மம்தா பானெர்ஜி நாடகம்! தேமுதிகவின் தற்கொலை முயற்சி! நாம் தமிழர் கட்சி சீமான்!

தோற்று விடுவோமோ என்கிற பயம் வரும் போதெல்லாம் அரசியல்வாதிகள், தங்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதாக நாடகம் நடத்துவது, நம்மூர் அரசியலின் வாடிக்கையாகிப்போன வேடிக்கை. லேட்டஸ்ட்டாக அந்த நாடகத்தை நடத்தி அனுதாபம் தேட முயற்சித்திருப்பவர் வங்கத்தின் பெண்புலி என்று சொல்லிக்கொள்கிற மம்தா பானெர்ஜி. நந்திகிராம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன் 18 கோவில்கள் மற்றும் ஒரு மசூதிக்கு விசிட் அடித்திருக்கிறார். முதல்முறையாக தன்னுடைய பிராமண அடையாளத்தை வெளிப்படுத்திக் கொண்டது பலவீனத்தின் முதல் அடையாளம். அதேமூச்சில், ஒரு தாக்குதல் நாடகமும் நடத்திக் கொண்டது மிக வினோதம்.


வீடியோ 21 நிமிடம். "தாக்குதல் நடந்ததாக கூறி மக்களிடம் அனுதாபம் தேட முதல்வர் மம்தா பானர்ஜி முயலுகிறார். தாக்குதல் முயற்சி, சதி திட்டம், கொலை முயற்சி இது எல்லாமே தோல்வியின் வெளிப்பாட்டை காட்டுகிறது. அந்நேரத்தில் போலீஸே இல்லை என மம்தா பானர்ஜி கூறுவதை கேட்டால் சிரிக்கதான் தோன்றுகிறது. தேர்தல் வெற்றி பெற முடியாத நிலையில் அதனை மறைக்கவே இதுபோன்ற நாடகத்தை அவர் அரங்கேற்றுகிறார்".என்று கிண்டலாகச் சொல்கிறார்  சோனியா காங்கிரசின் அதிர் ரஞ்சன் சவுத்ரி. 


"Not even one Police official was present. 4-5 people intentionally manhandled me in presence of public. No local police present during program not even SP. It was definitely a conspiracy. There were no police officials for 4-5 hrs in such huge public gathering" says WB CM இது ANI twit. மம்தா சொல்வது நம்புகிற மாதிரியா இருக்கிறது?

இதுவும்கூட பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த உத்திதானோ? இங்கே தமிழகத்திலும் இப்படி ஒரு மலினமான ஸ்டன்ட் அரங்கேறுமோ?  


கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவுக்கும் கூட களம் எப்படி யதார்த்தம் எப்படி என்பது புரிந்திருப்பது மிக மிக ஆச்சரியம்! 

ஆனால் ரங்கராஜ் பாண்டேவுக்குத் தன்னை அரசியலில்  முதிர்ச்சியான சாணக்யனாகக்  காட்டிக்கொள்வதில் அங்கங்கே கொஞ்சம் சறுக்கல் ஏற்படுகிறதோ? 

ரங்கராஜ் பாண்டே தேமுதிகவின் தற்கொலை முயற்சி பற்றி விளக்கும் 45 நிமிட வீடியோ. மனைவி, மச்சான், மக்கள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது எத்தனை சத்தியமான வாக்கு! ஆனால், பாண்டே கொஞ்சம் சொன்னதையே திருப்பிச் சொல்லி அறுக்கிறார் என்று முகநூலில் ஒரு கமென்ட் பார்த்தேன். அரசியல் என்றாலே ஒரே விஷயத்தைத் திரும்பத்திரும்ப பேசுவது, செய்வது தானே!   


என்னய்யா இது.. பாவம் ஏதோ ஒளறிகிட்டு அலையுதுன்னு பார்த்தா.. Narayanan Swaminathan ஜி.. பொசுக்குன்னு முழுசா மரை கழண்ட கேஸு.. அடுத்த படிய ஹாஸ்பிடலில் அடமிட்தான் பண்ணனும்... இல்லைன்னா துணியை கிழிச்சுண்டு அலையும்னு சொல்லிட்டாரு..? என்று முகநூலில் அதிசயிக்கிறார் திருமதி எஸ்.பிரேமா.  .

_________________

ஒரு மருத்துவ நண்பர் சொன்னார் சீமானுக்கு இருப்பது mythomania என்ற வியாதி.. 

பொதுவாக எல்லா மனிதர்களும் எப்போதாவது தேவை ஏற்படும் போது ஒன்றிரண்டு பொய்கள் சொல்வது சாதாரணமானது தான். ஆனால் தேவையே இல்லாமல் தான் பேசும் எல்லா விஷயங்களிலும் பொய் கலந்து பேசுவது என்பது ஒரு மனோவியாதி. இவர்களை pathological liar என்பார்கள்.இவர்களால் பொய் கலக்காமல் பேசவே முடியாது. Klepto mania என்று திருடும் வியாதி உண்டு.. பணக்கரர்களாக இருப்பார்கள்.. ஆனால் சின்ன சாக்லேட்டை திருடுவார்கள்.. அதை காசு கொடுத்து வாங்க முடியும். ஆனால் அந்த திருட்டுத்தனம் தரும் த்ரில் அதனால் சுரக்கும் ஹார்மோன்களுக்கு அடிமையாக இருப்பார்கள். 

அதே போலத்தான் ரசிகர்கள் அடிக்கும் விசிலுக்கும் கைதட்டலுக்கும் அது கொடுக்கும் போதைக்கும் அடிமையாக ஆகிவிட்டார் சீமான்.. அதனால் ஓரிருவர் இருக்கும் பேட்டியில் கூட பொய் பேசாமல் அவரால் இருக்க முடிவதில்லை.. ஒரே பொய்யை சொன்னால் அதே ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை எனும் போது புதிது புதிதாக பொய்களை இட்டு கட்டுகிறார்.. இது முற்றிப்போனால் மனநல மருத்துவமனையில் சேர்ப்பது தான் ஒரே தீர்வு என்றும் அவர் கூறினார்.

Google செய்து  கிடைத்த தரவுகளை பார்த்தால் பத்து பொருத்தமும் அப்படி பொருந்துகிறது..!

மீண்டும் சந்திப்போம்.  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!