உரத்துக் கூவினால் மட்டும் அது உண்மையாகி விடுமா?

ன்றி Shri Sukumar Ramachandran Sir என்று முகநூலில் இருந்து எடுத்து, இதைப் பகிர்ந்திருக்கிறார் நண்பர் பொன்மாலைபொழுது பதிவர் மாணிக்கம்! இங்கே ஊடகங்கள் மறைத்தாலென்ன? லோக்சபா டிவியில் காணக் கிடைக்கக் கூடியதுதானே?ஆனால், தேடிப் பார்த்து உண்மையென்ன என்பதை அறிய நம்மில் எத்தனை பேர் தயாராக இருக்கிறோம்?

இந்த ஒரு சிந்தனையை எழுப்புவதற்காவே, இந்தப் பகிர்வை நான் பார்த்தபடியே வெளியிடுகிறேன்!

ஊடகங்கள் மூடி மறைத்த ஒரு சுவாரஸ்யமான சொற்போர்.

காங்கிரஸ்கட்சியின் தலித் M.P திரு மல்லிகார்ஜுன் கார்கே (Mallikarjun Kharge) கையைக் காலை ஆட்டி சவுண்ட் விடுகிறார்/மிக சத்தமாகக் கேட்கிறார் பிரதமர் மோடியைப் பார்த்து, "தலித் ஆன எங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்த பட்சம் ஒரு சென்ட் நிலமாவது ஒதுக்குங்கள்!நாங்களும் வாழ வேண்டாமா?" .சிங்கம் போல கர்ஜிக்கிறார்.

லோக் சபாவில் ஊசி விழுந்தால் ஓசை கேட்கும் அமைதி!கொஞ்ச நேரம் ஆனது. Dramatic effect க்காகவே காலந்தாழ்த்தியவர் போல பிரதமர் மோடி பதில் சொல்லக் கொஞ்ச நேரம் எடுத்துக்கொண்டு நிதானமாக எழுந்தார்.கேட்டார், "நீங்கள் தலித் தானே? உங்களிடம் எவ்வளவு நிலம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? நான் சொல்லட்டுமா?"

பிரதமர் சொன்னார்

"சரி நானே சொல்லி விடுகிறேன்.பெங்களூரு பன்னெர்காட் ஏரியாவில் 500 கோடி ரூபாயில் ஒரு காம்ப்ளெக்ஸ் இருக்கிறது.சிக்மகளூரில் 300 ஏக்கர் காஃபி எஸ்டேட் இருக்கிறது.அங்கே 50 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஒரு பங்களா

கெங்கேரியில் 40 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஃபார்ம் ஹவுஸ்

ராமய்யா கல்லூரிக்கு அருகில் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு கட்டிடம்.

பெங்களூரு R T நகரில் உள்ள இன்னொரு பங்களா,பெல்லாரி ரோட்டில் 17 ஏக்கர் விளைநிலம்,இந்திரா நகரில் ஒரு மூன்று மாடிக்கட்டிடம்,பெங்களூரு சதாசிவ நகரில் இரண்டு பங்களாக்கள்.

இவை போக உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் மைசூர், குல்பர்கா, சென்னை, கோவா, பூனே, நாக்பூர், மும்பை, டெல்லி நகரங்களில் இருக்கும் சொத்துக்களின் பட்டியலையும் வாசிக்கட்டுமா?" திரு மல்லிகார்ஜுன் கார்கே முகத்தில் ஈயாடவில்லை.

"தலித்துகளுக்கு ஒரு சென்ட் நிலம் ஒதுக்குவதாய் இருந்தால் இவர்களுக்கெல்லாம் ஒதுக்க வேண்டாம் தானே."

காங்கிரஸ் தரப்பில் மயான அமைதி.

ஆளுங்கட்சி தரப்பில் பெஞ்சைத் தட்ட ஆரம்பித்தார்கள்.

அடங்க ஐந்தாறு நிமிடங்கள் ஆனது.

ஊடகங்கள் ஏன் இதை வெளியில் சொல்லவில்லை? ஊடகங்களின் மௌனத்தை வாங்க .கார்கே என்ன விலை கொடுத்தாரோ, தெரியவில்லையே!

ஆங்கில மூலத்தின் மொழி மாற்றமும் ட்ராமாட்டிக் எஃபெக்ட்டும் என்னுடையது. என்று பகிர்வு முடிகிறது.
..............................................................................................................................................


து இன்றைய வெல்லும் சொல் நிகழ்ச்சி! News18 தமிழ்நாடு சேனலில் ஒளிபரப்பான நிகழ்ச்சி! நேற்றைய நாட்களில் லட்சியவாதியாக முழங்கிக் கொண்டிருந்த திருமாவளவனை, தேர்தல் அரசியலும், திராவிடக் கட்சிகளின் சங்காத்தமும் எப்படியெல்லாம் மாற்றி இருக்கிறது என்பதை கவனிக்கும்போது .........


எங்கே போகிறோம் என்கிற கேள்வி முன்னால் வந்து நிற்கிறது! The Riddle of Sphinx கதை நினைவுக்கு வந்து பயமுறுத்துகிற மாதிரியெல்லாம் இல்லை!

ஆனால், கேள்விகளை ஒதுக்கிக் கொண்டே எத்தனை காலம் தான் தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பதாம்?

சொல்லுங்கள்!


2 comments:

  1. அந்த லோக் சபா டிவி (மல்லிகார்ஜுனா கார்கே) இணைப்பு இருந்தால் தரவும்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி!

      //இந்த ஒரு சிந்தனையை எழுப்புவதற்காவே, இந்தப் பகிர்வை நான் பார்த்தபடியே வெளியிடுகிறேன்!///
      இப்படிச் சொன்னபோதே, இணைப்பு என்னிடமில்லை என்பது புரிந்திருக்குமென்று நினைத்தேன். ஆனால் கார்கேவின் சொத்துக்குவிப்பு பற்றி இணையத்தில் ஏகப்பட்ட தகவல்கள் உலவுகின்றன.

      சொல்ல வந்த விஷயம் திருமாவளவன் தேர்தல் அரசியலில் எவ்வளவு மாறிப்போயிருக்கிறார் என்பதைக் கவனித்து வருவதை பற்றியது!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!