அரசியல் களம்! வந்தாரய்யா மணிசங்கர் அய்யர்!

இன்னும் ஒரே ஒரு கட்டத்  தேர்தல் மட்டுமே மீதமிருக்கிற சூழ்நிலையிலும் கூடக் காங்கிரஸ் தனது விஷம் கலந்த பொய்ப் பிரசாரத்தை நிறுத்திக் கொள்வதாயில்லை என்பதில்  5 ஆண்டுகளாக ஆட்சியை இழந்ததில் எவ்வளவு காய்ந்து போய்க் கிடக்கிறார்கள் என்று நன்றாகவே வெளிப்படுவதைக் கவனிக்கிறீர்களா?


ஆளப்பிறந்தவர்கள் என்ற மமதை நேரு டூப்ளிகேட் காந்தி வாரிசுகளுக்கு மிக அதிகம். ராகுல் காண்டியின் பேச்சில் அது வெளிப்படுகிற கால் மணிநேர வீடியோ இது. உளறுவாயர் மணிசங்கர் அய்யரை எங்கே காணோம் என்று தேடிக் கொண்டிருந்தவர்களுக்குத் தீனி போடுகிறவிதமாக அய்யர் மறுபடியும் அதே நாறவாயுடன் வந்துவிட்டாராம்! ட்வீட்டரில் அப்படிக் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

  • Welcome back my good friend Mani Shankar Aiyar. Reassured that you weren’t there in Balakot. The BJP regretted your absence during the campaign but there is still the final over left.
    8:41 AM · May 14, 2019 ·






    நாறவாயன்களுக்கு காங்கிரசில் கிடைக்கும் மதிப்பே தனி!


    டாக்டர் யக்கோவ் கிடைத்த சந்தர்ப்பத்தில் திமுகவுக்கு வலிக்கிற மாதிரிக் குத்திவிட்டாரோ? அரசியலில் நிறம்மாறாத கட்சியென்று எதுவும் கிடையாது. அதென்ன, திமுக மட்டும் தான் நிறம் மாறுகிறதா?   

    அரசியலில் காமெடிகளுக்கு முற்றுப்புள்ளி என்பதேது?

    மீண்டும் சந்திப்போம்.  

         

    2 comments:

    1. தமிழிசை சொல்வதை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்கிறார்களா என்ன?!!

      ReplyDelete
      Replies
      1. ஸ்ரீராம்! தமிழிசையை முதலில் சட்டை செய்யாமல் தான் இருந்தார்கள்! அப்புறம் ஏளனப்படுத்தி சிரித்தார்கள்! இப்போது சவால்விட்டுச் சண்டையிடுகிறார்கள்! ஆக அந்தநாட்களில் ஒரிஜினல் காந்தி சொன்னபடி, டாக்டர் யக்கோவ் ஜெயிப்பது ஒன்று தான் பாக்கி இருக்கிறது! அதுவும் கூட விரைவில் நடந்துவிடலாம்!

        Delete

    ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!