இட்லி வடை பொங்கல்! #65 ஒரு கருத்துப் படம்! பொருமல்! தினமணி தலையங்கம்!


இன்று PGurus தளத்தில் பார்த்த இந்த கார்டூன் சிரிக்க வைத்ததோடு நிற்கவில்லை! பின்னூட்டத்தில் ஒருவாசகர் எழுதியிருந்த விமரிசனம்

படத்தைவிட அடிப்பொளி! கார்டூன் கலீதா பேகம் என்கிற இஸ்லாமிய பெண்மணி ஹஜ் யாத்திரைக்காகத் தான் சேமித்து வைத்திருந்த ஐந்து லட்ச  ரூபாயையும் PM Cares என்கிற கொரோனா நிவாரண நிதிக்கு கொடுத்ததைச் சொல்கிறது. சோனியாவின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு நடக்கும் ராகுல் காண்டி நாம் இதற்குஎவ்வளவு எவ்வளவு கொடுத்தோம் என்று அன்னையிடம் கேட்பதாக! காங்கிரஸ்கார்கள் நிவாரண நிதி எதையும் கொடுக்கவில்லை என்பது தெரிந்தவிஷயம் தானில்லையா?  இதற்கு சோனியா பதில் சொல்வதாக வந்த கமென்ட் : நாம் எதுவும் கொடுப்பதில்லை! கொள்ளை மட்டும் தான் அடிப்போம்!  

 


ராமச்சந்திர குகா மாதிரி நேரு அபிமானிகளுக்கு கொரோனா நிவாரணத்துக்காக PMCares என்ற புதிய நிதியைத் தொடங்கியது ஏகத்துக்கும் வருத்தம் அளித்திருக்கிறது. ஏற்கெனெவே பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி என்ற ஒன்று இருக்கும்போது இது எதற்காக என்பது அவருடைய கேள்வி. சசிதரூர் அப்புறம் சில காங்கிரஸ் உளறுவாயர்களுக்கும் இதே பொருமல் தான்! எதனால் என்பதை மேலே உள்ள படம் தெளிவாகவே சொல்கிறது.     


மன்னிக்கக் கூடாத குற்றம்!  தப்லீக் ஜமாத் அமைப்பின் இஸ்லாமிய மாநாடு குறித்த இன்றைய தினமணி நாளிதழ் தலையங்கம்


உலகம் தீநுண்மி (கரோனா) நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்தகவலைச் ம் போர்க்கால அடிப்படையில் போராடிக் கொண்டிருக்கும்போது,  கொஞ்சம்கூடப் பொறுப்பில்லாமல் தில்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத் அமைப்பின் இஸ்லாமிய மாநாடு கூட்டப்பட்டது பேரதிர்ச்சி அளிக்கிறது.  தவறு செய்தது போதாது என்று தாங்கள் செய்த தவறை அவர்களில் பலர் நியாயப்படுத்த முயல்வதும், அந்த அமைப்பினருக்குச் சிலர் ஆதரவுக் குரல் கொடுப்பதும்,  இதை மதப்பிரச்னை ஆக்கக்கூடாது என்று கூறி அடக்கி வாசிக்க முயல்வதும், ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் இழைக்கும் துரோகம்.

தில்லி நிஜாமுதீனில் செயல்படும் தப்லீக் ஜமாத்தின் தலைமையகம்,  அலமி மர்கஸ் பங்களேவாலி மசூதியில் அமைந்திருக்கிறது. இப்போது வெளிவரும் செய்திகளிலிருந்து, மதத் தீவிரவாதத்தின் நாற்றங்காலாக இந்த அமைப்பு செயல்பட்டு வந்திருக்கிறது என்று தெரிகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் இந்த அமைப்புக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் 13 முதல் 15-ஆம் தேதிவரை தப்லீக் ஜமாத்தின் தலைமையகமான பங்களேவாலி மசூதியில் நடந்த மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல், உலகின் ஏனைய இஸ்லாமிய நாடுகளிலிருந்தும் பலர் கலந்து கொண்டனர்.  

200 பேர்களுக்கும் அதிகமானவர்கள் கூடும் எல்லா விளையாட்டுப் போட்டிகள், மாநாடுகள், மதச் சடங்குகள் ஆகியவற்றையும் தடை செய்து தில்லி அரசு பொதுத்தடை அறிவித்த அன்றுதான் தப்லீக் ஜமாத்தின் மூன்று நாள் மாநாடு தொடங்கியது. உடனேயே  அந்த மாநாட்டை ரத்து செய்து முடிவுக்குக் கொண்டுவந்திருந்தால்,  எல்லோரும் அவரவர் ஊருக்குத் திரும்பி இருப்பார்கள்.

மார்ச் 16-ஆம் தேதி, 50 பேருக்கும் அதிகமானோர் கூடும் எல்லாக் கூட்டங்களையும் மார்ச் 31 வரை தடை செய்வதாக தில்லி அரசு அறிவித்தபோதாவது, உடனடியாக அனைவரையும் அவரவர் ஊருக்கு அனுப்புவதில் மசூதி  நிர்வாகம் முனைப்புக் காட்டியதா என்றால் அதுவும் இல்லை. இந்த மாநாடு கூடுவது முன்கூட்டியே தெரிந்திருந்தும் தில்லி அரசும், தில்லி காவல்துறையும் உடனடியாக அதைத் தடுக்கவும் முடக்கவும் செய்யாமல் இருந்தது மிகப்பெரிய தவறு.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையினர் தப்லீக் ஜமாத் அமைப்பாளர்களிடம், மசூதியிலிருந்து அனைவரும் கலைந்து போகும்படி ஐந்து நாள்கள் கெஞ்சி இருக்கிறார்கள். அவர்கள்  ஏற்றுக் கொள்ளவில்லை. தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் இரவு நேரத்தில் நேரில் சென்று, நிலைமையை விளக்கி வேண்டிக்கொண்ட பிறகுதான், கூடியிருந்தவர்களைத் தனிமைப்படுத்தவும்,  மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தவும் அனுமதித்திருக்கிறார்கள். ஜனநாயக இந்தியா இதை சகித்துக் கொண்டிருக்கிறது.

9,000-க்கும் அதிகமான தப்லீக் ஜமாத்தின் தொண்டர்களும் அவர்களது நெருக்கமான தொடர்புகளும் தீநுண்மி நோய்த்தொற்றுக்காகத் தனிமைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் இதுவரை நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களில் 500}க்கும்  அதிகமானவர்கள் தில்லி இஸ்லாமிய மாநாட்டில் பங்கு பெற்றவர்கள். தமிழகத்திலிருந்து மாநாட்டில் கலந்துகொண்ட 1,500 பேர்களில் 1200 பேர்தான் திரும்பியிருக்கிறார்கள்.  திரும்பியவர்களில் 364 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் பல்வேறு  மாநிலங்களுக்குத் தீநுண்மி நோய்த்தொற்றைக் கொண்டு சேர்த்த புண்ணியத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் தப்லீக் ஜமாத் தொண்டர்கள்.  அது குறித்து அவர்களுக்குக் கொஞ்சம்கூட வருத்தமோ, குற்ற உணர்வோ இல்லை என்பதுதான் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.

தில்லி லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 188 பேரில் பலர் தங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யக்கூடாது என்று முரண்டு பிடிக்கிறார்கள். மருத்துவர்களையும்  செவிலியர்களையும் சிலர் தாக்கியிருக்கிறார்கள். மத்தியப் பிரதேசத்தில் மாநாட்டிலிருந்து திரும்பியவர்களைப் பரிசோதிக்கச் சென்ற மருத்துவக் குழுவினரைக் கல் எறிந்து விரட்டி அடித்திருக்கிறார்கள்.  இதுபோன்ற சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில் நடந்திருக்கின்றன. 

தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொள்ள வெளிநாடுகளிலிருந்து 960 பேர்  வந்திருக்கிறார்கள். மதப்பிரசாரம் செய்ய வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அதற்கான நுழைவு அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவு அனுமதி பெற்று  தில்லி மாநாட்டுக்கு வந்தவர்கள் இந்தியா முழுவதும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களது நுழைவு அனுமதி இப்போது  ரத்து செய்யப்பட்டிருக்கிறது. 

ஊரடங்கு  வேண்டுகோளை மீறும்படியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது தேவையற்றது என்றும்  தப்லீக் ஜமாத்தின் தலைவர் மௌலானா சாத் கந்தால்வியின் குரல் பதிவு வேண்டுகோள் இப்போது வெளியாகியிருக்கிறது. மௌலானா சாத் கந்தால்வி தலைமறைவாகியிருக்கிறார்.

தப்லீக் ஜமாத்தின் பொறுப்பற்றதனத்தையும், அவர்களால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏற்பட இருக்கும் ஆபத்தையும் கண்டிப்பதை விட்டுவிட்டு, மதப்பிரச்னை ஆக்கக்கூடாது என்று அறிக்கை விடுகிறார்களே, அவர்களது பொறுப்பற்றதனத்தை என்னவென்று சொல்ல? என்ற கேள்வியோடு தலையங்கம் முடிகிறது. 

மீண்டும் சந்திப்போம் 

4 comments:

  1. அருமையான பதிவு
    பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. யாழ்பாவாணன் aka ஜீவலிங்கம்,

      பாராட்டுவது மிகவும் சம்பிரதாயமான ஒரு நடைமுறை. பதிவின் உள்ளடக்கத்தில் இருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள், குறைநிறை என்னவென்று சொல்ல முற்படுவீர்கள் ஆயின் மகிழ்வேன்.

      Delete
  2. மத அடிப்படைவாதிகள் ஃபேனடிக்ஸ் பற்றி எத்தனை எழுதினாலும் அவங்க திருந்தப்போவதில்லை. கற்காலத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களைப் பற்றிய அக்கறை ஏது?

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நெல்லைத்தமிழன் சார்!

      பதிவுகள் எழுதி எவரையும் மாற்றிவிடமுடியும் என்கிற கற்பிதமெல்லாம் எனக்கில்லை. ஊருக்கு உபதேசம் செய்கிற அளவுக்கு எனக்குத் தகுதியும் இல்லை. தீயோடு விளையாடுகிறார்களே என்று ஒருதரப்பினரைப் பார்த்து பச்சாதாபம் ஒருபக்கம். இன்னொருபக்கம் பெரும்பான்மையினர் அனுபவங்களில் இருந்து எதையும் கற்றுக் கொள்ள மறுக்கிறார்களே என்ற கோபம்.

      ஆற்றாமையில் வருகிற எழுத்து, அவ்வளவுதான்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!