ஊடகச் சாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

லிபரலிசம் என்பது ஒரு மனநலப் பிறழ்வு! The Wire தளத்தில் புல்வாமா தாக்குதல் குறித்து சமீபத்தில் எழுதியிருப்பதே அதன் நிரூபணம் என்று இங்கே எழுதி இருப்பதை  இப்போதுதான் வாசித்து முடித்தேன்.


இந்த இடதுசாரிச் சார்புள்ள அறிவுக்கொழுந்து தன்னுடைய தளத்தில் எழுதியிருப்பது இப்படி!காஷ்மீர் விவகாரம் குறித்து அவருடைய அறியாமை வெளிப்படுகிற மாதிரி!
The fact is that the post-Pulwama situation is too tempting for the Bharatiya Janata Party not to exploit it for political ends. It would clearly make sense for Modi to completely divert attention from the lack of jobs and agrarian crises to the question of who is best suited to preserve national security. The BJP will be further tempted to mix with national security the right quantity of majoritarian angst over Kashmir. This could be a potent cocktail and the opposition parties must be ready to counter this in their election campaign two months from now என்று எம்கே வேணு எழுதியிருப்பது முழுக்க முழுக்க ஊகத்தின் அடிப்படையில்! வெற்று ஊகங்களுக்கு என்ன மரியாதை கொடுக்க முடியும்? நேரெதிர் கருத்துக்கள் இரண்டையும் உங்கள்முன் சுட்டி கொடுத்து வாசிக்கும்படி பரிந்துரை செய்கிறேன்! உண்மைபோல சித்தரிக்கப்படும் செய்திகளில் ஒரு உள்நோக்கம், திரித்தல் இருப்பதை வேறு எப்படிப் புரிந்து கொள்வதாம்? ட்வீட்டரிலும் முகநூலிலும் புல்வாமா தாக்குதல் நடந்ததருணம் நரேந்திர மோடி வேறு ஒரு (விளம்பர) ஷூட்டிங்கில் இருந்தாரென்ற கட்டுக்கதை அவிழ்த்து விடப்பட்டதும், பதிலடி நிறைய ஆரம்பிக்கவே  காணாமல்போனதும் சற்றுமுன் நடந்த கதை!       
#TheWire எம்கேவேணு என்ற ஹேஷ்டாகுகளில் சிலவிஷயங்களை கூகிள் பிளஸ்சில் எழுதிய பகிர்வுகளிலிருந்து இரண்டு மட்டும் இங்கே!

2014 இல் நரேந்திரமோடி பிரதமரான பிறகு #மோடிஎதிர்ப்பு ஒன்றை மட்டுமே மையப் புள்ளியாக வைத்து #இணையப்பத்திரிகைகள் இங்கே கல்லாக்கட்ட ஆரம்பித்ததில் #thewire #scrolldotin #quint போன்றவை சில #உதாரணஊடகங்கள் ஒரு செய்தியில் உண்மையிருக்கிறதா என்பதைவிட பரபரப்புக்கே முக்கியத்துவம் கொடுக்கிற #பப்பரப்பேஊடகங்கள் என்பதில் தான் இவற்றின் #விஷம் #விஷமம் #வியாபாரம் எல்லாமே அடக்கம்! யார் யார் பின்னணியில் இருக்கிறார்கள் எங்கேயிருந்து வருமானம் வருகிறது என்பதைத் தெரிந்துகொள்வது அத்தனை கடினமானதொன்றும் இல்லை.
#CBIvsCBI என்று பரபரப்பாக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அலோக்வர்மா confidentialityயை மதிக்காததன் மீது அதிருப்தியைப் பதிவு செய்திருக்கிறது. அஜித் டோவல் மற்றும் RAW அதிகாரி ஒருவர் மீது சேறு பூசும் செய்திகளை இரண்டொருநாட்களாகவே ஊடகங்கள் வெளியிட்டது அலோக் வர்மாதான் என்பதும் வெளியே வந்திருக்கிறது Disinformation is intentionally false or inaccurate information that is spread deliberately. It is an act of deception and false statements to convince someone of untruth. Disinformation should not be confused with misinformation, information that is unintentionally false
நீங்கள் வாசிக்கிற செய்திகளில் எது எதெல்லாம் #disinformation திட்டமிட்டே பரப்பப்படும் பொய்கள் என்பதை எப்போதாவது யோசனை செய்து பார்த்திருக்கிறீர்களா? எழுதியது நவம்பர் 20, 2018


#காங்கிரஸ்கட்சி யின் மணிசங்கர் ஐயருடைய பிறந்தவீடு பாகிஸ்தான் என்பதோ வாழ்கிற இந்தியாவை விட பாகிஸ்தான் மீதுதான் மணிசங்கர அய்யருக்குப் பாசமும் பிணைப்பும் அதிகம் என்பதோ இங்கே பலருக்கும் தெரியாத விஷயம். #TheWireதளத்தில்விஷமும் விஷமமும் கலந்து எழுதியிருக்கிற கட்டுரை

Instead of soundly running foreign policy through sober, institutionalised mechanisms, it is the misuse of foreign affairs to build a personality cult that has been at the root of the Modi Diplomatic Disaster in South Asia என்று ஆரம்பிக்கிறது.

இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை காங்கிரஸ் ஆண்ட அறுபது சொச்சம் வருடங்களில் எப்படியிருந்தது? விடுதலை அடைந்த நாட்களில் நேருவும் கிருஷ்ணமேனனும் மணிசங்கர் அய்யர் சொல்கிறபடிதான் வெளியுறவுக் கொள்கையை ஸ்தாபனப் படுத்தப்பட்ட மெக்கானிசத்தில் தான் வகுத்தார்களாமா? 1962 இல் நேருவின் ராஜதந்திரமும் அணிசேராக்கொள்கையும் பல்லிளித்து நின்றது அய்யருக்குத் தெரியாமல் நடந்துவிட்டதோ? #நேருமகள்ஆட்சிக்கு வந்த பிறகாவது அண்டைநாடுகளுடனான உறவுகள் மேம்பட்டதா என்றால் அதுவுமில்லை.தாத்தன், அம்மா வகுத்த பாதையிலிருந்து விலகிக் கொஞ்சம் pragmatic ஆகச் சிந்தித்த ஒரேகாங்கிரஸ் பிரதமர் ராஜீவ் காந்திதான்! ஆனாலும் கூட அவராலும் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. #பாகிஸ்தான் #இலங்கை இரண்டுமே இன்னமும் அதிகமாக விலகிப்போனதுதான் மிச்சம். 

#நேருபாரம்பரியம் மோசமானதுதான்! ஆனால் அண்டை நாடுகளுடனான உறவுகளில் விரிசல்,பின்னடைவு ஏற்பட்டு இருப்பதற்கு அவர்களை மட்டுமே குறைசொல்வது இந்தப் பகிர்வின் நோக்கமல்ல. முழுக்க முழுக்க விரோதமனப்பான்மை கொண்ட நாடுகளால் சூழப்பட்டிருக்கிற நாடு இந்தியா. நேபாளம் மட்டும் விதிவிலக்காக இருந்தது. மாவோயிஸ்டுகள் அங்கே தலையெடுத்து ஆட்சியையும் பிடித்தபிறகு நிலைமை முற்றிலும் விரோதமானதாக மாறிப்போனது.

#தாராளமயமாக்கல் #உலகமயமாக்கல் இரண்டும் சேர்ந்து ராஜீய உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. சீனா மாதிரி #கந்துவட்டிஏகாதிபத்தியம் கூட தாக்கத்திற்குள்ளாகி இருக்கிறது. மணிசங்கர அய்யர் குறிப்பிட்டிருக்கிற சின்னஞ்சிறு நாடுகளுடனான உறவுகளில் ஏற்பட்டிருக்கிற தேக்கம், தொய்வுக்கு பின்னணியில் சீனா ஒரு வலுவான காரணம் என்பதை மறந்து விட்டுத் தனியாகப் பார்க்க முடியாது. #தேக்கம் தற்காலிகமானது அங்கேயே தேங்கி நின்றுவிடுவது அல்ல என்பதை புரிந்து கொண்டால் மணிசங்கர் அய்யர் சித்தரிக்க முற்படுகிற #விஷமவலை அறுந்துபோகும். எழுதியது 26 மே, 2018 
Modi's Neighbourhood Policy: Chronicling Four Wasted Years: Mani Shankar Aiyar
A general with no foot soldiers, Modi has been unable to see foreign policy beyond the photo-op Instead of soundly running foreign policy through sober, institutionalised mechanisms, it is the misuse of foreign affairs to build a personality cult that has b...


2 comments:

  1. நேபாளத்தில் மாவோயிஸ்ட்கள் தலையெடுக்க காரணமே இந்தியாவின் வெளிநாட்டு விவகாரத் துறையின் தோல்வியாகும். உண்மையான அந்நியரின் கைக்கூலிகள் இவர்களே. பாஸிஸம் என்ற ஒற்றை வார்த்தையை பிடித்துக்கொண்டு-அதன் பொருள் யாருக்கும் புரியாது என்பதால்- அதிமேதாவித்தனமாக எழுதுவது என்பது கூலிக்கான உழைப்பு. தங்களுக்கு தேசபக்தி கிடையாது என சொல்லமாட்டார்கள். ஆனால் தேசத்தை-தன்மானத்தை-இடது சாரி சித்தாந்தம் என்பதற்காக அடமானம் வைத்து தம்முடைய விசுவாசத்தை வெளிக்காட்டத் தயார்.
    சித்தாந்தப் போர்வையில் ஒளிந்து கொண்டு திரியும் தேசவிரோதி கும்பல் இது. இவர்களை நம்புவர்களும் இருப்பதே பெரிய வருத்தம்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கபீரன்பன் சார்!

      தேசபக்தியுடன் மக்களுடைய நலனில் அக்கறை கொண்டிருந்த பல நல்ல இடதுசாரித் தலைவர்களும் இங்கே இருந்தார்கள். ஆனால் சில நக்சல் குறுங்குழுக்கள் அதன் அபிமானிகள் என்று கலகக் குரல்கள் இப்போது நிறைய ஒலிக்க ஆரபித்துவிட்டன. முக்கியமான காரணம் சமூக வலைத்தளங்கள். அரசின் கையாலாகாத் தனம் அல்லது அசமந்தத்தனம் வேறு இவர்கள் துள்ளுவதற்கு உதவியாக இருக்கிறது.

      நேபாள விவகாரங்களில் https://www.quora.com/Why-was-the-Nepal-monarchy-in-Nepal-abolished/answer/Parth-Dutt இங்கே பிரச்சினையின் தொடக்கம், twists என்ன என்பதைக் கொஞ்சம் பார்க்கலாம் . மார்க்சிஸ்ட் குழுக்கள் பல ஒன்று சேர்ந்து சீன ஆதரவுடன் இப்போது ஆளுகிறார்கள். நம்முடைய வெளியுறவுத்துறை அதிகாரிகள் ராஜீய விவகாரங்களை ஆழமாகச் சிந்தித்து முடிவெடுக்க முடியாதவர்கள், அரசுக்குத் தேவையான ஆலோசனைகளைத் தர சக்தியில்லாதவர்கள் என்பது நிரூபிக்கப்பட்ட தருணம் அது.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!