சீனா எழுபது! ட்வீட்டர்! அக்கப்போர் காங்கிரஸ்!

1949 இல் மா சேதுங் தலைமையில் நடந்ததாகச் சொல்லப் படும் சீனப்புரட்சிக்குப் பின்னால் ஒரு 48 வருட உள்நாட்டுப் போராட்டங்கள் தான் இருந்தது. உண்மையைச் சொல்லப் போனால் குழப்பங்கள், போராட்டங்கள் 1958 வரை நீடித்தன. ஆக, சீன மக்கள் குடியரசு (PRC) என்று அமைக்கப்படுவதாக மாவோ அறிவித்த அக்டோபர்  1 ஆம் தேதிதான் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி துவங்கிய நாளாகக் கருதப் படுகிறது என்று சுருக்கமாக அந்தக் குழப்பமான சீன வரலாற்றை மனதில் வைத்துக்கொள்ளலாம்!

   
இன்று  சீனா எழுபது கொண்டாட்ட அலட்டல்களின் ஒரு சிறு காணொளி இது. வாஷிங்டன் போஸ்ட் தளத்தில் ஒரு 2 மணி நேர வீடியோ தொகுப்பையும் பார்த்தேன். சீனா அறுபது, சீனப்பெருமிதம், சீனப்பூச்சாண்டி என்ற வார்த்தைகளில் இந்தப் பக்கங்களில் 2009 ஆண்டுக் கொண்டாட்டத்தைப் பற்றி எழுதிய போது சீனா ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அமெரிக்காவுக்கு அடுத்தபடி, உலகின் 2வது மிகப் பெரிய பொருளாதாரமாகவும் ஆனது. மிகப்பெரிய  ராணுவ சக்தியாகவும் இருந்தது, இந்தப் பத்தாண்டுகளில் தனது வர்த்தக உபரி, பல சீன நிறுவனங்கள்  சர்வதேச அளவில் பெரிதாக வளர்ந்திருப்பது, என்பதோடு ஒரு கந்துவட்டி ஏகாதிபத்தியமாகவும் வளர்ந்திருக்கிறது! அதுவும் போக அதன் ஆதிக்கக்கனவுகள் பல்வேறு வடிவங்களில் செயல் படுத்தப் படுவதும் இந்தப்பத்தாண்டுகளின் முன்னேற்றம்.  உலகின் நட்டநடுநாயகம் அமெரிக்காவாக இதுவரை இருந்தது மாறி  இந்த நூற்றாணடு சீனாவுடையது, என்கிறமாதிரியான கனவுத்திட்டங்களில்  தற்போதைய சீன அதிபர் ஜி ஜின்பிங் தீவீரமாக இருக்கிறார் என்பதோடு இந்தவிஷயத்தை நிறுத்திக் கொள்ளலாம். Under these circumstances, the party is promoting its historical message more assiduously than ever, at a time which, though very different from the past, bears distinct echoes of it. The “people’s leader” has overseen growing repression, a resurgence of ideology, and is increasingly invoking the idea of struggle. China is seeking to reshape the international order once more. Xi is already looking ahead to the republic’s centenary, 30 years hence. Might another story be told by then? என்று இந்த பிரிட்டிஷ் நாளிதழ் சொல்வதைப் படிக்க  

Howdy Modi நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த புகழ் வெளிச்சம் காங்கிரஸ்காரர்களை இன்னமும் உறுத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்க இந்தியர்க ளிடையே டொனால்ட் ட்ரம்ப்பை அறிமுகம் செய்கிற விதமாக அவரிடம் தனக்கு என்னென்னவெல்லாம் பிடித்திருந்தது என்று சொல்லிக் கொண்டே வந்ததில் ஒரு வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் ஆப்கி பார் ட்ரம்ப் சர்க்கார் என்று சொன்னதாக புகழ்ந்து பேசியது அமெரிக்கத் தேர்தல்களில் இந்தியா தலையிடுகிற மாதிரி இருப்பதாக  காங்கிரசின் ஆனந்த் ஷர்மா சொன்னதையே மறுபடியும் சொல்லி ட்வீட்டரில் ஒரு அக்கப்போரை இன்று ஆரம்பித்திருக்கிறார் ராகுல் காண்டி. பிரதமர் என்ன சொன்னார் என்பதை வெளியுறவுத்துறை அமைச்சர் மறுபடியும் விளக்கிச் சொன்ன இந்தச் செய்தியை வைத்து 

Thank you Mr Jaishankar for covering up our PM’s incompetence. His fawning endorsement caused serious problems with the Democrats for India. I hope it gets ironed out with your intervention. While you’re at it, do teach him a little bit about diplomacy.
இன்றைக்கிருக்கும் சோனி காங்கிரசால் ட்வீட்டரில் இந்தமாதிரி வெட்டி அக்கப்போர்களை மட்டும் தான் நடத்த முடியும் என்பதைப் பார்க்கச் சிரிப்புத்தான் வருகுதையா!

ட்வீட்டரில் இன்னொரு சுவாரசியமான ஒரண்டை! வம்பு!

நீங்க மணவாளனா? மன'வாளனா?
Quote Tweet
மணவாளன்
@Manavalan_
·
நம்ம வீட்டு பிள்ளை ல நாப்பது பேரு இருக்காங்க ஒருத்த காதபத்திரமும் மனசுல நிக்கல ஆனா ஒரே ஒரு ஆள் தான் இருக்காரு ஆனா நாப்பது பேரு கண்ணு முன்னாடி வந்து போறாங்க #ஒத்தசெருப்பு @rparthiepan
12:49 PM · Sep 30, 2019  

ஒரு படம் நன்றாக இருக்கிறது என்று சொல்வதற்கு இன்னொரு படத்தை மட்டம் தட்டுவதுதான் ஒரே வழி போல! நட்டக்கணக்கு காட்டுவதற்காகவும் கூட இந்த மாதிரிப் படங்களை சில பெரிய தயாரிப்பாளர்கள் எடுப்பார்கள் என்பது அவருக்குத் தெரியாதோ என்னவோ?

மீண்டும் சந்திப்போம்.
  
      

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!