Showing posts with label இன்ஸ்டன்ட் போராளிகள். Show all posts
Showing posts with label இன்ஸ்டன்ட் போராளிகள். Show all posts

காங்கிரசை ஒதுக்கித்தள்ளுங்கள்! மம்தா பானெர்ஜி வழிகாட்டுகிறார்!

தலைப்பைப் புரிந்துகொள்ள முடியாத நண்பர்கள், முந்தைய பதிவை எதற்கும் ஒருமுறை வாசித்து விடுவது உசிதம்! இங்கே காங்கிரசுக்கும் ஏனைய மாநிலக்கட்சிகளுக்கும் இடையிலான உரசலைப் புரிந்துகொள்வது எப்படி?  மாநிலக்கட்சிகள் உருவான விதமும், மாநிலக்கட்சிகளிலிருந்து வரிசையாக நான்கு பிரதமர்கள் காங்கிரஸ் ஆதரவுடன் உருவானதும், மிகக் குறுகிய காலத்திலேயே காங்கிரஸ் தனது ஆதரவை விலக்கிக் கொண்டு  கவிழ்த்ததுமான மிகச் சமீப காலத்தைய வரலாற்றின் முடிவுரைப்பகுதியாக, மாநிலக்கட்சிகள் காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்க மறுக்கிற நிலைமை உருவாகியிருப்பதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இங்கே திமுக கையிலெடுத்த மாநிலத்தில் சுயாட்சி மத்தியிலே கூட்டாட்சி என்ற  வெற்றுக்கோஷம் மத்திய ஆட்சியில் இடம் பிடித்ததும் மாநிலத்தில் தனிக்கொள்ளை மத்தியிலே கூட்டுக்கொள்ளை என்றானது மாதிரி அல்லாமல், பல மாநிலக் கட்சிகள் காங்கிரசிடமிருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்திருப்பது தங்களுடைய இருப்பைத் தக்க வைத்துக் கொள்கிற (survival) விதத்திலானது. அதே நேரம் காங்கிரசுடைய நிலைமையோ தன்னால் முடியாததை எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்கிற அடுத்தவன் தோள்மீதேறி அதிகாரம் செய்கிற எர்னெஸ்ட் ஹெமிங்வே கதையில் வருகிற முடவனான கடற் கிழவன் மாதிரியானது.


அதிகாரத்தை எந்தவகையிலாவது அடையத்துடிக்கிற காங்கிரஸ் கட்சி CAA NRC இவைகளின் மீதான ஒருமாதப் போராட்டம் வலுவிழந்து வருகிற நிலையில் எதிர்க்கட்சிகளின் துணையோடு மீண்டும் அதைத் தூண்டி விடுவதற்கு முயற்சிப்பதில், மம்தா பானெர்ஜி ஒருவர்தான் சரியான முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்! தனித்தே நின்று  CAA NRCக்கு எதிராகப் போராடுவோம்  என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிற ஒரே மாநிலக் கட்சி மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் மட்டும் தான்! மற்ற மாநிலக் கட்சிகள் காங்கிரசிடமிருந்து விலகியே இருக்க முடிவு செய்திருப்பதற்கும், மம்தா பானெர்ஜி முடிவு செய்திருப்பதற்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் மம்தா பானெர்ஜி காங்கிரசுக்கு நேரடியான சவால் விடுத்திருக்கிறார் என்பது தான்!


சேகர் குப்தா அனுபவமுள்ள பத்திரிகையாளர்தான்! ஆனால் காங்கிரஸ் சார்புநிலையை வெளிப்படையாக எடுத்திருப்பவரிடம் மிகச்சரியான அலசலை எதிர் பார்க்க முடியாதுதான்! தவிர மாநிலக்கட்சிகள் புறக்கணித்த 13 ஆம் தேதிக்கு கூட்டத்தன்றே வெளியான வீடியோ இது. மிகநீண்டகாலம் ஆளும் கட்சியாகவே இருந்ததால் எதிக்கட்சிகளின் தலைமையாக காங்கிரசை மாநிலக்கட்சிகள் ஏற்கத் தயங்குகின்றன என்பது மிகவும் சப்பையான வாதம். செல்லாக்காசாகிப் போனபின்னாலும் கூட, காங்கிரஸ் தன்னை இன்னமும் ஆளப்பிறந்தவர்களாக நினைத்துக் கொண்டிருப்பதுதான், அடிப்படையான கோளாறு!  

வீடியோ 26 நிமிடம் 

ஜனங்களுடைய கோபத்தை எப்படிக் கிளறுவது, கலகம போராட்டங்களைத் தூண்டுவது என்பதில் காங்கிரசுக்கு கிடைத்திருக்கும் விதவிதமான உத்திகள், ஜனங்களை மேலும்மேலும் குழப்புகிற மாதிரியே அமைந்து போகிற மாதிரியான தவறுகளை மம்தா பானெர்ஜி கடந்த ஆறுமாதங்களில் அனேகமாகத் தவிர்த்து விட்டார் என்றே சொல்கிறார்கள். (இடையில் எழுந்த Cut money சர்ச்சை,  துர்கா பூஜா பந்தல்கள் சர்ச்சை, மருத்துவர்கள் போராட்டம், இப்படி வரிசையாகப் பலவிஷயங்களை மறந்துவிட்டால் ..) !

காய்கறி விலைவிசாரிக்கும் மம்தா 
வீடியோ 1 நிமிடம் 

மம்தா பானெர்ஜியை இப்போதெல்லாம் சிரித்த முகத்தோடு பார்க்க முடிகிறது. காய்கறி மார்கெட்டுக்கு போகிறார், ஜனங்களிடம் இயல்பாகப் பேசுகிறார் என்று வீடியோ, செய்திகளில் மாற்றங்கள் எல்லாம் நிஜம் தானோ என்று நினைக்க வைக்கிற விதமாக!  எப்போதிலிருந்தாம்? 2019 லோக்சபா தேர்தல்களில் பிஜேபிக்கு 18 இடங்கள் கிடைத்த உடனேயே மம்தா பானெர்ஜி உஷாராகி விட்டார்! சென்ற வருட ஜூன் மாதம் IPAC நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோர் மம்தா பானெர்ஜிக்கு உதவிசெய்ய ஒப்பந்தம் போட்டுவிட்டார் என்கிற செய்தியில் ஆரம்பித்து இப்போது வரை கிடைக்கிற செய்திகளைத் தொகுத்துப்பார்த்தால் மம்தா பானெர்ஜி பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுக்கும் உத்திகளை அப்படியே பயன்படுத்தி வருகிறார் என்ற தகவலை News 18 தளச் செய்தி கொஞ்சம் விரிவாகவே சொல்கிறது. செய்தியை இணைப்பில் கொஞ்சம் வாசித்துத்தான் பாருங்களேன்! 

உதாரணமாக, ஜனவரி 11 அன்று மம்தா பானெர்ஜி அரசுநிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பங்கேற்ற கையோடு கொல்கத்தா எஸ்பிளனேட் பகுதியில் CAA /NRCக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் நடத்திக் கொண்டிருந்த தர்ணா போராட்டக்களத்துக்குத் திரும்பிவிட்டார். இடதுசாரி மாணவர்கள் அவருக்கெதிராக #GoBackDidi  கோஷங்கள் எழுப்பியபோது சிரித்தமுகத்துடன் கைகூப்பி அவர்களை எதிர்கொண்டவிதம், இதுவரை பாயும் புலியாகவே அவரைப்பார்த்துவந்தவர்களுக்கு அதிர்ச்சி! எதற்காக நரேந்திரமோடியுடன் ஒரே மேடையில் பங்கேற்கப்போக வேண்டுமென்பது அவர்களுடைய  கேள்வி! மைக்கைக் கையில் பிடித்து ஒரு முதல்வராகத் தன்னுடைய கடமைகளை செய்யவே போனதாக அவர் பொறுமையாக விளக்கம் சொன்னவிதம்!     எதனால் இப்படியொரு மாற்றம் என்பது புரியாத புதிராகவே இடதுசாரிகளுக்கு இன்னமும் இருக்கிறது என்று ஆரம்பித்து, வரிசையாகக் காரணங்களை அடுக்குகிறார்கள். Her thought-out reactions and 'makeover' seem to be a result of a new political strategy drafted by Prashant Kishor and his firm Indian Political Action Committee (I-PAC) as she prepares to defend her bastion from an aggressive onslaught by the BJP.


பிரசாந்த் கிஷோருடைய டீம் வெறும் பிரசார கோஷங்கள் போஸ்டர்களை மட்டும் டிசைன் செய்கிற நிறுவனமல்ல, அதையும் தாண்டி  என்பதை இந்த நேரத்தில் நண்பர்களுக்கு நினைவுபடுத்த வீரும்புகிறேன். IPAC டீம் மேல்மட்ட, கீழ்மட்டக் கட்சி ஆசாமிகளோடு இணைந்து பணியாற்றுவதில்லை. மாறாக கட்சி ஆசாமிகளைக் களத்தில் அவர்களுக்குத் தெரியாமலேயே கண்காணித்து, அவர்கள் செயல்பாடு, மக்களுடன் இருக்கும் தொடர்பு செல்வாக்கு எல்லாவற்றையும் அதற்கான ஆதாரங்களோடு சேகரித்து, கட்சித்தலைவரிடம் மட்டுமே ரிபோர்ட் செய்கிற ஒரு மாதிரியான வேவு பார்த்துச் சொல்கிற நிறுவனம்! அப்படியே இதர கட்சிகளுடைய பிரசாரத்தை முடியடிப்பதற்கு என்னென்ன செய்யவேண்டும் என உத்திகளை வகுத்துக் கொடுக்கிற, தான் வேலைசெய்கிற கட்சிக்கு ஆதரவான கருத்துக்களை விதைக்கிற ஒரு நிறுவனம். சுருக்கமாக, இதே பக்கங்களில் பேசப்பட்ட Cambridge Analytica  மாதிரி, தகவல்களைக் கொஞ்சம் manipulate செய்து காசுக்காக பொதுஜன அபிப்பிராயத்தைத் திசை மாற்றும் வேலையைச் செய்கிற ஒரு நிறுவனம்.

இங்கே சமூக வலைதளங்களில் கொட்டப்படும் ஜனங்களுடைய உணர்வே பிரசாந்த் கிஷோர் மாதிரியான வியாபாரிகளுக்கு மூலதனமாக இருக்கிறது. அதைவைத்தே அவர்கள் வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே தமிழ்நாட்டிலும் கூட, திமுகவுக்காக வேலைசெய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதில் மேற்குவங்கம் மாதிரி முன்னேற்றம், மாற்றம் ஏதாவது இசுடாலினிடம் தெரிகிறதா? அதை நீங்கள் தான் வந்து சொல்ல வேண்டும்! எத்தனை நாள் தான் கேள்வியும் நானே பதிலும் நானே என்றிருப்பதாம்? 

மீண்டும் சந்திப்போம்.              

சேகர் குப்தா! The Great Hack! இந்திய ஜனநாயகம்!

சேகர் குப்தா மாதிரி அனுபவமுள்ள பத்திரிகையாளர்கள் கூடப் பலசமயங்களில் சம்பந்தம் இல்லாத விஷயங்களை போட்டுக் குழப்பிக் கொள்வது உண்டு. அதுவும் சொந்த விருப்பு வெறுப்புகளோடு செய்திகளை அனலைஸ் செய்தால் எப்படியிருக்கும் என்பதைச் சொல்லவேண்டியதே இல்லை!



பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மிகவினோதமான விஷயங்கள் சமீபத்தில் நடந்தன. ஆளும் கன்செர்வேடிவ் கட்சிப் பிரதமர்  தெரசா மே பதவியை ராஜினாமா செய்ய வைக்கப் பட்ட பிறகு, அதே கட்சியைச் சேர்ந்தநாடாளுமன்றத்தில்  போரிஸ் ஜான்சன், ஒரு மாத காலத்துக்கும் குறைவாகப் பிரதமராக இருந்து வருகிறார். ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது என்று மிக மெல்லிய வித்தியாசத்தில் பிரிட்டிஷ் மக்கள் முடிவு செய்து மூன்று ஆண்டுகளாகியும், அதற்கான மாற்று வழிகளைத் தீர்மானிக்க முடியாமல், அங்கே அரசு தடுமாறி வருகிறது. என்ன ஆனாலும் சரி, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியே தீருவோம் என்று குதித்துக் கொண்டிருக்கும் போரிஸ் ஜான்சன் கடந்த சிலநாட்களில்  முக்கியமான தீர்மானங்களில் இருமுறை  நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப் பட்டிருக்கிறார் என்ற பின்னணியை மனதில் வைத்துக் கொண்டு சேகர் குப்தா இந்த விஷயத்தில் என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் கேளுங்கள்! டீலா நோ டீலா என்று பிரிட்டன் தவித்துக் கொண்டிருப்பதைக் குறித்து நமக்கென்ன கவலை? அங்கே தான் சேகர் குப்தா, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டிருப்பதோடு, இந்திய நாடாளுமன்றத்தையும் முடிச்சுப்போட்டுச் சில விஷயங்களை சொல்வது வருகிறது!  கொஞ்சம் சுவாரசியமாகவே தன்னைக் குழப்பிக் கொள்கிறார் என்றும் சொல்லலாம்! 17 நிமிடம்தான்! தவறாமல் பாருங்களேன்!


        
bandhuSeptember 10, 2019 at 8:13 PM
The Great Hack என்ற டாக்குமெண்டரி netflix இல். இருக்கிறது. இதில், ட்ரம்ப் எலக்ஷனில் எப்படி ஜெயிக்க முடிந்தது என்று விவரமாக விளக்கியிருக்கிறார்கள். அமெரிக்கா மட்டுமல்ல. ஜனநாயக நாடுகள் எல்லாவற்றிலுமே எலெக்ஷனை எப்படி வளைத்து வெற்றிபெறுவது என்று பயமுறுத்தி இருக்கிறார்கள். பிரெக்ஸிட், மலேசியா தேர்தல், பிரேசில் தேர்தல், டிரினிடாட் தேர்தல், அமெரிக்கா தேர்தல் என்று எல்லாவற்றிலுமே இதே பார்முலா. வழிமுறைகள் தான் வேறு.

நம்ம ஊர் 'போரளிகள்' எல்லாமே இதன் ஒரு பாகம் தான். ஒருவர் வேலைக்கோ / முழுநேர தொழிலாளியாகவோ / முதலாளியாகவோ உழைத்தால் தான் வாழமுடியும் என்ற போது, இவ்வளவு பேர் முழுநேர 'போராளி' யாக எப்படி இருக்க முடிகிறது? இவர்களுக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்ற கேள்விக்கு விடை அளிக்கிறது இந்த டாகுமெண்டரி.
நேரம் கிடைத்தால் பாருங்கள்!  

முந்தைய பதிவில் இப்படி நண்பர் எனக்குச் சொல்லி இருந்ததை, சேகர் குப்தாவுக்கும் சொல்ல எனக்கு ஆசைதான்! அதற்கு முன்னால் இந்த 2 மணிநேர வீடியோ டாக்குமென்டரியை நேற்றிரவே பாதி பார்த்துவிட்டேன். சேகர் குப்தாவுக்கு Cambridge Analytica பற்றித் தெரிந்திருக்காதா? அதுவும் அவர் பெரிதும் ஆதரிக்கிற காங்கிரஸ் கட்சியையும் தொடர்பு படுத்தி சிலகாலத்துக்கு முன்பு நிறையத் தகவல்கள் வந்து கொண்டிருந்தனவே!

Data rights are human rights” is the rallying cry of this gripping, challenging documentary by Karim Amer and Jehane Noujaim, about the biggest scandal of our time: the gigantic question mark over the legality of the Brexit vote.

It is about the Trump cam.paign, the Leave.EU campaign and many other reckless electoral adventures all over the world and their connection with Cambridge Analytica, the British data research company that cunningly harvested information from millions of Facebook users and their friends via an innocuous-seeming “personality” questionnaire. They put this gigantic database to lucrative work with machine-tooled marketing campaigns for Trump and the Brexiters; after the company declared bankruptcy, its documentation may never come to light. என்று பீட்டர் ப்ராட்ஷா The Guardian நாளிதழில் இந்த டாகுமெண்டரி மீதான விமரிசனப் பார்வையாக எழுதியது இந்தவருட ஜூலையில். அதற்கும் முன்னால் நம்மூர் FirstPost தளத்தில் சென்ற வருட  மார்ச் 17 இல்   இந்த  விவகாரம் வெடித்துக் கிளம்பிய நாள்முதல், இங்கே இந்தியாவில் எந்த எந்தக்கட்சிகள் வாடிக்கையாளராக இருந்தன, இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது, என்று   இந்த வருட மார்ச் வரையிலான ஓராண்டு நிகழ்வைத் தொகுத்துத் தந்திருக்கிறது. A report by The Observer reveals that Facebook was aware of the data harvesting scandal much before March 2018, as far back as 2016, when Cambridge Analytica started work on the Trump campaign. A meeting was hosted at Marc Andreessen's (Facebook board member and confidant of CEO Mark Zuckerberg) office with Christopher Wylie. Though Andreessen denies having ever met Wylie. நீலக்கலரில் சில சுட்டிகள் இருக்கின்றன. நேரமிருந்தால் பாருங்கள்!

கிடைக்கிற தகவல்களை வைத்து ஒரு மனிதனுடைய உளவியலை அனுமானிக்க முடியும் என்பது தெரிந்தது தான்! Mindhunter என்று கிரிமினல்களை ஆராய்ந்து ஒரு proile உருவாக்குகிற அமெரிக்க FBI விஞ்ஞானியை மையமாக வைத்து 2 சீசன்கள் வெப் சீரீசாகப் பார்த்ததுமுண்டு!   ஆனால் கிடைக்கிற தகவல்களைவைத்துக் கொஞ்சம்  manipulate செய்து மனிதர்களை ஒரு குறிப்பிட்ட முடிவெடுக்கத் தூண்டவும் செய்யலாம் என்ற மாதிரியான data science கொஞ்சம் விபரீதமாகத்தான் தெரிகிறது. சுஜாதா இதையே தனது சொர்கத்தீவு நாவலில் வேறொரு விதமாகச் சொல்லி இருந்ததும் நினைவுக்கு வருகிறது.

இந்திய ஜனங்களையோ இந்திய ஜனநாயகத்தையோ இந்த டேட்டா சயன்டிஸ்டுகளால் புரிந்து கொள்ள முடியுமா manipulate செய்ய முடியுமா என்பது என்னைப்பொறுத்தவரை இன்னமும் ஒரு கேள்விக் குறியாக மட்டுமே இருக்கிறது. தமிழேண்டா போராளிகள் உருவான மாதிரி வேறெங்கும் காணமுடியவில்லை என்பதாலா?

மீண்டும் சந்திப்போம்.                       

ஜெப ஊழியம்! இன்ஸ்டன்ட் போராளி! பல்லிளிக்கும் பகுத்தறிவு!

பால் தினகரன், மோகன் சி லாசரஸ் மாதிரியான ஜெப ஊழியம் செய்தே  கோடிகளில் கொழிக்கும் மோசடிப் பேர்வழிகளைப் பற்றி இந்தப்பக்கங்களில் பேசி நீண்ட காலமாகி விட்டது என்று சாணக்யா தளத்தில் இந்த வீடியோவைப் போட்டு எனக்கு நினைவு படுத்தி இருக்கிறார்களோ? 



இவர்களுடைய ஜெப ஊழிய லட்சணம், கள்ள தீர்க்க தரிசனம் முதலான பித்தலாட்டங்களை வெறும் இரண்டுநிமிடத்தில் அம்பலப்படுத்துகிற வீடியோ. இதில் மோகன் சி லாசரஸ் ஒருபடி மேலேயே போய் மோடி மட்டும் ஜெயித்துவிட்டால் நான் இயேசுவை ஆராதிப்பதையே  நிறுத்திக் கொள்கிறேன் என்று சவடால் வேறு! ஏதோ ஒருமுறை இருமுறை அல்ல! எப்படிப் பேசினார் என்பதற்கு ஒரு சோறு பதமாக     


இந்த ஜெப ஊழியக் கும்பல்களுடைய மோசடிகளுக்குக் கொஞ்சமும் குறையாதது மே 17 இயக்கம் என்று ஆரம்பித்து திடீர் போராளியாக எல்லாவிஷயங்களிலும் குதிக்க ஆரம்பித்திருக்கும் திருமுருகன் காந்தி என்கிற மோசடிப்போராளி! மாரிதாஸ் இவருடைய மோசடிகளைக் குறித்து ஒரு காணொளி வெளியிடுகிற அளவுக்கு, இங்கே சிலரால் கொழுத்து வளர்த்து விடப்பட்டிருக்கிறார். யார், எதற்காக என்றெல்லாம் ஊகிப்பது ஒன்றும் கடினமான விஷயமா என்ன?  

  
இங்கே வரலாறு தெரியாத நபர்களால் தான் ஊடகங்கள் நடத்தப்படுகின்றன. விளைவு? பொய்யர்கள், தங்களை போராளிகளாக காட்டிக் கொள்கிறார்கள். திராவிடக் காரர்களின் இந்தி எதிர்ப்பை பற்றி - சமுதாயச் சிந்தனை என்கிற பத்திரிகை எழுதி, ஈவெராவையும், கி.வீரமணியையும் சிலாகித்துள்ளது. அந்த சிலாகிப்பை, கி.வீரமணியின் விடுதலை பத்திரிகை, "பிற இதழிலிருந்து - கி.வீரமணியை பாராட்டுவோம்." என்கிற தலைப்பில் வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையிலிருந்து:
"இந்தியா என்று, வட நாட்டாருடன் நாம் இணைந்து செயல்படும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தீர்க்கமாக அறிந்திருந்தவர், தந்தை பெரியாராவார். வட நாட்டான், அவன் மொழியைத் திணித்து நம்மை அடிமைப்படுத்துவான் என்பது அவருடைய கருத்து. அதனால் பெரியாரின் திராவிடர் கழகம் மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடியது. திராவிட முன்னேற்றக்கழகம் என்ற அரசியல் கட்சியும் போராடியது. தி.க.வும், தி.மு.க.வும் இவ்விஷயத்தில் பல தியாகங்களைச் செய்திராவிட்டால் தமிழகம் என்றோ வட நாட்டானுக்கு அடிமைப்பட்டு தமிழும், தமிழனும் அடையாளம் காண முடியாமல் போயிருப்பான்." சமுதாயச் சிந்தனை(2016 ஆகஸ்ட்)
ஈவெராமசாமியின் இந்தி எதிர்ப்பு யோக்கியதையை முற்றிலும் உணராமல் ஒருவர் எழுத, அது தங்களுக்கு சாதகமான தகவல்களை கொண்டு இருப்பதால் ஈவெராவாதிகள் தங்கள் பத்திரிகையில் போட்டு பெருமை அடித்து கொண்டிருக்கிறார்கள். இப்போது பாருங்கள் 

- ஈவெராமசாமியின் இந்தி எதிர்ப்பு யோக்கியதையை உண்மையாக எழுத போகும் நாம், ஈவெராவை அவதூறு செய்தோம் என ஈவெராவாதிகளால் கேவலமாக விமர்சிக்கப்படுவோம். ஆனால் அரைகுறையாக, ஈவெராவின் இந்தி எதிர்ப்பு நிலையை தெரிந்து கொண்டு எழுதிய சமுதாயச் சிந்தனை பத்திரிகையாளர், இவர்கள் பார்வைக்கு ஈவெராவை சரியாக உணர்ந்தவராவர். ஈவெராவின் 1938ம் ஆண்டின் இந்தி எதிர்ப்பு நிலையை பக்க பக்கமாக எழுதும் ஈவெராவாதிகள், ஈவெராமசாமியின் 1965ம் ஆண்டின் இந்தி மொழி திணிப்பு பற்றி ஏன் எழுதுவதில்லை.
இந்த இடத்தில் ஈவெராவாதிகளின் படுஅயோக்கியத்தனமான கருத்தொன்றை பார்க்கலாம். அது யாதெனில், 1938ல் இந்தி திணிப்பில் ஈடுபட்ட ராஜாஜி, 1965ல் மனம் திருந்தி - இந்தி திணிப்பை எதிர்த்தார் என்பதை சொல்பவர்கள், 1938ல் இந்தி திணிப்பை  எதிர்த்த ஈவெராமசாமி, 1965ல் இந்தி திணிப்பு செய்யப்பட்டபோது, என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை மட்டும் சொல்லவே மாட்டார்கள். ஆமாம் - ஈவெராமசாமி 1965ல் இந்தி திணிப்பின்போது என்ன செய்து கொண்டிருந்தார். அன்றைய காலக்கட்டத்தில் - தி.மு.கக்காரன் என்ன செய்தாலும், அதை எதிர்க்க வேண்டியது தி.கக்காரனின் கடமையாக இருந்தது. அதன்படி, தி.மு.க இந்தி திணிப்பை எதிர்த்ததால் - ஈவெராமசாமி இந்தியை வரவேற்பதில் மும்முரமாய் இருந்தார். ஒரு வேளை, அன்றைக்கு தி.மு.க - இந்தி திணிப்பை எதிர்க்காமல் இருந்திருந்தால், ஈவெராமசாமி இந்தி திணிப்பை எதிர்த்திருப்பார்.
இது தான் ஈவெராமசாமியின் இந்தி எதிர்ப்பு யோக்கியதை. இந்த லட்சணத்தில் ஈவெராமசாமி, தமிழகத்திற்குள் இந்தியை நுழையவிடாமல் தடுத்தார் என்கிறார்கள் அரைகுறை வரலாற்றாளர்கள். இனி 1965ல் ஈவெராமசாமி இந்தி திணிப்பை வரவேற்ற கதையை பார்ப்போமா? "இந்தியா ஒண்ணா இருக்கணும்னா பொதுவா ஒரு ஆட்சிமொழி வேணும்தானே? 

இந்திக்காரன் உங்க மாதிரி இங்கிலீஷை நினைக்கல்லையே. இங்கிலீஷ் அவமானம்னு நினைக்கிறானே. தமிழ்நாட்டுக் காரன் சொல்றபடி இந்தியா நடக்குமா? அது ஜனநாயகமா? (ஈவெராமசாமி -ஆனந்தவிகடன் பேட்டி 11.4.1965) வேலைக்காரியோடும் இங்கிலிஷ் பேசுங்க என்று தமிழர்களுக்கு அறிவுரை தந்த ஈவெரா தான் - இந்திக்காரர்களின் ஆங்கில எதிர்ப்பை சிலாகிக்கிறார்.
ஈவெராமசாமியின் கூற்றுப்படி, இந்தியா என்கிற ஒரு நாட்டுக்கு ஒரேஆட்சி மொழி என்பது அவசியம். மேலும் இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும் என்றால் - என்று வேறு குறிப்பிடுகிறார்.இந்தியா ஒன்றாக இருக்க இந்தி வேண்டும் என்கிறார். இந்த ஈவெராமசாமி தான், இந்தியை வரவிடாமல் தடுத்தார், இந்திய தேசியத்தை எதிர்த்தார் என்று புளுகு மூட்டையை அவிழ்த்துவிடுகிறார்கள். ஈவெராமசாமியின் இந்தி எதிர்ப்பு, இந்தி ஆதரவு என்பதெல்லாம் தமிழின் மீதான அக்கரையினால் அல்ல. அப்போதைய தம் எதிரிகளை எதிர்க்க அல்லது தம் ஆதரவாளர்களை அரவணைக்க என்பதற்காக தானே ஒழிய - வேறு எந்த வெங்காயமும் இல்லை. அதே ஆனந்தவிகடன் பேட்டியை தொடர்ந்து வாசிப்போம்.
சாவி, மணியன் ஆகியோரின் கேள்விக்கு ஈவெராமசாமி அளித்த பதில். மணியன் கேட்கிறார். "மும்மொழித் திட்டப்படி நாம் இந்தி கத்துக்க வேண்டி வரலாம் இல்லையா?" ஈவெராமசாமி "மன்னிக்கனும், மும்மொழித் திட்டம்னா என்ன? கொஞ்சம் நீங்கதான் சொல்லுங்க, விளங்கலே..." என்று கேட்க மும்மொழித் திட்டத்தை பற்றி மணியன் விளக்கிச் சொல்கிறார். "உம், சரியா போச்சு, ஏதாவது ஒரு அந்நிய மொழி படிக்கணும்னா அது இந்தி மொழியாவே இருந்துட்டுப் போவட்டுமே. படிக்கணும்னு கட்டாயப் படுத்தறாங்களா?"
மணியன் "இல்லை, கம்பல்ஸரி வந்தால்?" அதற்கு ஈவெராமசாமி "வர்ரப்போ பார்த்துக்கலாமே. அதுக்கு என்ன இப்போ..." என்கிறார். மணியன், "மத்திய சர்க்கார்லே உத்தியோகம் கிடைக்கிறதுக்கு இந்தி அவசியம் இல்லேன்னாலும், உத்தியோகத்திலே சேர்ந்தப்புறம் படிக்கச் சொல்றாங்களே?" அதற்கு ஈவெராமசாமி, "படிச்சிட்டுப் போயேன். தாசில்தார் உத்தியோகம் படிக்கப் போறவங்க 'சர்வே' படிப்பு படிக்கிறதில்லையா? அந்த மாதிரி இந்தியைப் படிக்கிறது, உனக்கு இதிலே என்ன கஷ்டம்? அவன் நேரத்துலே அவன் கொடுக்கிற சம்பளத்திலே நீ இன்னொரு மொழியைப் படிச்சுத் தெரிஞ்சுக்கப் போறே... இது லாபம் தானே?" (ஈவெராமசாமி -ஆனந்தவிகடன் பேட்டி 11.4.1965)
இது தான் ஈவெராமசாமியின் இந்தி எதிர்ப்பு யோக்கியதை. இத்தகைய இந்தி எதிர்ப்பு பின்பக்கத்தை வைத்து இருக்கிற ஈவெராவை தான் இந்தி எதிர்ப்பு போராளி என்று கதை விடுகிறார்கள் கி.வீரமணியிலிருந்து சகல ஈவெராவாதிகளும். அவர்கள் எவ்வளவு பெரிய பொய்யர்கள் என்பதற்கு வேறு ஆதாரம் வேண்டுமா?

சீரியசாகவே போய்க்கொண்டிருந்தால் எப்பூடி? கொஞ்சம் சிரிக்க மேட்டர் எதுனாச்சும் வேண்டாமா?


மீண்டும் சந்திப்போம்.