இட்லி வடை பொங்கல்! அரசியல் பலவிதம்! #31

தண்ணீர் பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம் போராட்டம் என்று திமுக இன்றைக்கு மக்களைத் தூண்டுகிற நோக்கத்தில் மாநிலம் முழுக்க நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திமுக, அதிமுக ஆசாமிகள் நடத்தும் மது ஆலைகளை மூடினாலே தினசரி பலலட்சம் லிட்டர் தண்ணீர் ஜனங்களுக்குக் கிடைக்குமே! அதைப்பற்றி மட்டும் பேசமாட்டார்கள்! 


ரெண்டு முருகனுக்கு ரெட்டை நாடி உடம்பு மட்டுமில்லை! ரெட்டை நாக்கும் கூட!  
Narayanan R 
பக்கத்துல இருக்குற சென்னைக்கே தண்ணீர் கொடுக்க மாட்டேன்னு சொல்ற இந்த தைரியம் இவர்களுக்கு எப்படி வந்தது ?
கர்நாடகா, கேரளாவை தண்ணீர் கொடு என்று கேட்க என்ன அருகதை உள்ளது ?
ஜோலார்பேட்டை என்ன துரைமுருகன் வம்சாவழி சொத்தா ?
குவார்ட்டர், பிரியாணி, 500, 2000, ஓட்டுப்போடாத சென்னை கிராக்கிகளே...சாவுங்கடா.


கே என் நேரு நன்றாகத்தான் கேட்டிருக்கிறார்! எத்தனை நாளைக்குத்தான் காங்கிரசுக்குப் பல்லக்குத் தூக்குவது? ஆனால் ஆதாயமில்லாமலா தூக்கினார்கள் என்று எதிர்க்கேள்வி ஒன்று எழுகிறதே! ஸ்பெக்ட்ரம் உள்ளிட்டு கூட்டணி தர்மமாக ஆண்டு நிறைய அனுபவித்தவர்கள் இப்படிப்பேசலாமா என்று காங்கிரஸ்காரன் எவனும் நேருக்கு நேர் கேட்கமாட்டான்!  நாம் கேட்கலாமே! 



யார் கட்சியைவிட்டுப் போனால் என்ன? தன் மகன் லோகேஷை கட்சித்தலைவர் ஆக்கிவிடுவது என்பதில் தெலுகு தேசக்கட்சியின் சந்திரபாபு நாயுடு பிடிவாதமாக இருக்கிறார்.கட்சிக்குள் எதிர்ப்பு இருக்கிறது, பிளவுபடும் அபாயமும் இருந்தாலும் சந்திரபாபு நாயுடு எனக்கொரு கவலையில்லே என்றிருக்கிறார் என்கிறது ஆந்திர மாநிலச்  செய்திகள். கிறித்தவர் என்ற எதிர்ப்புக்களையும் மீறி ஜெகன் மோகன் ரெட்டியின் தாய் மாமன் சுபபா ரெட்டியை திருமலா திருப்பதி தேவஸ்தான சேர்மனாக நியமித்திருக்கிறார்கள். மனிதர் சிம்பிளாக நான் ஹிந்து மதத்தைத்தான் practise செய்து வருகிறேன் என்று சொல்வது  என்ன மாதிரியான ஆட்டம்?


போஸ்டரில் புளிச்சமாவு எழுத்தாளர் என்று அடைமொழி இட்டுச்   சொன்ன பிறகும் கூடக் கூடுதல் விமரிசனம் வேண்டுமா என்ன? 😄😄  

    
தொடர் தோல்வியில் மனம் பேதலித்துப்போய் யோகா தினத்தைக்  கிண்டல் செய்கிறேனென்று ட்வீட்டிய ராகுல் காந்திக்கு கண்டனங்கள் மேலும் மேலும் குவிந்து கொண்டே இருக்கின்றனவாம். 'It's a New India where dogs are smarter than you': Paresh Rawal flays Rahul Gandhi for tweet on Yoga Day பரேஷ் ராவல் ஒரு நடிகர், பிஜேபிகாரர்.


திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்பி சசி தரூருக்குக் கட்டம் சரியில்லை போல இருக்கிறது.The Lok Sabha on June 21 saw Thiruvananthapuram MP Shashi Tharoor make spirited arguments against the Triple Talaq Bill, but his intervention has upset the Congress party, Outlook has learned.

A senior Congress said Tharoor had made the intervention in his personal capacity as a Lok Sabha MP, adding the party was “not in favour of opposing the introduction of the Bill and wanted the legislation to be referred to a Parliamentary Standing Committee for further discussion.”  காங்கிரசின் நிலையே முத்தலாக் சட்டத்துக்கு எதிர்ப்பு தானே? இதில் சசிதரூர் மீது வருத்தப்பட என்ன இருக்கிறது என்கிறீர்களா?  காங்கிரஸ் கட்சி எப்படி நடத்தப்படுகிறது என்பது உங்களுக்கு இன்னமும் சரியாகப் புரியவில்லை, அவ்வளவுதான்! சரி, ஏனாம்?

“It was a matter of great distress that Congress chose to oppose the introduction of Triple Talaq Bill,” Ravi Sankar Prasad had said. The law minister had gone on to use Tharoor’s comments to also launch a broadside against Congress Parliamentary Party (CPP) chairperson Sonia Gandhi saying, “A woman leader like Sonia Gandhi Ji is the leader of Congress party, yet Congress party takes an anti-women position in the Lok Sabha, opposing even the introduction of the Bill, I must say it is not only painful but deeply regrettable.”  இப்படி சோனியாG யை சிக்கவைக்கிற மாதிரி ஆகிவிட்டதே என்பதால்தானாம்! எஜமானி  காது கழுதைக் காதுதான்! ஆனால் அந்த ரகசியம் வெளியே தெரிந்து விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது அடிமைகளின் முக்கியமான கடமை! அதில் சசி தரூர் தவறி விட்டார் என்பது தான் விஷயம்!  

மீண்டும் சந்திப்போம்.
        

2 comments:

  1. ஜோலார்பேட்டையில இருந்து தண்ணி கொண்டு வந்தால் அதை எதிர்த்து போராட்டம் நடத்துப்படும்..ந்னு சொல்றார் துரை முருகன்...

    அதை திமுக ஆதரிக்கிறதா!...
    எனில் இந்தப் போராட்டம் எதுக்கு?..

    விலாங்கு மீனைத் தோற்கடித்து விட்டார்கள்...

    ReplyDelete
  2. வாருங்கள் துரை செல்வராஜூ சார்! எதிர்க்கட்சிகள் என்றால் அரசுசெய்வது எல்லாவற்றையும் எதிர்த்துக் கொண்டே இருக்கவேண்டும் என்ற இலக்கணத்துக்கு புதுப்புது அர்த்தங்களை திமுக கண்டுபிடித்து, கலகம் போராட்டங்களைத் தூண்டுவது என்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள்! சீனியர் கைத்தடி என்பதால் ரெண்டுமுருகன் சொன்னால் அது திமுக தலீவர் சொன்ன மாதிரித்தானே! இல்லையோ?

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!