காந்தியா காண்டியா? மோடி வெர்சஸ் WHO?

இங்கே ஊடகங்கள் தினசரி கிளப்புகிற அக்கப்போரில் யாரேனும் தவறிப்போய்  உண்மையைச் சொன்னால் கூட சர்ச்சையாகி விடுவதைக் கவனிக்க முடிகிறதா? கர்நாடகாவிலிருந்து மத்திய அமைச்சரவையில் MoS ஆக இருக்கும் அனந்தகுமார் ஹெக்டே இரண்டு நாள் முன்பு பேசியதை, சர்ச்சையாக்கியிருக்கிறார்கள்.

இந்திரா புருசன் Feroz Jehangir Ghandy 

: Union Minister Ananth Hegde says on Rahul Gandhi, "They want proof of surgical strikes even when whole world acknowledged it. This Muslim who calls himself a 'janeudhari Hindu', son of a Muslim father & a Christian mother, does he have proof that he is a Hindu"? (10.3.19)
0:51
109K views
4:46 PM - 11 Mar 2019

தன்னை காஷ்மீரி கவுல் பிராமணன் என்று ராவுல் பாபா சொல்லிக் கொள்வதற்கு யாராவது ஆதாரம் கேட்டார்களா? பாட்டி இந்திரா இஸ்லாத்துக்கு மாறி பெரோஸ் ஜஹாங்கீர் காண்டி (ghandy)  என்ற பார்சி முஸ்லிமைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதில் பிறந்த ராஜீவ் காண்டி, பிறப்பால் ஒரு முஸ்லீம், அவர் திருமணம் செய்துகொண்டதோ ஒரு இத்தாலிய கிறித்தவப் பெண்ணை என்கிறபோது, ராவுல் பாபா மட்டும் எப்படி ஓர் காஷ்மீரி கவுல் பிராமணனாக இருக்க முடியும்? காண்டி என்பதை காந்தி என்று வைத்துக் கொண்டதில் இவர்கள் டுபாக்கூர் காந்திகளே தவிர ஒரிஜினல் மகாத்மா காந்திக்கு எந்தவகையிலும், சம்பந்தம் இல்லாதவர்கள்  என்பதைச் சொன்னால் அது தவறா? சர்ச்சையா?

 

பேசாப்பொருள் பேசு! இது காவேரி நியூஸ் சேனலில் நேற்றைய விவாதம்! அனாவசியக் கூச்சல்களோ, நெறியாளர் விவாதத்தின் நடுவே அடிக்கடி புகுந்து மறிப்பதோ இல்லாத நிகழ்ச்சி! அதிசயம்தான்!ஒரு உருப்படியான விஷயத்தை விவாதிக்கிறார்கள். என்றாலும்     நாடாளுமன்றத் தேர்தல்களை ஒவ்வொரு மாநில மக்களும் அணுகும் விதமே வேறு! நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் தானென்றாலும் 29 விதமான முடிவுகளைச் சொல்வதாகவே இருக்கும் என எங்கோ படித்த ஒரு கமெண்ட் நினைவுக்கு வருகிறது.


தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்கப்போகும் இளைஞர்களுக்கு மாரிதாஸ் எந்த அடிப்படையில் யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்விக்கு சரியான முறையில் வழிகாட்டுகிறார். புதிய வாக்காளர்களுக்கு மட்டுமே அல்லாமல், ஏற்கெனெவே வாக்களித்து ஏமாந்தவர்களுக்குமே பயன்படக்கூடிய காணொளி. 


முகநூலில் நண்பர் சரவணகுமார் அவர்களின் பதிவு என்று ராஜசங்கர் பகிரந்திருக்கிறார் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு..
நண்பர்களே ...நேற்று இந்த பொள்ளாச்சி சம்பவம் குறித்து நக்கீரன் வலைத்தளத்தில் நிலையான வீடியோக்களை அடுத்து சமூகவலைதளங்களில் எழுந்த கடுமையான எதிர்வினைகளை எல்லோரும் எதிரொலித்துக் கொண்டிருந்த போது என்னைப் போன்ற ஒரு சிலர் மட்டும், நக்கீரனை நாங்கள் நம்ப தயாராக இல்லை ...இந்த விஷயம் அரசியலாக்கப் படுகிறது என்று எழுதி வந்தோம் ...
இதற்கு காரணம், இந்தப் பிரச்சனை உங்களுக்கு புதிதாக இருக்கலாம் ஆனால் எங்களுக்கு இது கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே அறிமுகமாகி விட்ட பிரச்சினை... சொல்லப்போனால் பொள்ளாச்சிக்காரர்கள் இப்போது இதைப் பற்றி பேசுவதேயில்லை...
காரணம் இந்த பிரச்சனை மூன்று வாரங்களுக்கு முன்பாகவே பரபரப்பாக பேசப்பட்டு , சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யப்பட்டு , அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன...இவ்வளவு நாள் கழித்து இப்போது ஏன் பிரச்சனை எழுகிறது என்றால் காரணம் திமுக தான் ...
இந்த பிரச்சனையில் எப்படியாவது அதிமுகவை உள்ளே இழுத்து விட்டு கொங்கு மண்டலத்தில் தற்போது அதிமுகவுக்கு இருக்கும் இமேஜை அடித்து நொறுக்க வேண்டும் என்ற ஏற்பாட்டோடு இந்த வேலைகள் செய்யப்படுகின்றன ....இதை முன்னின்று நடத்துபவன் ஊடக வேசி நக்கீரன் கோபால் ....இந்த மாதிரி மொள்ளமாரி வேலைகளை செய்வதில் அவனை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது ....அவனுடைய யோக்கியதை உலகம் அறிந்தது ....
சுதந்திர பாரதத்தில் இதுவரை எத்தனையோ அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.. ஆனால் மேம்பால ஊழல் வழக்கில் அதிமுக ஆட்சி காலத்தின் போது கருணாநிதி கைது செய்யப்பட்ட போது அதை திமுக தன்னுடைய ஊடக பலத்தின் மூலம் எவ்வளவு பெரிய பிரச்சனை ஆக்கியது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்....
நித்தியானந்தா விவகாரத்தில் இதே நக்கீரன்கோபால் எப்படி நடந்து கொண்டான் என்பது உலகத்துக்கே தெரியும் ...அப்படி இருக்க அவன் ஒரு வீடியோ வெளியிடுகிறான் என்றால் , அதன் உண்மைத்தன்மையை கொஞ்சம்கூட சந்தேகிக்காமல் அதை அப்படியே நம்பி எதிரொலிப்பது எந்த வகையில் நியாயம் நண்பர்களே?
250 பெண்கள் என்கிறார்கள் 1100 வீடியோ என்கிறார்கள் இதெல்லாம் சாத்தியமா என்று கூட யோசிக்க வேண்டாமா ? பொள்ளாச்சி ஒரு சிறு நகரம் ...சொல்லப்போனால் அது ஒரு வளர்ந்த கிராமம் அவ்வளவுதான்... அங்கே இருப்பவர்கள் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் அந்த சிறு நகரத்தில் இப்படி 1200 வீடியோவை எடுத்துக்கொண்டு 250 பெண்களை காதலித்து ஏமாற்றுவதெல்லாம் சாத்தியமே இல்லை ....
சரி அப்படியே இருந்தாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் தானாக முன் வந்து புகார் கொடுக்காமல் அரசு என்ன செய்ய முடியும் ? இதோ ஒரு பெண் புகார் கொடுத்திருக்கிறார் ...அதன் அடிப்படையில் போலீஸ் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்திருக்கிறது ...வழக்கு நடக்க இருக்கிறது...
இப்போது போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் யாரை எதிர்த்து போராட்டம்? அந்த பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில் உள்ளவர்கள் இதுவரை கைது செய்யப்படாமல் இருக்கிறார்களா? இல்லை யாராவது தப்பி விட்டார்களா? அப்படி இருக்க எதை நோக்கி இந்த போராட்டம் ?
இதைத்தான் பாதிக்கப்பட்ட பெண்ணும் , அவருடைய அண்ணன் கேட்கிறார்கள்... இதோ இப்போது அந்தப் பெண்ணுடைய வழக்கறிஞரும், அந்தப் பெண்ணுக்கு முதன்முதலாக உதவி செய்த மலுமிச்சம்பட்டி பழனிச்சாமியும் கேட்கிறார்கள் ...இது இப்போது ஊடகங்கள் மூலமாக உறுதியாகிவிட்டது இதைத்தான் நான் நேற்று எழுதினேன் எந்த ஒரு விஷயம் வந்தாலும் அதை சொல்பவர்கள் யார் என்பதை பாருங்கள்... அதன் பிறகு உங்கள் கருத்தை பதிவுசெய்யுங்கள்... அவசரப்படாதீர்கள்....
தேர்தல் தேதி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படுகிறது .திங்கட்கிழமை நக்கீரன் இந்த வீடியோவை வெளியிடுகிறது .உடனே ஸ்டாலின் கண்டன அறிக்கை விடுகிறார் ..இதோ இன்று கனிமொழி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் ...இதற்குள் ஏதோ ஒரு சதி இருப்பது உங்களுக்கு புரியவில்லையா நண்பர்களே?
இது முழுக்க முழுக்க திமுகவால் திட்டமிட்டு நடத்தப்படும் நாடகம்... கைது செய்யப்பட்ட அந்த நால்வரும் குற்றவாளிகள் ...அவர்கள் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்களை உடனடியாக தூக்கில் தொங்க விட்டாலும் சரி .. அல்லது கோவையில் நடந்தது போல என்கவுண்டர் செய்யப்பட்டாலும் நான் அதை முழுமனதாக வரவேற்பேன்...
ஆனால் , இதையே காரணமாக வைத்து திமுக அரசியல் ஆதாயம் தேட முற்படுவதை ஏற்கவே முடியாது ..காரணம் திமுக கொங்கு மண்டலத்தின் மீது அந்த அளவு வெறுப்பில் இருக்கிறது .ஏதாவது செய்து மீண்டும் எங்கு காலூன்றி விட முடியாதா என்று துடிக்கிறது
திமுகவை சேர்ந்த, 200 ரூபாய்க்கு பதிவிடும் யுவகிருஷ்ணா டான் அசோக் போன்ற அல்லக்கைகள் கடந்த சில வருடங்களாகவே கொங்கு மண்டலத்தை குறித்து விஷத்தைக் கக்கி வருவதை கவனித்தவர்களுக்கு நான் சொல்ல வருவது புரியும் ..அவர்களைப் பொறுத்தவரை ஒன்று இந்த விஷயத்தை ஒரு கருவியாக வைத்து அரசியல் ஆதாயம் பெற வேண்டும் அதாவது வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் . அல்லது குறைந்தபட்சம் கொங்குமண்டல மக்களை அசிங்கப்படுத்த வேண்டும் இதுதான் அவர்களுடைய திட்டம் ....
250 பெண்கள் அதுவும் கல்லூரிப் பெண்கள் என்கிறார்களே இது எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம்? பொள்ளாச்சி போன்ற ஒரு சிறு நகரத்தில் படிக்கும் கல்லூரி பெண்களை பற்றி இப்படி அவதூறு பரப்பினால் நாளை அந்த பகுதியில் பெண் எடுக்க யாரும் யோசிப்பார்களா மாட்டார்களா? இது அவர்களுக்கு தெரியாதா ? 250 பெண்கள் , 1100 வீடியோக்கள் என்றெல்லாம் சொல்கிறார்களே இதற்கெல்லாம் என்ன ஆதாரம் ?
அப்படி அவர்களிடம் ஏதாவது ஆதாரம் இருந்தால் அதை காவல் துறையிடம் கொடுக்கலாம் .அல்லது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு திரும்பத்திரும்ப மேற்படி குற்றவாளிகளை அதிமுக பாதுகாக்கிறது நடவடிக்கை எடுக்க மாட்டேன் மாட்டேன் என்கிறது என்று மீடியாவில் பிரச்சாரம் செய்வது எந்த வகையில் நியாயம்?
திமுகவின் நோக்கம் இந்தப் பிரச்சினையை வைத்து அரசியல் ஆதாயம் அடைவது தான்.. அதைப் புரிந்து கொள்ளுங்கள்.தங்களின் ஊடக பலத்தைக் கொண்டு அவர்கள் செய்யும் பொய் பிரச்சாரத்திற்கு பலியாகி விடாதீர்கள்....
    

ஊடகப்பொய்களில் ஏமாந்து திசைமாறிவிடாமல் இருக்கப் பழகுவோம்! மெய்ப்பொருள் காண்பதறிவு!  

           

4 comments:

  1. அது தானே...
    நரி வேட்டி கட்டிக் கொண்டு ஓடுகிறதே.. என்று நினைத்தேன்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் துரை செல்வராஜூ சார்!

      காங்கிரஸ் நரி லேசுப்பட்ட நரி இல்லை! வாலறுந்த நரி! வாலறுந்து போனதுதான் அழகு என்று சாதிக்கும் நரி!

      Delete
  2. இதனைப் படிக்கும்போதே (பொள்ளாச்சி செய்திகள், நக்கீரன், கனிமொழி, திமுக) எனக்குத் தோன்றியது இந்தச் செய்தியும் பெய்டு நியூஸ், ஒருவேளை திமுகவே இதுல சம்பந்தப்பட்டிருக்குமோன்னு.

    நக்கீரன் எப்போதும் வாங்கின காசுக்காக எழுதும் பத்திரிகை. அவர்கள் எழுதுவதின் உண்மைத்தன்மை அவர்களே அறிவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. சரவண குமார் தெளிவாகவே இந்தப்பிரச்சினையை திமுக ஊதிப்பெரிதாக்க முயல்வதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!