இட்லி வடை பொங்கல்! #9 இன்று சனிக்கிழமை!

சிலநாட்களுக்கு முன்னால்தான் காங்கிரஸ் கட்சியின் 134 வது துவக்கதினம் என்று ராவுல்பாபா கேக் வெட்டிக் கொண்டாடினார் என்று செய்திகள் வந்தன. ஆனால் இந்தியாவின் Grand Old Party வயதுக்கேற்ற அனுபவமும் முதிர்ச்சியும் பெற்றிருக்கிறதா என்றால் #பப்பு என்று அழைக்கப்படுவதற்கேற்ற மாதிரித்தான் காங்கிரஸ் கட்சித்தலைவர் மற்றும் அடிவருடிகளின் செயல்பாடு இருக்கிறது. 

காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெர்ஷன் 1, அடுத்து 2 என இரண்டிலும் ஊழல் புகார்கள் வெடித்துக் கிளம்பியமாதிரி நரேந்திர மோடியின் ஆட்சியில் எதுவும் கிளம்பவில்லை. அதனாலென்ன? ஊழல் ஊழல் என்று பெருங் குரலெடுத்துக் கூவினால் போதுமே என்று ராவுல் பாபா ரஃபேல் விமானபேர ஊழல் என்று திரும்பத் திரும்பக் கூவிக் கொண்டிருக்கிறார். இதிலேயே 2019 நாடாளுமன்றத் தேர்தல்களை எதிர் கொள்ளலாம் ஜெயிக்கலாம் என்று கண்ணடித்துக் கனவு காண்கிறாரோ என்னவோ?


திமுகவின் தம்பித்துரை பேசிக்கொண்டிருக்கிறார். பின்னால் ராகுல்  காந்தி என்ன செய்கிறார்? கொஞ்சம் பாருங்கள்! பப்பு கண்ணடிக்கிற அற்புதக் காட்சியை இந்த வீடியோவில் 6நி 20 செகண்டிலிருந்து பார்க்க. 



இப்படியாகப்பட்ட  இவரைத்தான் பிரதமராக்காமல் விட மாட்டேனென்று வீரவாள் எல்லாம் கொடுத்து இசுடாலின் சிலநாட்களுக்கு முன்னால் சூளுரைத்தார் என்பதாவது நினைவிருக்கிறதா?

   
நாடாளுமன்றத்தில் ரஃபேல் பற்றிய விவாதத்தைக் காங்கிரஸ்கட்சி நடத்திய விதமிருக்கிறதே! வேடிக்கை செய்வதே வாடிக்கை என்று கடைசியில்  கோமாளிக் கூத்தாகிக் கொண்டே வருவதில் நிதியமைச்சர் அருண் ஜெயிட்லி மீது காங்கிரஸ் உறுப்பினர்கள் காகித அம்புகளை வீசி மகிழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் ஆட்சிக்காலத்தில் ராணுவத்துக்கு ஆயுதங்கள் தான் வாங்க முடியவில்லை, விமானங்கள் வாங்க முடியவில்லை அதனால் இப்போது காகிதத்தில் பிளேன்கள் செய்துவீசிப் பார்ப்போமே என்கிற எண்ணமா? தெரியவில்லை.

நாடாளுமன்றத்தில் நேற்றும் காங்கிரஸ் ரகளை. மோடி தான் சபைக்கு வந்து பதில் சொல்ல வேண்டும் என்கிற காங்கிரசின் கோரிக்கையை, அரசின் சார்பிலும், தன் துறை சார்ந்த விஷயம் என்பதாலும் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு பேச முழு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்து சபாநாயகர் நிராகரித்து விட்டார்.  

    
The five-hour debate on Rafale jet purchase saw heated moments in Lok Sabha on Friday with UPA chief Sonia Gandhi leaving the House midway amid personal attacks by BJP members and Defence Minister Nirmala Sitharaman getting emotional while mentioning Congress’ repeated jibes at her and Prime Minister Narendra Modi. இப்படி பாதுகாப்புத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் காங்கிரஸ் எழுப்பிய அபத்தமான குற்றச்சாட்டுகளுக்கு இரண்டுமணி நேரம் விரிவான பதிலடி கொடுத்ததில் ஒரு சிறுபகுதி மேலே காணொளியாக.

ங்களுடைய திட்டங்கள் எல்லாம் பூமராங் மாதிரித் திரும்பத் திரும்ப, தன் குடும்பத்தினர் மீதே திரும்புவது குறித்து எதுவும் செய்ய முடியாமல், பாதியிலேயே சோனியா சபையை விட்டு வெளியேறிய பரிதாபம் செய்திகளில் ஒரு ஓரத்தில் வந்திருக்கிறது. 
*******
ஜனவரி 5- திமுக மகளிரணிச் செயலாளரும் கருணாநிதியின் மகளுமான கனிமொழிக்குப் பிறந்தநாள்.


வழக்கமாகத் தனது பிறந்தநாள் அன்று அப்பா கருணாநிதி, அம்மா ராஜாத்தி அம்மாளிடம் இருந்து ஆசி, அண்ணன் ஸ்டாலினிடம் இருந்து வாழ்த்து, தொண்டர்கள் அணிவகுப்பு, நலம் விரும்பிகளின் சந்திப்பு என சந்தோஷத்தில் திளைப்பார் கனிமொழி. குறிப்பாக சி.ஐ.டி. காலனி வீட்டில் தந்தை முன்னிலையில் கேக் வேட்டிக் கொண்டாடுவார் கனிமொழி. ஆனால் இந்த முறை எதுவும் இல்லை.

ஏனாம்? #ரட்சகனுக்காக என்று கவிதை எழுதினாரே!! அது யாரென்று தெரியும் வரை ஸ்டாலின் தலைமைக்கு எதிராக எதையும் செய்து அவரின் அதிருப்தியை சம்பாதித்துக்கொள்ள கனிமொழி விரும்பவில்லை என்றும் அரசியல் வட்டாரத்தில் கூறுவதாக இங்கே 

******* 
எது எதையோ  பேசிக்கொண்டிருக்கிறோம்! பேசவேண்டிய முக்கியமான விஷயத்தைப் பேசாமல் இருந்துவிடுவோமா? சொல்லின் செல்வன் என்று கம்பனால் சிறப்பிக்கப்பட்ட அனுமனை மறந்துவிடுவோமா என்ன?   

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.

2 comments:

  1. சுவாரஸ்யமான கதம்பம். ராகுல் பேச்சை கேட்கும் பொறுமை இல்லை!

    உங்கள் கமெண்ட்ஸ் பெட்டியை சாதாரணமான பெட்டியாக வைக்க வேண்டுகிறேன். கூகிள் ப்ளஸ் பெட்டி சில நாட்களில் காணாமல் போகும். அப்போது பழைய பின்னூட்டங்களும் காணாமல் போகும் என்கிறார்கள். டிடி சொல்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. பப்பு கண்ணடிக்கிற அற்புதக் காட்சியை இந்த வீடியோவில் 6நி 20 செகண்டிலிருந்து பார்க்கலாமென்று அங்கேயே சுருக்குவழியையும் சொல்லியிருந்தேனே!

      கமெண்ட்ஸ் பெட்டியில் என்ன பிரச்சினை? .

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!