்போது ஒரு வழி கிடைப்பது தெரிகிறதா? இதை செய்கிற அதே நேரம், களையெடுக்கும் வேலையும் தொடங்குகிறது! பாமக, தேதிமுக, விசி, ஜாதிக்கொரு சங்கம் என்பதுபோய், அதிலும் ஏகப்பட்ட பிரிவுகள் இவை அத்தனையையும் ஆரம்ப நிலையிலேயே கில்லி எறிவது தான் அது! விஷ விருட்சமாக வளர்ந்துவிட்டதை முற்றிலும் வெட்ட நாளாகலாம்!ஆனால், விஷ விருட்சங்களை வெட்டவே விடாமல் அதைப் பாதுகாத்து நிற்கும் சந்தர்ப்பவாதக் காளான்களை அகற்றுவதில் என்ன தடை, தயக்கம் இருக்க முடியும்?

அடுத்து முக்கியமான உங்கள் சந்தேகம்....!

//
அப்புறப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. நாட்டு மக்களுக்கு சேவைஆற்றும் உரிமை இவர்களுக்கு இல்லையா:))//

ஸ்மைலி போட்டுக் கேட்டாலும், இல்லை என்பதுதான் என்னுடைய பதில். இவர்கள் இதுவரை என்ன சேவை செய்து கிழித்துவிட்டார்கள்?

வாக்களிப்பது உங்கள் உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட!
வாக்களிப்பது எவருக்கு என்பதில் தெளிவாக இருங்கள்!
வாக்குகள் விற்பனைக்கல்ல! தன்மானத்தை ஒருபோதும் விற்கமாட்டோம்!

ஒரு நல்ல மாற்றம் வர வேண்டுமானால்.......!

காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு எதிராக வாக்களியுங்கள்!

விஜயகாந்த், விசி, பாமக, சாதிக்கு நாலாக முளைத்திருக்கிற சங்கங்கள், கட்சிகள்   போன்ற ஒட்டுண்ணிகள், காளான்களை முளையிலேயே கிள்ளி எறியுங்கள்!



 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!