ஒரு புதன் கிழமை! கவனிக்க வேண்டிய செய்திகள்! கவனிக்கிறோமா?

வின் நியூஸ் சேனலில் மதன் ரவிச்சந்திரன் மீண்டும் சுறுசுறுப்பாகி இருப்பதை நண்பர்கள் அறிந்து வைத்திருப்பார்கள் என்றே நம்புகிறேன். இங்கே ஒரு சூடான நேர்காணல். வெறும் 18 நிமிடம் தான்! இருபகுதிகளாக வெளியிடுகிறார்களோ என்று காலையில் இருந்து தேவுடு காத்தும் கூடக் கிடைத்தது இது மட்டும்தான்!  


வீடியோ பகிர்வு சிறிதானாலும் கூடக் காரம் குறையவில்லை என்பதும் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி கேள்விகளுக்கு பதில் சொல்வதில் தயங்கவில்லை என்றாலுமே கூட சில முக்கியமான விஷயங்களில் எனக்குத் தெரியாதே என்று சொல்வது மிக விசித்திரமாக இருக்கிறது. உதாரணமாக இசுடாலின் மிசா காலத்தில் கைது செய்யப் பட்டாரே தவிர மிசாவின் கீழ் கைது  செய்யப்படவில்லையே என்ற கேள்விக்கு பொன்முடி சமாளிக்க முடியாமல் தடுமாறி விட்டு இப்போதுதான் கேள்விப்படுகிறேன் எனக்குத் தெரியாது என்று சொல்கிற  உள்ளூர்க் காமெடியாக! ஆனந்த விகடன் உடனடியாக இசுடாலினுக்கு ஆதரவாக வெறும் ஊகங்களை வைத்தே ஒரு செய்தியைப் பரப்ப ஆரம்பித்துவிட்டது கூடுதல் சுவாரசியம்! 

பதிவர் R P ராஜநாயஹம் எழுத்தைப் பற்றி இந்தப் பக்கங்களில் பலமுறை வியந்து பகிர்ந்திருக்கிறேன். எழுத்து நடைக்காக மட்டுமில்லை, அதிலுள்ள அபூர்வத் தகவல்களுக்காகவும்! படித்ததில் பிடித்தது பகுதிக்காக இது! கேட்டதைக் கேட்டபடி என்ற எச்சரிக்கைக் குறிப்புடன் தான் சொல்கிறார்: 
 


உதயசூரியன் - R.P.ராஜநாயஹம்
கி.அ.சச்சிதானந்தம் என்றாலே மணிக்கொடி எழுத்தாளர் மௌனி ஞாபகம் யாருக்கும் வராமலிருக்காது. மௌனியைப் பிரபலப்படுத்தியதில் இவருடைய பங்கு பெரியது.
சச்சிதானந்தத்தின் இமயமலை Trekking மறக்கமுடியாது. இமயமலை நடைப்பயணத்திற்கான ஆயத்தத்திற்காக எவ்வளவோ காலம் தினமும் கோபாலபுரத்திலிருந்து தாம்பரத்திற்கு தினமும் நடந்து போய்விட்டு திரும்பி வந்திருக்கிறார்.
ந.முத்துசாமியின் ஐம்பதாண்டு கால நண்பர். ஓவியர் மு. நடேஷ் இவரைப்பார்த்ததும் உற்சாகமாகி “ நடமாடும் சிறுகதை!” என்பார். பேராசிரியர் டாக்டர் செ.ரவீந்திரனின் உற்ற தோழர் சச்சிதானந்தம்.
இங்கே நான் சொல்ல வருவது தமிழக அரசியல் சம்பந்தப்பட்டது.Don’t be too surprised by what you hear. One can’t be sure about anything these days. Just giving it to you as I hear it.
மு.கருணாநிதி ஒரு காலத்தில் சச்சிதானந்தத்தின் வீட்டில், மாடியில் வாடகைக்கு குடியிருந்திருக்கிறார்.ஒரு முறை சி.என்.அண்ணாத்துரை அந்த வீட்டிற்கு கருணாநிதியைப் பார்க்க வந்திருக்கிறார்.
வீட்டின் ’கேட்’ இவர் கையினால் திறக்கப்படுகிறது. மாடியேறிப் போய் கருணாநிதியை பார்த்து விட்டு கீழே இறங்கியவர் வீட்டு முகப்பில் உதய சூரியன் வடிவமைக்கப் பட்டிருப்பதை நின்று உற்று கவனிக்கிறார்.There is a silver lining out there, if we just step back and take a fresh look!
ஒரு தீர்மானத்திற்கு வந்தவர் போல மீண்டும் மாடியேறி மூக்குப்பொடியை உறிஞ்சியவாறு கருணாநிதியை பார்த்து விட்டு அண்ணா சொல்லியிருக்கிறார். ”நம் கட்சி திமுகவுக்கு சின்னம் உறுதி செய்து விட்டேன். உதய சூரியன்!”
உடனே,உடனே Power Monger கருணாநிதியின் எண்ண ஓட்டம் இப்படி இருந்திருக்குமோ? ”Let not ’the rising sun’ see my black and deep desires!”
மேக்பத் வார்த்தைகள் : Let not light see my black and deep desires.
இன்னொரு பகிர்வும் அதில் இருக்கும் தகவலைச் சரியாகப் புரிந்து கொள்வதற்காக:


பிரதமர் நரேந்திர மோடி நோபல் பரிசு பெற்ற அபிஜித் பேனர்ஜியை பாராட்டும் போது The Sveriges Riksbank Prize in Economic Sciences காக என்று சொல்லிதான் அவரை பாராட்டினாரே தவிர நோபல் பரிசு பெற்றதற்காக பாராட்டுகிறேன் என்று குறிப்பிடவில்லை.......இது அபிஜித் பேனர்ஜியை சிறுமை படுத்தி விட்டது என்று சமூக வலைதளங்களில் சிலர் பேசினர்...
இந்த விருதை பற்றி தெரிந்தவர்கள் இப்படி பேச மாட்டார்கள்...
ஆல்பிரட் நோபல் தன்னுடைய உயில் மூலம் 1895 சில துறைகளுக்கான விருதுகளை ஏற்படுத்தினார்....அதில் பொருளாதாரம் இல்லை....
1968 ஆம் ஆண்டு சுவீடன் நாட்டின் Sveriges Riksbank தன்னுடைய 300 ஆண்டு விழாவை கொண்டாடும் விதத்தில் ஆல்பிரட் நோபல் Foundation க்கு நிதியளித்தது...அந்த நிதியிலிருந்துதான் பொருளாதாரத்திற்க்கான இந்த விருது வழங்ப்படுகிறது ....ஆகவே உள்ள படி பார்த்தால் இந்த விருது அந்த வங்கி பேரில் ஏற்படுத்தப் பட்ட விருது....ஆனால் நோபல் Foundation நிர்வாகம் மட்டுமே செய்கிறது... 

மீண்டும் சந்திப்போம். 


3 comments:

  1. 'ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே!' சொல்லிடறேன். பதிவைப் படித்துவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. கௌதமன் சார்!

      நீங்கள் படித்துவிட்டேன் என்று சொல்வதே இந்தப்பக்கங்களில் எழுதுவதற்குக் கிடைக்கும் பெரிய பரிசு!
      (அதைத்தாண்டி சொல்வதற்கு வேறு விஷயமில்லை என்று குட்டு வைத்திருப்பதையும் புரிந்துகொண்டே சொல்கிறேன்!)

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!