ஆர்னாப் கோஸ்வாமி மீது CONகிரஸ் குண்டர்கள் தாக்குதல்!

நேற்று தொலைக்காட்சி விவாதத்தில் ஆர்னாப் கோஸ்வாமி சோனியாவுக்கு நேரடியான சில கேள்விகளை எழுப்பியதற்காக CONகிரஸ் குண்டர்களால் தாக்கப் பட்டிருக்கிறார். கட்சி சொல்லித்தான் தாக்கினோம் என்று அந்தகுண்டர்கள் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் சொல்கின்றன.  ஆர்னாப் கோஸ்வாமி அப்படி என்ன கேட்டு விட்டார் என்பதை இங்கே கேட்கலாம். வீடியோ 54 நிமிடம்  

\

அர்னாப் கோஸ்வாமி....தன் மீது.. நேற்று இரவு..தாக்குதல் முயற்சி நடந்ததாக புகார் அளித்திருக்கிறார்.

பிரச்சினையின் மையப்புள்ளி ..மஹாராஷ்டிரா Palghar-ல் காவல்துறையினர் முன்னிலையில் வெறி பிடித்த கும்பலால் அடித்தே கொல்லப்பட்ட இந்து துறவிகள் & அவர்களது கொலைக்கான நியாயம் கேட்டல்.சோனியா...இவர்களின் கொலைக்கு கண்டனம் தெரிவித்து.. ஏன் அறிக்கை கொடுக்கவில்லை ? என்று கேட்டார் அர்னாப்.

இதற்கு தான் இத்தனை அடிதடி.

சோனியா நேரடி அரசியலுக்கு வந்த பின்னரும் கூட..இந்திய ஊடகங்கள் எதுவும் அவரை நேரடியாக கேள்விகள் கேட்டதில்லை. சேகர் குப்தா ..சோனியாவை ஒரு பேட்டி எடுத்திருந்தார். அதில் கேட்கப்பட்ட கேள்விகள்...'உங்கள் மாமியார் இந்திரா காந்திக்கு பிடித்த உணவு என்ன ?' 'நீங்கள் அவருக்கு பிடித்த உணவை சமைத்து கொடுத்திருக்கிறார்களா ?' என்பது போன்ற கேள்விகள் மட்டுமே. 130 கோடி பெரும் மக்கள் திரளை கொண்ட இந்திய நாட்டின் அரசியலின் மையத்தில் ..உயர்ந்த அதிகார பீடத்தில் இருக்கும் சோனியாவிடம்.. அரசியல் பேட்டிகள் எடுக்கவோ ...அரசியல் கேள்விகள் கேட்கவோ ...இந்திய ஊடகங்கள், இந்திய பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் முயலவில்லை. அவ்வாறு முயன்ற வெகு சிலரும் அமைதியாகி விட்டனர்.

இந்த நிலையில்...அர்னாப்.. 'துறவிகள் அடித்துக் கொல்லப்பட்டதற்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை ?' என்று 'நேரடியாக சோனியாவை நோக்கி' .. கேள்வி கேட்டு...இந்திய மக்களுக்கு...கவனப்படுத்துகிறார்.

He is breaking the Ivory Tower. He is breaching the unbreachable.

துறவிகள் அடித்துக் கொல்லப்பட்டதற்கு சோனியா இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதும் கவனிக்க தக்கது.

நேரடியான சண்டை துவங்கி இருக்கிறது.

இதன் போக்கும், முடிவும்...இந்திய பொதுமக்களுக்கு அரசியலின் ஆச்சரியமான பல கோணங்களை வெளிப்படுத்த கூடும் 


இதுவரை பிரதமர் மோடியின் மீது தூக்கி வீசிய விமர்சனங்களுக்கு,பேசிய வசைகளுக்கு சர்வ அதிகாரத்தில் இருக்கும் பாஜகவால் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்களா?

இன்று அர்னாப் கோஸ்வாமி அவருடைய மனைவியுடன் தாக்கப்பட்டிருப்பதை எந்த பத்திரிக்கையாளனும் கண்டித்ததாக தெரியவில்லை.இதுதான் இவர்களின் ஜனநாயகம்.ஆனால் எங்கேயோ காவி கட்டிக்கொண்டு ஒருவன் பொறிக்கித்தனத்தில் ஈடுபட்டால் அவன் நேரடி மோடி கண்காணிப்பில் அதை செய்ததாக பேசுவார்கள்..

நமக்கு காங்கிரஸ்,திமுக கதையாவது தெரிந்தது.ஜனநாயக வகுப்பெடுக்கும் கோமாளிஹாசன் போன்ற காந்தியவாதிகள் ஏன் கள்ள மெளனம் சாதிக்கிறார்கள்? இவர்களுக்கு இனி மற்றவற்றை பேச என்ன தகுதி உள்ளது?

கருத்துரிமை,ஜனநாயகம் என்று வாய்கிழிய பேசுபவன் நம்மை சரியான நேரத்தில் அறுத்து கூறு கட்டி விற்க காத்திருக்கும் கசாப்புக் கடைக்காரன் என்பதை மட்டும் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்..நம்மை கொலை செய்ய ஆயுதத்தோடு வருபவனைக் கூட நம்பலாம் ஆனால் ஒரு போதும் இவர்களை நம்பக்கூடாது நண்பர்களே..

இவர்கள் அஹிம்சை,ஜனநாயகம் என்பதையெல்லாம் விரும்பி ஏற்றவர்கள் இல்லை.வேறு வழியில்லாமல் ஏற்று நிற்பவர்கள்..


மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் இரு சாதுக்கள் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரடியாக குற்றம்சாட்டி பேசி அவதூறு செய்த ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் வழக்குப் பதிவு ெசய்யப்பட்டுள்ளது ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளி்ட்ட பல்வேறு  மாநிலங்களிலும் காங்கிரஸார் அர்னாபுக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் 

மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் கடந்த 16ம்தேதி இரு சாதுக்கள் உள்ளிட்ட 3 பேர் சில்வாசாவுக்கு வந்து கொண்டிருந்த போது கடாக்சின்சாலை கிராமத்தில் ஒரு கும்பலால் திருடர்கள் என நிைனத்து அடித்துக்கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக சாதர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரம் அந்த மாநிலத்தில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இது தொடர்பாக நேற்று தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய அர்னாப் கோஸ்வாமி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது அவதூறு குற்றம்சாட்டிப் பேசினார். இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து, சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் போலீஸ் நிலையத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் மோகன் மார்கம், ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது புகார் அளித்தார். அந்த புகாரில் இரு சமூகத்தினருக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அர்னாப் பேசியுள்ளார். சமூகத்தின் ஒற்றுமையை குலைக்கும் வகையிலும், மதநம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் பேசியுள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சோனியா காந்தி மீது சுமத்தியுள்ளார்” எனத் தெரவித்துள்ளனர். இதையடுத்து அர்னாப் கோஸ்வாமி மீது ராய்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

இதற்கிடையே மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலும் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அர்னாப் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் நிர்வாகிகள் அளித்த புகாரையடுத்து, அர்னாப் மீது ஐபிசி 117, 120(பி), 153(ஏ),(பி), 295(ஏ),290(ஏ), 500, 504, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயுடன் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பேசியுள்ளனர். மாநில உள்துறை அமைச்சர் பாலசகேப் தோரட் ட்விட்டரில் கூறுகையில், “ பால்கர் தாக்குதலை வகுப்புவாதத்தோடு தொடர்புபடுத்தும் அர்னாப் கோஸ்வாமியின் செயலைக் கண்டிக்கிறேன். எதிர்பாராமல் நடந்த சம்பவத்தை காங்கிரஸ்தலைவர் சோனியா காந்திக்கு எதிராக அவதூறாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது. முதல்வரிடம் பேசியுள்ளேன் அர்னாப் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார் என்கிறது இந்து தமிழ்திசை செய்தி. 

காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக ஒழிந்தால் மட்டுமே இந்த நாட்டில் அரசியல் நாகரிகம், ஜனநாயகம் பிழைத்திருக்கும் என்பதை  நினைவூட்டுகிற சம்பவம் இது.

மீண்டும் சந்திப்போம்.

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!