இன்றைக்கென்ன விசேஷம்? அட, செய்திகளில் தான்!

நவம்பர் 19 இந்த நாளுடைய விசேஷம் என்னவென்று தெரியுமா? இப்படிக்கு கேட்டுக் கொண்டே வந்தார் அண்ணாச்சி! அண்ணாச்சி வங்கி வேலையில் இருந்த நாட்களில் எனக்கு சீனியர், விவரம் தெரிந்தவர். பதிவு எழுதவந்த ஆரம்பநாட்களில் எனக்கு ஒருவிதத்தில்  உந்துசக்தியாகக்கூட இருந்திருக்கிறார்! "இன்னைக்கு யாருக்காச்சும் பொறந்த இல்லே  இறந்த நாளா? சரியா ஞாபகம் வரலியே அண்ணாச்சி." அதான் எனக்குத் தெரியுமே என்று முந்திரிக்கொட்டை மாதிரிப் பதில் சொல்லாமல் அண்ணாச்சியைப் பேச விட்டுவிட வேண்டும்! இல்லையென்றால் என்பாடு திண்டாட்டமாகி விடும் என்பது அனுபவ பாடம்!


"இன்னைக்கு உலகக்  கழிப்பறைகள் தினம்! ஐக்கிய நாடுகள் சபை இப்படி அறிவிச்சுப் பத்தொம்பது வருஷம் ஆகிப் போச்சே! நீகூட இதைப்பத்தி ஒரு பதிவு எழுதியிருந்தியே! அதுவுமா மறந்து போச்சு?" அண்ணாச்சி கொஞ்சம் சூடான மாதிரித் தெரிந்தது. ஆமாம்! உலகக் கழிப்பறை தினம்! கழிப்பறைகள் சுத்தமாக இல்லாவிட்டால் என்னென்ன கேடுகள் வரும் என்ற விழிப்புணர்வைப் பரப்புகிற நாளாக இந்த நாளை ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகிறது. லிங்கைச் சொடுக்கிப் பாருங்கள்    என்று 2011 இல் எழுதியிருக்கிறேன் என்பது நினைவுக்கு வந்தது. கழிவறைகள் இல்லாத வீடுகள் ஏராளமாக இருந்த இந்த நாட்டில் சமீபகாலமாகத்தான் மத்திய அரசின் பெரும் முயற்சியால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன என்பது வரவேற்கப்பட வேண்டிய செய்தி.


சதீஷ் ஆசார்யா வரைந்திருக்கிற இந்த கார்டூன் சில விஷயங்களைப் புட்டுவைத்திருக்கிறது என்று கருத்தை சொன்னார் அண்ணாச்சி. எனக்கென்னவோ சதீஷ் ஆசார்யா செய்திகளின் நடப்புநிலவரத்தைத் தெரிந்து கொள்ளாமலேயே மூன்று கட்சிகளுமே அந்தரத்தில் தொங்குகிற மாதிரி நினைத்து வரைந்தமாதிரித்தான் தெரிகிறது. தன்னுடைய மனக்கோட்டை நிறைவேறாத கடுப்போடு சிவசேனா மட்டும்தான் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதாகப்படுகிறது. பிஜேபியைக் குறிப்பிட்டுச் சொல்லாமல் இன்றைய சாம்னா நாளிதழ் (சிவசேனாவின் தம்பட்டம்)  பலமுறை தோற்றபிறகும் கூட பிரித்விராஜ் சவுஹானால் உயிர்பிழைத்த மொகமது கோரி கடைசியில் ஒரு போரில் ஜெயித்தவுடன் ப்ரித்விராஜைக் கொன்ற கதையைச் சொல்லிக் காட்டியிருக்கிறது. மஹாராஷ்டிராவிலும் கோரி செய்ததுபோல் பலமுறை முயற்சித்துத் தோற்றவர்கள் இப்போது சிவசேனாவின் முதுகில் குத்த முயற்சிக்கிறார்கள் என்று கதைக்கிறது சாம்னா!   கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை கதையாக, பிஜேபியை உதறிவிட்டு வா என்று சரத் பவார் சொன்னபடி செய்வார்களாம்! அதைவைத்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி வரிசையில் சிவசேனாவுக்கு இடம் கொடுத்ததை, யாரைக் கேட்டு முடிவு செய்தீர்கள் என்று கேள்வியும் கேட்பார்களாம்! இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் டில்லிப் பல்கலைக்கழக ஆசிரியர் அபூர்வானந்த்.A betrayal in the offing: Why Congress should give a second thought to allying with Shiv Sena  காங்கிரசுக்கு சிவசேனாவுடன் கூட்டு வேண்டாம் என்று எச்சரிக்கிற ஒருசெய்திக் கட்டுரையைக் கொஞ்சம் வாசித்துப் பாருங்களேன்!


தேவே கவிதாவின் மதசாரபற்ற ஜனதாதளம் (JDS) கட்சியின் சின்னம் புல்கட்டு சுமக்கிற பெண் என்பதை வைத்துப் பகடி செய்ய முயற்சிக்கிறார் சதீஷ் ஆசார்யா! நாயும் பிழைக்குமிந்தப் பிழைப்பு என்ற வழக்குச் சொல் அரசியல்வாதிகளுக்குப் பொருந்தாது என்பது அவருக்குத்தெரியாது போலிருக்கிறது!


சீனாதானா ஜாமீன் மேல்முறையீட்டு மனு மீது நாளை புதன்கிழமை  உச்சநீதிமன்றத்தில் விசாரணை 

மீண்டும் சந்திப்போம்.                  

2 comments:

  1. sir , 2011 world toilets day link poi parthaal athu kooda PC pathi news varudhu.. appo pannathukku ippo thaan reaction nadakkuthu !
    apporva anand's article says that congress is losing its meaning as it is shaking hands with
    shiv sena a communal party... but i feel that is congress is the most communal party as it openly supports other religions and illtreats Hindus .. the majority people ... that's why BJP gained popularity from 1 MP party during Vajpayee to powerfull ruling party now due to hard work of LK advani and stabilized by Modi... had congress also voiced about Hindus BJP would not have the chance to blossom at all.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சரவணன்!

      2011 இல் உலக கழிப்பறை தினத்தில் கூடச் சொன்னது காங்கிரசையும் flush out செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதுதான் சீனாதானாவுடைய ஜாலங்கள் செல்லுபடியாகிற காலம் மலையேறிவிட்டமாதிரித் தெரிவதே ஒரு நல்ல விஷயம் தான்! காங்கிரஸ்காரர்கள் நேரத்துக்குத் தகுந்தமாதிரி சித்தாந்தவேஷம் போடுகிறவர்கள் என்பது தெரிந்தது தானே!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!