பொய்களைப் பரப்புவது மெயின்ஸ்ட்ரீம் மீடியாவா? சமூக வலைத்தளங்களா? #2

எங்கள் Blog ஸ்ரீராம் நேற்றைய பதிவில், நீளமான வீடியோக்களை பகிர்ந்தால் எப்படிப் பார்ப்பதாம் என்று ஒரு நியாயமான கேள்வியை பின்னூட்டத்தில்  எழுப்பியிருந்தார். நியாயம் தான்! ஆனால் இப்படி பார்ப்பதற்கும் கேட்பதற்குமே சோம்பல்படுகிற நம்முடைய இயல்புதான் ஊடகங்களில் சகட்டுமேனிக்குப் பொய்கள் பரப்புவதற்கு, காரணமாகவும் இருப்பதைக் கொஞ்சம் யோசிக்கலாமே!

வீடியோ சிறுசுதான் !

#2019தேர்தல்முன்னோட்டம் என்று அங்கங்கே கட்சிகள் கூடிக் கலைந்து கொண்டிருக்கின்றன. கூட்டணிக்கு அச்சாரம் என்று சொல்ல முடியாதபடி, கூட்டணி எதுவும் எந்தத் தரப்பிலுமே  முடிவாகவில்லை  #1

2014  நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா துணிந்து எடுத்த முடிவு என்று சொல்வதைவிட gambling என்றுதான் சொல்லமுடியும், அதைக்கூட இங்கே #திமுக அப்போதும் சரி, இப்போதும் சரி, துணிந்து செய்யவில்லை. ஆனாலும் கூட, அவர்களும் இன்னமும் தங்களுடைய கூட்டணி இவர்களோடுதான் என்று உறுதியாகச் சொல்லவில்லை. இப்போது அவர்கள் #கூட்டணி பற்றிப் பேசுவதே ஒரு calculated risk எடுப்பதற்கும் தயாராக இல்லை என்பதால்  #2

#அதிமுக குழப்பத்தில் இருக்கிறது. சொந்தக்காலில் நிற்பதற்கு பயம், தினகரன் என்ன சேதத்தை ஏற்படுத்துவார் என்பதில் எதுவும் தெளிவாகப் புரியாமல் இருப்பதும் பயத்தை இன்னும் கொஞ்சம்  அதிகரித்திருக்கலாம். #antiincumbency ஆளுவோருக்கு எதிரான அதிருப்தி என்பது இயல்பு. ஆனால் அந்த அதிருப்தியை சாதகமாக  மாற்றிக் கொள்வதில் #திமுக உள்ளிட்ட எதிரணியில் உள்ளவர்கள் எந்த அளவுக்கு வெற்றி பெறமுடியும் என்பது அவர்களுக்குமே கூடப் புரியாத புதிர்தான்! #3

இப்படி எத்தனை  அடுக்கிக் கொண்டே போனாலும் , எத்தனை டிவி விவாதங்கள் நடத்திக் கூவினாலும் , இப்போதிருக்கிற Winner takes all   என்பதான Westminster தேர்தல் முறையில் உள்ள கோளாறுகள் திருத்தப்படாத வரை ஒரு மாறுதலையும் கொண்டுவர முடியாது.

இங்கே ஜெயித்த ஒரு வேட்பாளர் மொத்த வாக்குகளில் எத்தனை சதவீதம் வாங்கினார் என்பதில் ஒரு bench mark  இல்லாமல், அவர் உண்மையிலேயே மக்கள் பிரதிநிதி ஆகிவிட யூடியுமா?

தோற்கிற தருணங்களில் மட்டும் புள்ளி விவரங்களை அடுக்குவது கருணாநிதி ஆரம்பித்து வைத்தது , இப்போது எல்லோருமே செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். #திமுக விடமிருந்து கூட   விகிதாசார பிரதிநிதித்துவம் வேண்டுமென்கிற குரல் ஒருமுறை எழுந்தது அப்புறம்  மூச்சுவிடக் காணோம்!

தேர்தல் சீர்திருத்தங்கள் வேண்டுமென்கிற  குரல் பிரிட்டனில் இருந்து  https://www.electoral-reform.org.uk/voting-systems/types-of-voting-system/first-past-the-post/  இங்கே சில சுவாரசியமான, உபயோகமான தகவல்களைக் காணமுடியும்.

இங்கே எழுபதுகளில் தினமணி நாளிதழில் ஆசிரியர் திரு A N சிவராமன் தொடர் கட்டுரைகளாக எழுதினார். விகிதாசார பிரதிநிதித்துவம் உள்ளிட்டு வெவ்வேறு நாடுகளில் வாக்குச்சீட்டு ஜனநாயகம் இயங்குகிற விதத்தை வாசகர்கள் சிந்தித்துப் பார்க்க தொடர்ந்து எழுதினார். A N சிவராமன் போன்ற  நல்ல மனிதர்கள், சுயசிந்தனையோடு தங்களுக்குத் தெரிந்தது நாட்டுக்கும் பயன்படட்டுமே என்று எழுதினார்கள்.

இப்போதுள்ள ஊடகங்கள், அச்சு ஊடகமோ, விஷுவல் மீடியாவோ  சமூக வலைத்தளங்களோ என்ன செய்து கொண்டிருக்கின்றன? பயனுள்ள தகவல்களைத் தருகிறதா? சிந்திக்கத் தூண்டுகிறதா? கொஞ்சம் சொல்லுங்களேன்!

கூட்டணி முடிவாகி விட்டதா என்ன? பாமக நிறுவனர் மருத்துவர் இப்படி ட்விட்டியதும் ஆடிட்டர் குருமூர்த்தி retweet செய்திருப்பதும் .........  




  தொடர்புடைய பழைய பதிவு ஒன்று இங்கே 


6 comments:

  1. வீடியோ அனவைலபில் என்கிறது!!!! என் மனதறிந்ததோ!

    ReplyDelete
    Replies
    1. யூட்யூபில் பாத்துக்கோங்கன்னு தகவல் சொல்லுவதைக் கவனிக்கவில்லையா ஸ்ரீராம்!!

      Delete
  2. திருவாரூர் இடைத்தேர்தல் நடந்திருந்தால் அதிமுக என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கும் என்று தெரிந்திருக்கலாமோ... தினகரனுக்கு என்ன ஆதரவு இருக்கும் என்று புரியவில்லை. மக்களுக்கு பணம் மட்டும்தான் பிரதானமா?

    ReplyDelete
    Replies
    1. இடைத்தேர்தல்கள் ஜனங்களுடைய அபிப்பிராயத்தை அப்படியே எதிரொலிப்பதாக எடுத்துக் கொள்ளமுடியாது! திருமங்கலம் formula வுமேகூட இப்போது வீரியமிழந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

      இந்தப் பதிவின் மையக்கருத்தே தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்த வேண்டிய தருணம் இது என்பதைச் சொல்வதற்காகத் தான் ஸ்ரீராம்!

      Delete
  3. கூட்டணிகளை முடிவு செய்ய மக்களின் நாடி பார்க்கவேண்டும். அதை அறிய சமீபத்தில் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. அதனால் எல்லோரும் எல்லோரையும் எதிர்க்கிறார்கள், எல்லோரும் எல்லாரையும் ஆதரிக்கிறார்கள்!

    ReplyDelete
  4. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றி இங்கே அரசியல்கட்சிகள் உண்மையாகவே நாடிபிடித்துப் பார்க்க விரும்புகிறார்களா ஸ்ரீராம்?

    சாதிவாரியாக எத்தனை ஓட்டுகள் தேறும்? அந்த உதிரிக் கட்சியைக் கூட்டணியில் வைத்தால் எந்த அளவுக்கு வாக்குவித்தியாசம் குறையும்? இப்படியான கணக்குகளே கூட்டணிகளை முடிவு செய்கின்றன.
    சந்தேகம் இருக்கிற இடங்களில் எத்தனை வாக்குகளை என்ன விலைக்கு வாங்க முடியும், எத்தனை கள்ள ஓட்டுக்களைப் போடமுடியும் என்கிற கணக்குபோடுவதில் நம்மூர் அரசியல்வாதிகள் கெட்டிக்காரர்கள்!

    யார் ஜெயிப்பார்கள் என்று ஜனங்களுக்குத் தோன்றுகிறதோ அவர்களுக்கே ஜனங்கள் மந்தைகளாக வாக்களித்துவிடுகிற சந்தர்ப்பங்களில் , அரசியல்கட்சிகள் போடுகிற கணக்குகள் பொய்த்துப் போய்விடுவதில் தான், இத்தனை மீடியா கூச்சல்களுக்கான தேவையும் இருக்கிறது.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!