இது கலாய்த்தல் காலம்! அரசியல் அப்படித்தான்!

இந்த வீடியோவை முதலில் பார்த்தபோது ரொம்பவும் தான் கலாய்க்கிறார்களோ என்று தான் நினைத்தேன். ஆனால் நம்மூர் அரசியல்வாதிகள் இதற்கெல்லாம் அசராத சிகாமணிகள் என்பதால் பகிர்கிறேன்! ஆக ஆக என்று சமூகநீதி என்னமாய் ஆகிறதென்று பாருங்கள்  .


சோனியா காங்கிரஸ்காரனிடம் கேட்கக்கூடாத கேள்வி பதவியைத் தியாகம்செய்வது பற்றி! மோடியை வீழ்த்த பிரதமர் கனவை தியாகம் செய்கிறதா நேரு குடும்பம் என்று வேடிக்கையாகக் கூடக் கேட்டு விட முடியாத கேள்வியை ஒருதொலைக்காட்சி  வெட்டிவிவாதமாகப் பார்க்க   

இது கொல்கத்தா கூத்து!


இதைமட்டும் கலாய்க்காமல் விட்டுவைப்பார்களா என்ன?

கொல்கத்தாவுல ஒரு டஜன் சொறிநாய்கள் குரைத்துக் கொண்டிருக்கையில், சில்வாஸாவில் ஒரு சிங்கம் கர்ஜித்துக் கொண்டிருக்கிறது.  

2004 இல் கூட்டணி 335 சீட் கெலிச்சதும் தியாகசிகரம் சோனியா, காங்கிரஸ் நாடாளுமன்றக்குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தைத் தூக்கிக் கொண்டு ஜனாதிபதி மாளிகைக்கு ஓடியதும், கனவில் மண் விழுந்ததால் மன்மோகன் சிங்கை பிரதமராக அறிவித்த சோகமான தருணத்தை நினைவுபடுத்துகிற விதமாக The Accidental Prime Minister புத்தகம் திரைப் படமாகவும் வந்து ஓடிக்கொண்டிருக்கிறதே! தியாகம் எல்லாம் லுலுலாயிக்குத்தான் என்பதை அடுத்துவந்த 10 ஆண்டுகள் நிரூபித்தன! இந்த ஜோக் கூட அதைத்தான் சொல்கிறதோ? 

சோனியா : இவர ஏண்டா இப்படி இழுத்துட்டு வர்றிங்க ?

அஹமது படேல் : Accidental PM படத்துக்கு டிக்கெட் வாங்க லைன்ல நின்னுகிட்டு இருந்தார் மம்மீ...நான் தான் இழுத்துட்டு வரச் சொன்னேன்.


இப்படி R  நாராயணன் முகநூலில் லகலகலகலக என்று சிரிக்கிறார்! தியாகம் செய்த காங்கிரசுக்கும் இப்போதிருக்கிறவர்களுக்கும் ஸ்நான பிராப்தி கூடக் கிடையாதென்று தெரிந்தும் இப்படி ஒரு தலைப்பில் நியூஸ் 7 சேனல் விவாதம் ஒன்றை நடத்துகிறதென்றால் 
கோளாறு அவர்களிடமில்லை! எதையும் எளிதில் மறந்து விடுகிற   நம்மிடம் தான் கோளாறு இருக்கிறது. 


124வது சட்டத்திருத்தத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.கழகத்தின் ஆலந்தூர் பாரதி மனு தாக்கல் செய்திருக்கிறார். இதுவும் கூட கண்துடைப்பு என்று தான் சட்டரீதியாகத் தோன்றுகிறது. 

சமூகநீதி, சமநீதி, ஒதுக்கீடு என்று  சில பகிர்வுகளை இந்தப்பக்கங்களில் பார்த்துக் கொண்டு வந்தது நினைவிருக்கிறதா? தொடர்ச்சியாக,முன்னம் படித்த சில நல்ல புத்தகங்களை இங்கே அறிமுகமாகப் பார்க்கலாமா?

  
தோழர் ஈ எம் எஸ் நம்பூதிரிபாட் எழுதிய இந்தப் புத்தகம் கேரளாவில் ஆங்கிலேயர்களின் கல்வி முறையை எந்த ஜாதி முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது என்பதை எடுத்துச் சொல்கிறது. சமநீதி, சமூகநீதி என்பதற்கெல்லாம் தொடக்கப்புள்ளி, இங்கே தமிழகத்தில் நிகழ்ந்ததற்கும் அங்கே கேரளாவில் நடந்ததற்கும் உண்டான வேறுபாடு என்ன என்பதைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் புத்தகம் இது.

இங்கே சென்னை மாகாணத்தில் நடந்தது வேறு!

During the early decades of the 20th Century, when the Indian freedom movement was fast spreading across the country, another movement began to make itself felt in the Madras Presidency. Supporting the ruling British more than somewhat, this movement was more caste- and community-based. The party which was born out of it was popularly called the Justice Party, of which the Dravidian parties of today, whatever their hues, are the descendants and of that movement. 

Basically, the movement was directed against the Brahmin community in the Presidency and, frankly stated, the Justice Party had no other policy than anti-Brahminism. Indeed, before the Party was founded, the movement was called the Non-Brahmin Movement. The person who sowed the seeds for the formation of the Party was Dr. C. Natesa Mudaliar. என்று ராண்டார் கை சுருக்கமாக பிராமண வெறுப்பே நீதிக்கட்சியின் எல்லாமுமாக இருந்தது என்று சொல்வதை படிக்க இங்கே  

இது புத்தக அறிமுகமாக (சு)வாசிக்கப்போறேங்க தளத்தில் இன்று எழுதியது.

   
   

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!