கருத்துக்கணிப்புகள் ஆரம்பம்! தேர்தல் களம் ரெடியாகிறது!

  1. இன்னொரு குஜ்ரால் or தேவே கவுடா? என்ன சொல்கிறார் ரகுராம் ராஜன்?

    என்று இங்கே நேற்று எழுதியதில் பின்னூட்ட விவாதம்! நீங்களும் கூட இணைப்பில் போய் விவாதத்தைத் தொடரலாம்! 
  2.   

  3. ஊழலுக்கு கைகொடுப்போம்... வழக்கிலிருந்து தப்பிக்கக் குரல் கொடுப்போம் என்று சொல்லலாம்!

    ரகுராம் ராஜன் சொல்லி இருப்பது "சில சமயங்களில் சில உண்மைகளை மறைக்க முடியாது" என்று சொல்லலாம்.!
    ReplyDelete
    Replies
    1. வராக்கடன் சுமை பெரிய பிரச்சினையாக உருவெடுக்க ஆரம்பித்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு காலத்தில் தான்! தள்ளிப்போட்டு, தள்ளிப்போட்டே இன்றைக்கு பத்துலட்சம் கோடி ரூபாயை எட்டவிருக்கிறது.
      கடிவாளம் போடவேண்டிய ரிசர்வ் வங்கி, அரசியல்வாதி அமைச்சர்களால் வெறுமனே வேடிக்கை பார்க்கிற இடத்தில் வைக்கப்பட்டது. இதெல்லாம் தெரிந்த ரகுராம் ராஜன் RBI சுயாட்சி பற்றி, உர்ஜித் படேலைப் பற்றிப் பேசுவது நகைமுரண்! இல்லையா ஸ்ரீராம்? சௌகரியப்படும்போது மட்டும் உண்மையைப் பேசுகிற ரகுராம்ராஜனைப் பற்றி நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!

      பழைய திருடர்களே ஆட்சியில் இருந்தால் அல்லது மீண்டும் வந்தால் நேற்றைக்கு சந்தா கோச்சார் (ஐசிஐசிஐ வங்கி), வீடியோகான் வேணுகோபால் தூத் மீது சிபிஐ வழக்குப் பதிந்ததுபோல, நடவடிக்கை சாத்தியமா?
      Delete
  4. முதல் படத்தைப் பார்த்தவுடனேயே, கோவிந்தசாமி, மதியழகன், அண்ணா என்று அமர்ந்திருப்பவர்களிடம் பார்வை தாவியது. அதுவும் மதியழகன் என்றால் அந்த நாள் சட்டசபை கலவர ஞாபகம் தான் நினைவுகளில் படிகிறது.

    எக்காலத்தும் வலிமையான தனித்த பெரும்பான்மை கொண்ட நடுவண் அரசு அமைவது தான் நாட்டுக்கு நல்லது. கொள்கை முடிவுகளை எந்தவித சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் தீர்மானமாக எடுக்க முடியும்.
    வெகுஜன மக்களுக்கு ஆதரவாகக் கொள்கைகளை வகுத்துக் கொண்டால் சரித்திரத்தில் இடம் பெறுகிற உன்னதம் கிடைக்கும். 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சி அடுத்துத் தொடர்வதற்குக் கூட இட்டுச் செல்லும்.

    அப்படித் தனித்த பெரும்பான்மை கிடைத்தாலும் ஏதாவது காரணங்களுக்காக நெருங்கிய கட்சிகள் என்று வேண்டப்பட்டவர்களாய் சிலருடன் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதும் சில சங்கடங்களை விளைவிக்கும். தனித்த பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் ஆட்சி அமைப்பதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்காத அதே நேரத்தில் மக்கள் பணிகளில் கவனம் செலுத்துகிற 'புனிதக் கட்சிகள்' இந்த நாட்டில்
    தழைத்தோங்கினால் நாட்டுக்கு நல்லது. குறிப்பிட்ட அப்படியான கட்சிகளின் அசைக்க முடியாத எதிர்கால பலத்திற்கும் வழி கோலும்.
    ReplyDelete
    Replies
    1. கொள்கை முடிவுகளை எந்தவித சமரசத்துக்கும் இடம் கொடுக்காத, வலிமையான மத்திய அரசை நிறுவுவதில், வாய்ப்பிருந்துமே கூடக் கோட்டை விட்டவர், இப்போதைய மாநிலக்கட்சிகளின் கூக்குரல்களுக்குக் காரணமாக இருந்தவர் தாத்தன் நேரு என்பதைக் கசப்போடு நினைவு படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது ஜீவி சார்!

      1971 போரில் கிடைத்த வாய்ப்பைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக் கொள்ளாமல் ஒன்றுக்குஇரண்டாக பாகிஸ்தான் தலைவலியை நிரந்தரம் தானோ என்ற அளவுக்கு வளர்த்துவிட்டவர் இந்திரா. நேரு, இந்திரா, ராஜீவ் மூவருக்கும் மெஜாரிடியுடன் வலுவான மத்திய அரசை நிருவாக கூடிய வாய்ப்பும் கிடைத்தது. என்ன நடந்தது? தெளிவான பார்வை, இலக்கு எதுவுமில்லாமல் தாங்களும் கெட்டு, தேசத்தையும் பாழடித்தார்கள்.
      Defacto பிரதமராகப் பின்னிருந்து இயக்கிய சோனியா அண்ட் கோ பத்தாண்டுகளில் சாதித்தது வரிசையாக வெடித்துக் கிளம்பிய ஊழல்கள் மட்டுமே!

      வாஜ்பாயிக்குக் கிடைத்த வாய்ப்பை, ஓரளவுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடிந்தது

      இந்தப் பின்னணியில், நரேந்திரமோடியின் முதல் ஐந்தாண்டுகளை எடைபோட வேண்டியிருக்கிறது. ஆனால் மோடிக்கெதிரான கூக்குரல்களில் எதை எடைபோட்டு, எது முக்கியமானது என்று சொல்ல முடிகிறது?

      பதிவைத் தாண்டி, வாசிப்பவர்கள் கொஞ்சம் சிந்திக்கட்டுமே என்றுதான் ரகுராம் ராஜனை முன்னிட்டு எழுதிய இந்தப்பதிவு!
    2. தேர்தல் களம் தயாராகி வருவதன் அறிகுறியாக அங்கங்கே எதிர்க்கட்சியினர் கூடிக் கலைகிற கூட்டங்களில், சொந்த ஊர் திரும்பியவுடன் அதே அளவு ஒற்றுமையுடன் பேசுகிறார்களா? அல்லது மாற்றி பேசுகிறார்களா? இவைகளோடு காசுக்குக் கூவுகிற ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் கருத்துக்கணிப்பு போர்வையிலான கருத்துத் திணிப்புக்கள் எல்லாம் சூடுபிடித்துக் கொண்டிருக்கின்றன.
    3. இங்கே ஊழலும் இந்திய அரசியலும் என்று சொன்னதும். 
    4. தொகுதிக்கு நாலாயிரம் ஐந்தாயிரம் ஓட்டுக்களைப் பிரிக்க முடியும் என்ற நிலையில், நான் கேட்டதைத்தரவில்லை என்றால், உன் வெற்றி வாய்ப்பைக் கெடுப்பேன் என்று ப்ளாக்மெயில் செய்கிற சில்லறைக் கட்சிகளின்வளர்ச்சி, இந்திய அரசியலை ஊழல்மயமாக்கியதில் பெரும் பங்கு வகிக்கிறது என்று இங்கே சொன்னதும் 
    5. ஆதரவு வோட்டுக்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் என்றால், ஆதரிக்காத அல்லது பதிவாகாத வோட்டுக்கள் இன்னொரு முக்கியமான, கவனிக்கப்படாமலேயே உள்ள பகுதி. அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் தான், வாக்களிக்கத்தகுதி உள்ளவர்களில் குறைந்த பட்சம் இவ்வளவு சதவீதமாவது ஆதரித்து வாக்களித்தால் தான் தேர்ந்தெடுக்கப் பட முடியும் என்ற நிலை உருவாக வேண்டும்.

      ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள வெகுஜன ஆதரவை, இப்போதிருக்கும் தேர்தல் முறை சரியாகச் சொல்வதில்லை. உதாரணமாக,கம்யூனிஸ்டுகள், பாமக அல்லது தேதிமுக இப்படி ஒவ்வொரு கட்சிக்கும் ஜனங்கள் எந்த அளவுக்கு ஆதரவு தருகிறார்கள் அல்லது அசட்டை செய்கிறார்கள் என்பதை, ஒரு கூட்டணியாக நின்று அவர்கள் வாங்கும் ஓட்டுக்கள் சொல்வதில்லை. இதையும் சேர்த்துப் பார்த்து, குறைந்தபட்ச வெகுஜன ஆதரவு இல்லாத கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படுவதை நிறுத்தவேண்டும். வடிகட்டிக் கொண்டே வந்தால், முக்கியமாக, மூன்று அல்லது நான்கு கட்சிகளுக்கு மேல் தேறாது என்று தேர்தல் சீர்த்திருத்தங்களை வலியுறுத்திப் பின்னூட்டமாக இங்கே சொன்னதும் 
    6. காசுக்கு கூவுகிற ஊடகங்கள் கருத்துக் கணிப்பாகச் சொல்வதை அப்படியே நம்பிவிடுகிற கேணைகளா நாம்? நமக்கென்று சுயமாக சிந்தித்து ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ள முடியாதா? ஊடகக்கூவல் இங்கே   

    உங்களுடைய பதில் இந்த விவாதத்தை எப்படி முன்னெடுத்துச் செல்லப் போகிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்!

    1.    

4 comments:

  1. என் பதில் கொஞ்சம் சம்பந்தமில்லாமல் இருக்கும்!

    சில கட்சிகளுக்கு வேறு வழி இல்லாமல் வாக்களித்திருக்கிறேன். ஆனால் என்ன செய்தாலும் வாக்களிக்க மாட்டேன் என்று நான் நினைக்கும் கட்சியும் உண்டு!

    ReplyDelete
    Replies
    1. சம்பந்தமில்லாததை புரிந்துகொள்கிறேன் ஸ்ரீராம்!
      இன்னார் வரவேண்டுமென்று விரும்பி வாக்களிப்பது ஒருவிதம்! அன்னார் வந்துவிடக்கூடாதென்று வாக்களிப்பது இன்னொரு விதம்!

      Delete
  2. மேலே உள்ள படத்தைப் பார்த்தால் ஏதோ அந்நாளைய லாட்டரி டிக்கெட் கடையின் முகப்பு மாதிரி இருக்கிறது! தேர்தல் கூட இந்நாளைய லாட்டரி தானோ?..

    ReplyDelete
    Replies
    1. Paid News காசுக்கு கூவுகிற ஊடகங்கள் கிட்டத்தட்ட லாட்டரிச் சீட்டுக்கடை மாதிரித்தான் display செய்கிறார்கள் ஜீவி சார்! அந்த நிகழ்ச்சியின் வீடியோவைப் போட்டிருக்கலாம் என்றால் பரக்கத் சோம்பல்படுகிறவர்கள் எண்ணிக்கைதான் இங்கே அதிகம் என்று படத்தைப் போட்டாலும் கேள்வி இப்படி வருகிறதே! :))

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!