கொஞ்சம் செய்தி! கொஞ்சம் அரசியல்! #ரத்தத்தீவு

ஐமுகூட்டணிக்குழப்பம் ஆட்சியில் இருந்த தருணங்களில் தினமணி நாளிதழில் வெளியாகும் தலையங்கங்களை இந்தப்பக்கங்களில் அப்படியே எடுத்துப்போடுவதுண்டு. காரணம் அதன் முக்கியத்துவம், ஜனங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை கவனப்படுத்த வேண்டிய இதழியல் தர்மம் என்பதுதான் என்பதை ஆரம்பநாட்களிலிருந்தே வாசித்து வரும் நண்பர்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்றே நம்புகிறேன். நேற்றைய தினமணியில் வெளியாகியிருக்கும் தலையங்கமும் கூட  அந்தவகையில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இந்தத் தலையங்கம் சாடியிருக்கிற எதிர்க்கட்சிகளின் முகம் சுழிக்க வைக்கிற, பொறுப்பற்ற விதத்திலான பேச்சும் செயலும் மாறிவிடப்போவதில்லை என்றாலும் அரசியிலில் ஒதுக்கித்தள்ள வேண்டியவர்கள் யார் என்பதை நமக்கு அடையாளம் காட்டுகிறதே! அதுவே இந்தத்தலையங்கத்தின் முக்கியத்துவம்.

       
சவுக்கு இணையதளம் போய்வாசிப்பதை நிறுத்திப் பல ஆண்டுகளாகிறது என்றாலும் கூட, ஒரு மீம் சன் டிவியில் வேலைபார்த்த பலரை  வேலையைவிட்டே தூக்கப்படுகிற அளவுக்குக் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது என்பதான இந்தப்படம் KDbrothers   யோக்கியதை என்ன என்பதை சுருக்கமாகச் சொல்லிவிடுகிறது. இந்தக்கூட்டம் தான் அடடே! மதி வரைந்த ஒரு கார்டூனுக்காக வேலைநீக்கம் செய்யப்படுகிற நிலைக்கும் காரணமாக இருந்தது.


தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து இப்படி ட்வீட்டர் காமெடி செய்து கொண்டிருக்கிறார்! சன் டிவிக்கே உபதேசம்! குரங்குக்குப் புத்திசொன்ன தூக்கணாங்குருவி கதை தெரியாது போலிருக்கிறது!   


அந்தர்பல்டி அடிப்பதில் இந்திய அரசியல்வாதிகளுக்கு ஈடு இணையே இல்லை என்பதை மம்தா பானெர்ஜி தெளிவாகவே மீண்டும் நிரூபித்திருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்புவரை கொரோனா வைரஸ் தொற்று விஷயத்தில் கண்காணிக்க அனுப்பப்பட்ட மத்தியக்குழுவுடன் ஒத்துழைக்க மறுத்து மாநில விவகாரங்களில் குறுக்கீடு, சாகச சுற்றுப்பயணம், அனுமதிக்க முடியாது என்று முழங்கிக் கொண்டிருந்த மம்தா பானெர்ஜி நேற்றே பெட்டிப்பாம்பாய் அடங்கிவிட்டார். மேற்குவங்கத்தின் தலைமைச் செயலாளர் மிகவும் பவ்வியமாக மத்திய அரசுக்குக் கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார். The West Bengal government has said "it is not a fact" that there was no cooperation with the Central team deputed to assess the Covid-19 situation in the state and gave an assurance that it will abide by all Union government orders on lockdown. The assurance came hours after the Centre accused the Mamata Banerjee-led West Bengal government of obstructing a Central team deputed to assess the coronavirus ground situation. அமித் ஷா உள்துறை அமைச்சராக இருப்பது அடிவயிற்றைக் கலக்கிவிட்டது போல! 


மரீச்சபி படுகொலைகள்! 1979 வாக்கில் மார்க்சிஸ்டுகள் மேற்கு வங்கத்தை ஆண்டுகொண்டிருந்த நேரத்தில்  நடத்தப்பட்ட  படுகொலைகள் குறித்து நாற்பதாண்டுகள் கழித்து சில புத்தகங்கள் வெளி வந்திருக்கின்றன. மார்க்சிஸ்டுகளால் இத்தனைவருடங்கள் மூடி மறைக்கப்பட்ட படுகொலைகளைப் பற்றி வாயமொழி சாட்சியங்கள், விவரங்கள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. ஏற்கெனெவே இது குறித்து B R  மஹாதேவன் எழுதிய ஒரு புத்தக அறிமுகக்குறிப்பை  இந்தப்பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறேன். Blood Island: An Oral History of the Marichjhapi Massacre is the story of our forgotten history. It is the story of the stateless clashing with the state. And the devastation thereafter. It may remind the listener of the Jallianwala Bagh killings. Except that this one, despite taking place in independent India, was never investigated. Not even shoddily. No one, therefore, knows how many people died in those 72 hours of savagery, organised and orchestrated by the state government of the day.
 
Though the official figure says less than 10 people died, locals and survivors put the number as high as 10,000. And those who escaped the bullets were forced to leave for what was “more like a concentration camp or a prison”, as Amitava Ghosh writes in The Hungry Tide. Thousands more perished in transit and at these camps.  வீடியோ 46 நிமிடம். மறக்கடிக்கப்பட்ட அந்தப் பழைய கதையைக் கொஞ்சம் கவனமாகக் கேட்டுத்தான்   பாருங்களேன்!

மீண்டும் சந்திப்போம்   

2 comments:

  1. இந்த லச்சணத்தில
    கருத்து சுதந்திரம்... அப்பிடின்னு கதறிக் கண்ணீர் உடுவாங்க....

    ReplyDelete
    Replies
    1. திருடன் திருடன் என்று கூவுகிறவர்களில் பெருங்குரல் திருடனுடையது என்று சொல்லக் கேட்டதுண்டே!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!