சீட்டுக் கட்டு ராஜா! ராஜா! சரிஞ்சு போனா லேசா லேசா?

2008 இல் வெளியே தெரிய வந்த அமெரிக்க வங்கித்துறை, நிதித்துறைச் சீரழிவு, இன்னும் எத்தனை நாட்டுப் பொருளாதாரங்களைச் சாய்த்துவிட்டு, ஓயப்போகிறதோ தெரியவில்லை. 
 
நீ முதலில் நுழை! நான் மிச்சத்தை முடிக்கிறேன்! அதுதான் இந்த நீ பாதி-நான் பாதியோ?
அமெரிக்க வங்கித்துறையின் பேராசை எப்படிப்பட்டது என்பதை முந்தைய பதிவுகளில் கொஞ்சம்  பார்த்திருக்கிறோம்.

சென்ற வருடக் கடைசியில் , துபாய் கடன் நெருக்கடியாக வெளிப்பட்டது.  துபாய் இன்னமும் நெருக்கடியிலிருந்து
மீளவில்லை.அந்த நேரத்திலேயே, கிரேக்க நாடு சந்தித்துக் கொண்டிருந்த பிரச்சினை ஓரளவு தெரிந்திருந்தாலும் முற்றி வெடிக்கிற சூழ்நிலைக்கு இப்போது வந்திருக்கிறது. 
கிரீஸ் நாட்டுடன் இந்தச் சீரழிவு நிற்கப் போவதில்லை. ஸ்பெயின், போர்ச்சுகல், ஐரிஷ் அரசுகளும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிற சீக்காளிகளாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சீரழிவு இன்னும் எங்கெங்கெல்லாம் பரவுமோ என்பது தெளிவாகப் புரியவில்லை.

கிரீஸ், தற்போது சந்தித்து வரும் பிரச்சினைக்கு முக்கியமான காரணங்களாக  கோல்ட்மன் சாக்ஸ் என்ற அமெரிக்க வங்கி, கிரேக்க அரசியலில் நிலவும் ஊழல், திறமையற்ற அரசு நிர்வாகம், வரி ஏய்ப்பு செய்பவர்களைத் தொடக் கூட முடியாத பலவீனம்  என்று போய்க் கொண்டே இருக்கிறது.சென்ற  வாரம் கிரீஸ் நாட்டில் போராட்டம் வெடித்தது. ஐரோப்பிய  யூனியனில் உள்ள நாடுகள் உதவத் தயங்கின. இப்படி ஒரு இடியாப்பச் சிக்கலில் சிக்க வைத்த அமெரிக்க கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனத்தின் மீது அமெரிக்க பெடரல் அமைப்பு விசாரணை மேற்கொண்டிருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன. 


கிரீஸ் நாட்டின் கடன் பத்திரங்களை வைத்து வர்த்தகச் சூதாட்டம் நடத்திய அந்த நிறுவனம், கிரீஸ் அரசின் கடன் எவ்வளவு என்பதை மறைக்கவும் உடந்தையாக இருந்திருக்கிறது என்ற குற்றச் சாட்டு, மேம்போக்காக ஒரு செய்தியாகத் தெரியலாம். ஆனால், அமெரிக்க நிதித்துறையின் பேராசைக்கு, லட்சக்கணக்கான மக்கள் பலியாக வேண்டியிருக்கிறது, நடுத்தெருவுக்கு வர வேண்டியிருக்கிறது என்பதைக் கொஞ்சமாவது புரிந்துகொள்ள முடிந்தால், செய்திக்குப் பின்னால் உள்ள கோரம் தெரியும். 
 
இப்ப என்ன செய்வீங்க? இப்ப என்ன செய்வீங்க! 
மத்தவங்க செஞ்சாத்தான் தப்பு! அமெரிக்கா செஞ்சா..?

Goldman Sachs appears to be testing the limits of its special talent for avoiding all accountability following revelations of its role in exacerbating the Greek debt crisis.


கொஞ்சம் எங்கேயோ என்னமோ நடக்கிறது என்றில்லாமல், கவனித்துப் பார்த்தோமென்றால்  கிரீஸ் நாட்டில் உள்ளதை விடப் பெரிய ஊழல் நிறைந்த அரசியல், திறமையற்ற, செயல்பட முடியாத அரசு நிர்வாகம், வரி வசூலில் மெத்தனம்,. அல்லது ஏய்ப்பதற்கு மட்டுமே துணை நிற்கும் அரசு ஊழியர்கள் இதெல்லாம் இந்தியாவிலும் தீராத வியாதியாக இருக்கிறது. கிரீஸ் அளவில்  சிறிது தான் என்றாலும், அதன் கடன் சுமையும் இந்தியாவின் கடன் சுமையும் சற்றேறக் குறைய சமம் தான்! 12%

The European Union (EU) is shocked--shocked I tell you!--that Greece used financial engineering to qualify for admission. Exactly how did they think that weaker countries managed to meet the requirements? 

Now the EU is concerned that geeks used their knowledge of Greece's hidden debt (and bailout negotiations) to manipulate financial markets for their own profit.


A few years ago, Greece engaged in derivatives transactions which essentially gave it a disguised loan, a gift from geeks. 

Greece may or may not have had plans to invest the money to create national wealth instead of say, blowing it all on national bling. Either way, Greece used its national credit card in a futile attempt to keep up with the EU Joneses.

ஐரோப்பிய யூனியன் என்று ஆரம்பமானது பதினோரு வருடங்களிலேயே பரிதாபமான தோல்வியாகவும் ஆகிவிடுமோ!? தங்களுடைய பிரச்சினைக்கு முன்வந்து உதவவில்லை என்று, கிரேக்க அரசு ஜெர்மனி மீது பாய்ந்திருக்கிறது. கடைசியாக, ஜெர்மனி, பிரான்ஸ் முதலான நாடுகள் கிரேக்க அரசின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம் என்ற தகவல்களும் வந்திருக்கிறது. துபாய் நெருக்கடியில், அபுதாபி தலையிட்டு உதவ முன்வந்த மாதிரி! இதுவுமே கூட தற்காலிகமான நிவாரணமே தவிர, பிரச்சினையை முழுக்கத் தீர்க்கப் போவதில்லை.  கொஞ்சம் விரிவாகத் தெரிந்து கொள்ள இங்கே.


டாட்டாக்கள், சீக்காளியாகிப் போன கோரஸ் ஸ்டீல் மில்லை வாங்கினார்கள். பொதுமக்களிடமிருந்து, வங்கிகளிடமிருந்து  எக்கச் சக்கமான கடனைப் பெற்று இந்த அக்விசிஷன் நடந்தது. ஆஹா! இந்திய நிறுவனங்களும் சர்வதேசச் சந்தையில் பங்காளிகளாகிப் போனோம் என்று பெருமிதப் படக் கூடிய விஷயமா அல்லது இன்னொரு படுகுழியில்  சிக்கிக் கொண்டதாக ஆகிப் போய் விடுமா
என்பதுமே இன்னமும் தெளிவாகவில்லை.

கிரீஸ், தொடர்ந்து ஸ்பெயின், போர்ச்சுகல், அயர்லாந்து என்று வரிசையாக சீட்டுக் கட்டு சரிவதைப் போல ஐரோப்பியப் பொருளாதாரங்கள் சரிந்து வரும் நிலையில் இந்தியா எந்த விதப் பாதிப்புமே இல்லாமல்,தனித்து நின்று விட முடியுமா? 


இந்திய அரசு வெளிப்படையாக எதையும் இதுவரை சொல்லவில்லை. சொன்னதும் இல்லை. முன்னெச்சரிக்கையாக ரிசர்வ் வங்கி எந்த நடவடிக்கையையும் மேற்கொண்ட மாதிரியும் தெரியவில்லை.

இந்த லட்சணத்தில் பட்ஜெட் அறிவிப்பில் இந்திய சந்தையை, திறந்து வைக்கப் போவதாக நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். ஏற்கெனெவே திறந்து விட்டதெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்ற சிந்தனையே இல்லாத முடிவாகவே இருக்கிறது.


மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் தினமணியில் வெளியான தலையங்கம் ஒன்றை வைத்து ஒரு பயனுள்ள விவாத இழை ஓடிக் கொண்டிருக்கிறது. 

மரபணு மாற்றம் செய்யப் பட்ட விதைகளைக் குறித்தது என்றாலும் கூட, சுதந்திரம் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தை எழுப்பக் கூடியதாக இருக்கும் பிரச்சினை. அங்கே கூட, மிகவும் படித்தவர் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் வந்து சம்பந்தமே இல்லாத விஷயங்களைத் தொட்டு, குறுக்குச் சால் ஓட்டுவதையும் பாருங்கள். அது, இது, பட்ஜெட் எல்லாமே சம்பந்தமுள்ளவைதான்!

சுதந்திரமாகச் சிந்திக்க நமக்குத் தெரியுமா? என்ன செய்யப் போகிறோம்? எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? இந்த அடிப்படைக் கேள்விகளை முன்வைப்பவை தான்!

பட்ஜெட் பற்றிய முந்தைய பதிவில், உங்களுடைய கருத்துக்களைக் கேட்டிருந்தேனே! கருத்துக்கள், பதிவின் உள்ளடக்கத்தை ஒட்டினது மட்டும், வரவேற்கப் படுகின்றன.





2 comments:

  1. our peoples gives priority to savings.

    that may be withstand from any hurricane.

    i hope so/

    ReplyDelete
  2. ஒரு பொருளாதாரத்தின் பலம், அதன் தேசீய சேமிப்பில் இருக்கிறது என்பது வரை உண்மை.

    நம் நாட்டில் சேமிப்பு என்ன வகையில் இருக்கிறது (நகை அல்லது வீட்டு மனை) என்பதைப் பார்த்தாலே, அந்த சேமிப்பு, வளரச் செய்கிற சேமிப்பா, வளர்ச்சியைக் கரைக்கிற சேமிப்பா என்பது தெரிய வரும்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!