இட்லி வடை பொங்கல்! #67 உண்மையைக் கையாளுவது! ஊடகப்பொய்கள்! மீண்டும் பப்பு!

கொரோனா தொற்றைக் கையாளுவதை விட கொரோனா வைரஸ் பற்றி ராகுல் காண்டி மாதிரியான திடீர் மேதாவிகள் வெளியிடும் அறிக்கைகள், அரசுக்கு ஆலோசனைகள் இவற்றைக் கையாளுவது எப்படி என்பதுதான் உண்மையிலேயே இப்போது தலையாய பிரச்சினை என்றால் நம்புவீர்களா?  ஊடக விவாதங்களைக் கொஞ்சநாள் காதில் வாங்கிக் கொள்ளாமல் கழித்துவிட்டு இப்போது மறுபடியும் கேட்க ஆரம்பித்ததில் எனக்கு எழுந்த பிரச்சினை அதுதான்!

 

சேகர் குப்தாவுக்கும் என்னைப்போலவே கொஞ்சம் தடுமாற்றம் இருந்திருக்கும் போல .இந்த 13 நிமிட வீடியோவில் செய்திகளை எப்படிப்புரிந்து கொள்வது என்பதை 
 டாம் க்ரூஸ் படமொன்றில் வருகிற You Can't handle the Truth  வசனத்தை வைத்து விளக்க முயற்சி செய்திருந்தது கொஞ்சம் சுவாரசியம்! யாருமே உண்மையை நம்புவதற்குத் தயாராக இல்லை, ஆனால் மோசமான செய்தியை அப்படியே ஏற்றுக் கொள்கிற மனோநிலையில் தான் இருக்கிறார்கள் என்ற ரீதியில் சேகர் குப்தா கொரோனா வைரஸ் தொற்று புள்ளிவிவரங்கள் பற்றிச் சொல்கிறார் . சின்ன வீடியோதான், கொஞ்சம் பாருங்களேன்! 

Elon Musk [ Tesla ] 1000 வென்டிலேட்டர்கள் வாங்கி இருப்பதாகவும்..அவற்றை ..காலிஃபோர்னியா மருத்துவமனைக்கு கொடுக்க இருப்பதாகவும் அறிவித்து..3 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் வென்டிலேட்டர்கள் எதுவும் தங்களுக்கு வரவில்லை என்று மருத்துவமனை சொன்னதாக...CNN செய்தி வெயிட்டிருந்தது .

இதை பார்த்த Elon Musk..உடனடியாக... '' நீங்கள் அனுப்பியிருந்த வென்டிலேட்டர்கள் நன்றாக இயங்குகின்றன. உதவியதற்கு நன்றி'' என்று .மருத்துவமனையிலிருந்து தனக்கு வந்த e mail-ஐ ட்விட்டரில் வெளியிட்டதோடு..இன்னும் CNN எல்லாம் செய்தி ஊடகமாக இயங்குவது ஆச்சரியமளிக்கிறது ! என்றும் கூறி இருக்கிறார். உண்மை தான்.

இதில் ..வேடிக்கை என்னவென்றால்...Twitter-ரே பெரிய பொய் சொல்லி தான். Twitter செய்கிற அரசியலுக்கும், அதன் அப்பட்டமான அரசியல் சார்புகளுக்கும் ...அதனை.. CNN-ன் பெரியண்ணன் என்று கூட சொல்லலாம் 

சீன வைரஸ் பேரிடர் ..பலவற்றையும் / பலரையும் வெளிப்படுத்தி புரியவைத்துக் கொண்டிருக்கிறது.
#ElonMusk #Tesla #CNN #ChineseVirus

CNN கிடக்கட்டும்! சாதாரண செய்திகளைக் கூட இங்கே நம்மூர் சேனல்கள் எப்படித் தலையைப் பிய்த்துக்கொண்டு மோடி எதிர்ப்பு செய்திகளாக மாற்றலாம் என்று 24 மணிநேரமும் பாடுபடுகிறார்கள் என்பதைக் கொஞ்சம் பாருங்களேன்! ஊடகங்கள் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்பவை என்பது தனியாகச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? !!


  

நீலம் பாண்டே இன்றைய The Print தளத்தில் இப்படிப்படம் போட்டுச் சொல்வது ஒன்லைனராகச் சொல்வதானால் பப்பு ரிடர்ன்ஸ் என்பதுதான்! எந்தச் செய்தித்தாளிலும் பார்க்கவில்லையே என்று பிராண்டிக் கொள்ளாதீர்கள்! நேரு மற்றும் வாரிசுகளின் செயல்பாடுகளே கொஞ்சம் விசித்திரமானவை பலநேரங்களில் மிகவும் விபரீதமானவை என்பதை நேரு குடும்ப வரலாறே சொல்லும். அந்தவகையில் சோனியாG இன்றைக்கு டம்மிப்பீஸ் மன்மோகன் சிங் தலைமையில் ஒரு குழுவை அமைத்திருக்கிறார். ராகுல் காண்டி இடம்பெற்றிருக்கிறார். வழக்கமாக எல்லா விஷயங்களிலும் இடம் பிடிக்கும் A K அந்தோணி, அஇந்தக்குழுவில் கமது படேல் மற்றும் குலாம் நபி ஆசாத் இவர்களுக்கு இதில் இடமில்லை. பணப்பசி பானாசீனா, ஜெய்ராம் ரமேஷ்  இந்தக்குழுவில் இடம் பெற்றிருப்பது சும்மா லுலுலாயிக்கு! மன்மோகன் சிங் சேர்மனாம்! அடுத்த இடம் ராகுல் காண்டிக்கு!   Though former Prime Minister Manmohan Singh has been appointed chairman of the committee, with Rahul’s name coming after him on the list, Congress leaders didn’t miss the message — that Rahul has virtually taken direct control of the party affairs after sidelining veterans who were close to Sonia Gandhi since her entry in politics in 1998. என்னாது? ராகுல் காண்டி கட்சியை மீண்டும்  கைப்பற்றி விட்டாரா என்றெல்லாம் கற்பனைக்குதிரையைத் தட்டிவிடாதீர்கள்! செய்தியின் முக்கியமான அம்சம் அகமது படேலைக் கழற்றிவிட்டது, ராகுல் காண்டியின் விசுவாசிகளை வைத்து நிரப்பியிருப்பது என்பது மட்டும்தான்!  The Consultative group is full of members from Rahul Gandhi’s team, including Randeep Singh Surjewala, K. C. Venugopal, Jairam Ramesh, Manish Tewari, Praveen Chakravarty, Gaurav Vallabh, Supriya Shrinate and Rohan Gupta.

        

காங்கிரஸ் கட்சி இனிமேலும் உயிர்த்தெழும், பிழைத்துவிடும் என்று இதற்கு மேலும் கூட  நம்புகிற அப்பாவிகள், நம்புவதற்கான காரணம் ஏதாவது இருந்தால் வந்து சொல்லலாம். தடையில்லை!

மீண்டும் சந்திப்போம்.     

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!