வெள்ளிக் கிழமைக் கேள்விகள்! படம் பார்த்துப் பதில் சொல்லுங்கள்!


இணையத்தில் த்தூ..த்தூ என்று  துப்பிக் கொண்டு உலா வந்த பெண்ணீயக் காவலர்களுக்கு இந்த செய்தி உவப்பாக இருக்குமோ என்னவோ!? கடைசித் தருணங்களில் கல்கத்தா நகர சபையின் மேயர் பதவியைக் கூடக் காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்து மம்தா அலையைத் தடுக்க காம்ரேடுகள் முயன்றதாக செய்திகள் வந்தன. தனித்து நின்ற  காங்கிரஸ் மம்தாவின் ஜோல்னாப் பையைத் தூக்கிக் கொண்டு பின்னாலே வருகிற நிலைமைக்கு வந்தது சாபமா வரமா?


அதனால் இன்னொரு வித்தியாசமான படம்! நாயைக் கூட்டிக் கொண்டு போனால் செய்தியல்ல! நாயைத் தூக்கிக் கொண்டு போனால்..!?


இதிலே அரண்டு போனது யார்னுதான் தெரியலே!?

சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்!  ஒரு வழியாக எண்ணெயைக் கடலில் கொட்டி, அமெரிக்காவுக்கு கொண்டு வந்தாயிற்று!அப்புறம் சுற்றுச் சூழல், எவர் எப்படி கெட்டுப் போனால் எனக்கென்ன?



ஒபாமா வாங்க! வந்து எதுனாச்சும் செய்யுங்க! 


என்னது! எஸ் எம் கிருஷ்ணா அங்க வந்து கிளாஸ் எடுக்கிறாரா? மீ  தி எஸ்கேப்பு!



 

5 comments:

  1. நாய் குழந்தையாகிப்போனது குழந்தை நாயாகிப்போனது என்ன கொடுமை ஸார் இது !

    ReplyDelete
  2. வாருங்கள் பனித்துளி ஷங்கர்!

    நச்சென்று உறைக்க வேண்டும் என்பதற்காக, ப்ரவோக் செய்து எடுக்கப் பட்ட படம் தானே அது! வலைத் தள லிங்க் அங்கேயே இருக்கிறது.

    எது பொருளோ அதைக் கருத்தில் கொள்ளாமல், பொருளில்லாத வெற்று வாதங்களை முன்வைத்து நீட்டி முழக்கிக் கொண்டு இரண்டு பிரிவாகக் கலகக் கொடி பிடித்து எழுதிக் கொண்டிருக்கிற கொடுமையை விடவா இது பெரிது?

    ReplyDelete
  3. :)

    நாய் இடுப்பிலேயும் குழந்தை கையிலும்.
    கலக்கல். விலங்குகளையும் குழந்தைகளாக பார்க்கும் அந்த நல்ல உள்ளம் வாழ்க

    ReplyDelete
  4. நாய்க் குட்டியைத் தூக்கிக் கொண்டு குழந்தையை நடத்தி அழைத்துச் செல்லும் படத்தை ரசித்தேன்..

    ReplyDelete
  5. வாங்க கோவி! கோவமெல்லாம் தீர்ந்ததா?

    வாங்க ஸ்ரீராம்!

    இந்தப் படத்தில் வேறு ஒன்றைக் கவனித்துப் பார்த்தீர்களா? அந்த அம்மாக்காரி தன்னுடைய குழந்தையை நடக்க விட்டு நாயைத் தோளில் தூக்கிச் சுமப்பது, இங்கே சில அம்மாக்காரிகள் இருக்கிற வேலையெல்லாம் விட்டு விட்டு, பிரச்சினையைத் தோளில் தூக்கிக் கொண்டு நடப்பது மாதிரியே இல்லை?

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!